in ,

முள் பாதை (அத்தியாயம் 3) – பாலாஜி ராம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அத்தியாயம் 1     அத்தியாயம் 2

செண்பகம் வீட்டிற்கு சென்றதும், புவனேஷ் கொடுத்த சேலையை கையில் வைத்துக்கொண்டு, நாளை கட்டிக்கொண்டு போலாமா இல்லை வேணாமா என்று பலமணி நேரமாக யோசித்துக் கொண்டிருக்கிறாள்.

தன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தால்,  நமக்கு சேலை வாங்கித் தந்திருப்பான் என்று அவன் மீது மேலும் அவளுக்கு அன்பு பெருகியது.

இதெல்லாம் நமக்கு சரியா வருமா? அவன் பணக்காரன், நான் ஏழை. அவன் அதிகாரி,  நான் பணியாள் என்று ஒரு பக்கம் நினைத்தாலும், மறுபக்கம் அவனது நினைவே அவள் இதயத்தில் பொங்கி வழிந்தது.

மறுநாள் விடிந்தது. வழக்கம் போல் தன் வேலைகள் அனைத்தும் செய்து முடித்தாள்.

அன்றைய தினம் அவள் பிறந்தநாள் அல்லவா, அதனால் தன் தந்தையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டாள். காலையிலேயே சுவாமி கும்பிட்டு, புவனேஷ் வாங்கி கொடுத்த சேலையை உடுத்திக் கொண்டு வேலைக்கு சென்றாள் செண்பகம்.

மனதிற்குள் ஆயிரம் ஆசை. குடும்பத்தில் ஆயிரம் கஷ்டம் வந்தாலும், அவளுடைய மனதில் புவனேஷ் நினைவு வந்தால் சொல்லவா வேண்டும் அவளுடைய மகிழ்ச்சிக்கு. .

அன்று சீக்கிரமாகவே வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்றுவிட்டாள் செண்பகம்.  வெகு நேரம் காத்திருக்கிறாள் புவனேஷின் வருகைக்காக, ஆனால் நேரம் பல கடந்தும் புவனேஷ் மட்டும் வரவில்லை.

நான் நேற்று அவரிடம் கோபமாக பேசியதால், என்னைத் தவறாக நினைத்திருப்பாரோ, நான் தான் அவசரப்பட்டுவிட்டேன். அவர் வந்ததும் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், என்று தன் மனதுக்குள்ளே நினைத்தாள்.

அந்த நேரத்தில் வேலைக்கு வந்த புவனேஷ்,  தன்னுடைய சூப்பர்வைசர் அறைக்குள் சென்றான். தன்னிடம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுவார் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாள் செண்பகம்.

மதிய உணவு இடைவேளையும் வந்து விட்டது. ஆனால் சூப்பர்வைசர் அறைக்குள் சென்ற புவனேஷ் மட்டும் வெளியவே வரவில்லை. செண்பகத்திற்கு பலத்த ஏமாற்றம். நான் அப்படி அவரிடம் பேசி இருக்கக் கூடாது. என் மேல தான் தப்பு என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.

மதிய உணவு இடைவேளை முடிந்ததும், செண்பகம் சூப்பர்வைசர் அறைக்கு வெளியே நின்று, உள்ளே வரலாமா சார் என்று கேட்டாள்.

‘ம்ம்ம் வாங்க செண்பகம்’

செண்பகம்,  அவன் வாங்கி கொடுத்த மயில் பச்சை நிற சேலையைக் கட்டிக் கொண்டு, தலையில் மல்லிகையை சூடி பார்ப்பதற்கு மகாலட்சுமி போல் இருந்தாள்.

செண்பகத்தை வச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் புவனேஷ். சில நிமிடங்களில் தன் நிலை அறிந்து, “சொல்லுங்க செண்பகம். எதுக்காக என்ன பார்க்க வந்தீங்க?”

‘இன்னிக்கி,  என் பிறந்தநாள் சார். இந்த சேலையில நான் அழகா இருக்கேனா’ என்று கேட்டாள் செண்பகம்.

“இதை ஏன் என்கிட்ட கேக்குறீங்க? நான் சூப்பர்வைசர், நீங்க எனக்கு கீழ வேலை செய்யும் பணியாள் அவ்வளவுதான்” என்று புவனேஷ் கூறினான்.

செண்பகத்திற்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. “நேத்து நான் உங்ககிட்ட அப்படி பேசிருக்க கூடாது மன்னிச்சிடுங்க சார்”

“அதை நான் நேத்தே மறந்துட்டேன். வேலை நேரத்தில் இப்படி வந்து பேசக்கூடாது போய் வேலையை பாருங்க” என்றான் புவனேஷ்.

செண்பகம் முகம் மாறியது. அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். தாங்க முடியாத சோகம். என்ன செய்றது தன் வினை தன்னை சுடும்.

