in ,

முள் பாதை (அத்தியாயம் 4) – பாலாஜி ராம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அத்தியாயம் 1     அத்தியாயம் 2     அத்தியாயம் 3

ஆட்டோவில் காமேஷ் அமர்ந்திருப்பதை பார்த்த செண்பகம் அதிர்ந்து போனாள். அவள் கை விரைத்து போனது. முகத்தில் வியர்க்கிறது. தன் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சோகத்தில் இருந்த அவளது முகத்தில், இப்பொழுது பயமும் சேர்ந்து விட்டது. 

ஆட்டோ புடிக்க சென்ற தன் அக்கா, 15 நிமிடங்கள் ஆகியும் இன்னும் வரவில்லையே என்று செண்பகத்தின் தம்பி தேவாவின் மனது கலங்கியது. 

தன் வீட்டில் இருந்து மெயின் ரோட்டுக்கு போவதற்கு இரண்டு நிமிடங்கள் தான் ஆகும். மெயின் ரோட்டிற்கு அவ்வளவு அருகில் உள்ளது இவர்கள் வீடு. தன் அக்காவை தேடி தேவா வேகமாக வெளியே ஓடி வந்து பார்த்தான். சுற்றும் முற்றும் தேடினான், மெயின் ரோட்டிற்கு சென்று பார்த்தான். எங்கு தேடியும் தன் அக்கா காணவில்லை. ஒரு பக்கம் அப்பாவுக்கு உடல்நிலை சரி இல்லை, மறுபக்கம் தன் அக்கா காணவில்லை என்று அந்த இடத்திலேயே தேம்பி தேம்பி அழுகிறான். 

அவன் நிலைமையை நீங்களும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.  தன் அக்காவை தேடி போவதா? அல்லது தன் அப்பாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு போவதா? என்று நினைக்கும் பொழுது, தன் அக்கா எப்படி இருந்தாலும் வீட்டிற்கு வந்து விடுவாள். அப்பாவை உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகணும் என்று நினைக்கிறான்.

சோகத்தில் புத்தி வேலை செய்யாது என்று சொல்வார்கள். ஆனால், அவனுக்கு நல்லாவே வேலை செஞ்சது. தன் வீட்டிற்குள் வேகமாக ஓடினான் தன் அக்காவின் ஹாண்ட் பேகில் இருந்து ஃபோனை எடுத்தான். 108க்கு கால் செய்தான். தன் வீட்டில் இருந்து அரசு மருத்துவமனை நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. எனவே, பத்து நிமிடங்களில் ஆம்புலன்ஸ் அவனது வீட்டிற்கு முன் வந்து நின்றது.

அவசர ஊர்தியிலிருந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவர் இறங்கினர். தேவாவிடம் அனைத்தும் விசாரித்து அவனது அப்பாவை ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். தேவா தன் அக்காவின் போனை எடுத்துக் கொண்டு, தன் அக்கா வருவாள் என்பதற்காக பூட்டு போடாமல், தாழிட்டு, தன் அப்பாவுடன் ஆம்புலன்ஸில் ஏறி அரசு மருத்துவமனைக்கு சென்றான். 

ஐந்து நிமிடங்களிலேயே ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்தது. இவர்கள் மருத்துவமனைக்கு சென்றதும், மருத்துவர்கள் தேவாவின் அப்பாவை பரிசோதனை செய்தனர். 

“தம்பி உங்க அப்பாக்கு ஒன்னும் இல்ல. நாங்க ஊசி, மருந்து, மாத்திரை எல்லாம் கொடுத்துட்டோம். இன்னும் ஒரு மணி நேரத்துல உங்க அப்பாவா அழைச்சிட்டு நீ வீட்டுக்கு போயிடலாம்” என்று மருத்துவர்கள் தேவாவிடம் கூறினர். 

தேவாக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், தன் அக்காக்கு என்ன ஆயிற்று என்ற பயத்திலேயே இருந்தான். இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பாளா? வீட்டில் யாரும் இல்லை என்று, என்னையும் அப்பாவையும் தேடி வேறு எங்கேனும் சென்றுவிட்டால், என்று தன் அக்காவை நினைத்து கலக்கமுற்றான். 

“வரும்பொழுது ஆம்புலன்ஸில் வந்து விட்டோம், டாக்டரு ஒரு மணி நேரத்துல போயிடலாம்னு சொல்லிட்டாரு. ஆனா, எப்படி போறது கையில காசு இல்ல, போறதுக்கு வண்டி இல்ல” அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், மருத்துவமனைக்கு வெளியே உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருக்கிறான்.

அந்த நேரத்தில்தான் அவன் அக்கா போனிருக்கு, கால் வந்தது. அதில், ‘புவனேஷ் சூப்பர்வைசர்’ என்று தமிழில் பெயர் வந்தது. கால் அட்டென்ட் செய்து காதில் வைத்தான். ‘ஹலோ’ என்று தேவா சொன்னான். 

என் ஆசை காதலி குரலை கேட்கலாம் என்று நினைத்த புவனேஷுக்கு, ஒரு சின்ன பையன் குரல் கேட்டதும் விரக்தி அடைந்தான்.  

செண்பகம் இல்லையா? நீங்க யாரு? என்று புவனேஷ் கேட்டான். 

என் பேரு தேவா. எங்க அக்காதான் செண்பகம் என்று சொல்ல ஆரம்பித்தவன், நடந்த அத்தனையும் கூறி முடித்தான். 

“அண்ணா இப்ப எப்படி வீட்டுக்கு போறதுன்னே தெரியல, கையில காசு கூட இல்ல” என்று அழுதுகிட்டே சொன்னான் தேவா. 

“பயப்படாதே தம்பி, நான் அங்கு வரேன். நான் உன்னையும் உங்க அப்பாவையும்  பத்திரமா வீட்ல விட்டுட்டு போறேன். நீ அங்கயே இரு” என்று போனை வைத்த புவனேஷ் தனது காரை எடுத்துக் கொண்டு, வேகமாக அரசு மருத்துவமனைக்கு வந்தான். 

தேவாவையும் அவன் அப்பாவையும் தன் காரில் அழைத்துக் கொண்டு, செண்பகம் வீட்டை நோக்கி சென்றான். ஐந்து நிமிடங்களில் செண்பகத்தின் வீட்டிற்கு வந்து விட்டார்கள். 

காரிலிருந்து தேவாவும் அவன் அப்பாவும் இறங்கினார்கள். தம்பி உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. நீங்க எங்களுக்கு ரொம்ப உதவி செஞ்சி இருக்கீங்க நன்றி தம்பி, என்று தேவாவின் அப்பா புவனேஷை பார்த்து கூறினார். 

இந்த உதவிக்கெல்லாம் நான் உங்களுக்கு என்ன கைமாறு செய்ய போறேன்னு தெரியல என்று தேவாவின் அப்பா சொல்லும்போது, “உங்க பொண்ண மட்டும் கொடுங்க” என்று மனதிற்குள் நினைத்தான். 

அந்த நேரத்தில், ஏதோ பறி கொடுத்தவள் போல் செண்பகம் அவ்விடத்திற்கு வந்தாள். அவள் கட்டிருந்த சேலை வாடியது போல், அவள் முகமும் வாடி இருந்தது. மை தீட்டும் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. ஏதோ தவறு செய்தவள் போல் ஒரு குற்ற உணர்ச்சியில் அழுதவாறு,  தன் வீட்டை நோக்கி வந்தாள். 

“எங்கம்மா போன இவ்வளவு நேரம் ! உன்ன காணாம தவிச்சு போயிட்டமா” என்று செண்பகத்தை பார்த்து அவள் அப்பா கூறினார். 

செண்பகத்தின் முகம் பீதியில் ஆடியது. தன் மனதிற்குள் உண்மையை மறைத்து, வைத்து பொய்யை சொல்ல ஆரம்பிக்கிறாள். 

“உங்கள தேடி தான் பா நான் இங்கேயும் அங்கேயும் அலைஞ்சுட்டு இருக்கிறேன். தேவா என்ன ஆச்சு? சூப்பர்வைஸர் வந்து இருக்காரு” என்று கேட்டாள். நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னான் தேவா. 

செண்பகம் தன் அப்பாவை பார்த்து, “இப்ப எப்படிப்பா இருக்கு?” என்று கேட்டாள். 

“முன்ன விட இப்ப பரவாலம்மா, இப்ப நல்லாவே நடக்க முடியுது. சுரமும் இல்ல. சூப்பர்வைசர் தம்பிதாம்மா நல்ல சமயத்துல வந்து உதவிச்சு. நீ பேசிட்டு வாமா” என்று சொல்லி, தேவாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றார் செண்பகத்தின் அப்பா.

புவனேஷை பார்த்ததும் அவன் கையைப் பிடித்து குலுங்கி குலுங்கி அழுதாள் செண்பகம். “ஒன்னும் இல்ல செண்பகம் அப்பாக்கு சரியாயிடும் கவலைப்படாதே” என்று ஆறுதல் சொன்னான் புவனேஷ். 

“நான் அதுக்காக அழல சார்”

“வேற எதுக்கு?”

“நான் ஒரு தப்பு செஞ்சிட்டேன் சார்” என்று சொல்லி அழுதாள்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 15) – ரேவதி பாலாஜி

    இது எந்த வகைக்காதல் (சிறுகதை) – மைதிலி ராமையா