“இதையெல்லாம் என்னை சொல்லனும். பொல்லாத  ஆசையை மனசுக்குள்ள வளர்த்துகிட்டா இப்படி தான் ஆகும். “

இந்த காதலும் வேண்டா கத்தரிக்காவும் வேண்டா, நான் உண்டு, என் குடும்பம் உண்டு என்று இருக்கனும். என் அப்பா தம்பி தவிர யாருக்கும் என் மனசுல இடம் தர கூடாது.  என்று மனசுக்குள்ளே நினைத்தாள்.

புவனேஷ்க்கு ஒரே குஷி. தான் வாங்கி தந்த சேலையை அவள் கட்டி கொண்டு வந்தது, அவளே தன்னிடம் பேச வந்தது. இத வச்சி பார்க்கும்போது  அவள் மனசில் நான் இருக்கிறேன் என்று தான் அர்த்தம்.

இன்று மாலை அவள் வீட்டிற்கு செல்லும் போது, பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி விடலாம் என்று நினைத்தான்.

வேலை நேரம் முடியும் மணி அடித்தது. வேலை செய்யும் அனைவரும் தங்களது வீட்டிற்கு களைந்து சென்றனர். செண்பகமும் தன் வீட்டிற்கு  கிளம்பினாள்.

அப்போது செண்பகம்… செண்பகம்… என்று அவள் பின்னால் இருந்து ஒரு குரல், திரும்பிப் பார்த்தாள். அங்கே புவனேஷ் நின்று கொண்டிருந்தான். வேகமாக செண்பகத்திடம் வந்தான் புவனேஷ்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செண்பகம் என்று கூறினான். “தேங்க்யூ சார்” என்று சொல்லி, அடுத்த கணமே அங்கிருந்து புறப்பட்டு விட்டாள்.

நில்லுங்க செண்பகம்.. என்று சொல்லி அவள் பின்னே சென்றான். “சொல்லுங்க சார்”

“இந்த சேலையில நீங்க சினிமா நடிகை போல இருக்கீங்க” என்றான்.

இதை கேட்டதும், இனிமேல், இவனிடம் பேசவே கூடாது என்று வைராக்கியத்துடன் இருந்த செண்பகத்தின் மனசு உருகியது. முறைத்துக் கொண்டிருந்த அவளது உதடுகள் சிரிக்க தொடங்கியது.

“நான் மதியம் பேசியது நீங்க தப்பா நினைச்சுக்க கூடாது.”  என்றான் புவனேஷ்.

“நான் அதை அப்பவே மறந்துட்டேன் சார். சரிங்க சார் எனக்கு நேரம் ஆகுது நான் போறேன்” என்று சொல்லி வேகமாக சென்றாள் செண்பகம். செண்பகம் போன திசையையே பார்த்துக் கொண்டிருக்கிறான் புவனேஷ்.

செண்பகத்தின் மனது அன்று மகிழ்ச்சியாக இருந்தது. இனம் புரியாத சந்தோஷத்தில், தன் வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள்.

அரை மணி நேரத்தில் தன் வீட்டை அடைந்தாள். வழக்கமாக அவள் வேலை விட்டு தன் வீட்டிற்குள் செல்லும் போது அவளுடைய அப்பா, அவரால் முடிந்த ஏதேனும் ஒரு வேலையை செய்து கொண்டிருப்பார். ஆனால் இன்று அவர் படுத்துக்கொண்டு இருக்கிறார்.

செண்பகத்தின் நெஞ்சு பதறியது தன் அப்பாவின் அருகே சென்றாள். அவர் உடம்பில் கை வைத்து பார்க்கிறாள், அனல் போன்று கொதிக்கிறது.

அப்பா என்ன ஆச்சு? எப்போதிலிருந்து காய்ச்சல்? இப்படி அனலா கொதிக்குதே? என்று அப்பாவிடம் கேட்டாள். அவருடைய அப்பா பேசுற நிலைமையில் கூட இல்லை. ஏனென்றால் அவ்வளவு காய்ச்சல் உச்சி முதல் பாதம் வரை கொதிக்கிறது.

செண்பகம்,  தன் தம்பியை பார்த்து அப்பாவ உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகனும். வீட்டை பார்த்துக்க. நான் போய் ஒரு ஆட்டோவ புடிச்சுட்டு வரேன், என்று கூறி வெளியே ஓடினாள்.

மெயின் ரோட்டுக்கு வந்து, ஆட்டோ ஏதாவது வருகிறதா என்று பார்த்தாள். ஒரு ஆட்டோ வந்தது  கையை போட்டாள், அந்த ஆட்டோ நிற்காமல் போய்விட்டது. மீண்டும் ஒரு ஆட்டோ வந்தது,  கையை போட்டாள் ஆட்டோ நின்றது.

ஐயா,  ஆஸ்பத்திரி வரைக்கும் வர முடியுமா என்று சொன்னபடி ஆட்டக்காரனை பார்த்த செண்பகம், ஆடி போய் நின்றாள். இரண்டு நாட்களுக்கு முன்னாடி செண்பகத்தை ஆட்டோல கடத்திட்டு போனானே காமேஷ், அவன் தான் அந்த ஆட்டோல  இருக்கிறான்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 12) – ஜெயலக்ஷ்மி

    கல்யாணம் வேண்டாம் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி