in ,

முள் பாதை (அத்தியாயம் 1) – பாலாஜி ராம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

இரவு 7:00 மணி இருக்கும். ஒரு பெண், காலில்  செருப்பு அணியாமல் வேகமாக நடந்து செல்கின்றாள். அவளது இடது கையில் ஒரு அறுந்து போன செருப்பு ஒன்று இருக்கிறது.  அவளுக்கு 23 வயது இருக்கக்கூடும். அவளைப் பார்த்தாலே சொல்லிவிடலாம் வசதியில்லாதவள் என்று. அவள் தோற்றத்தில் ஏழையாக இருக்கலாம், ஆனால் மனதளவில் பணக்காரி.

தன் வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைப் பார்க்கிறாள். ஆட்டோவில் சென்றால், பத்து ரூபாய் செலவாகும். செல்வதற்கு பத்து,  வருவதற்கு பத்து என ஒரு நாளைக்கு 20 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் வருவதற்கு கூட, அந்த கடவுள் கருணை செய்யல.

ஏனெனில் வீட்டில் வறுமை தலைவிரித்து ஆடுகின்றது. அதனால் தான் அவள் நடந்தே செல்கின்றாள்.

இன்றைய தினம் பார்த்து அவள் செருப்பும் அறுந்து போச்சு.

தான் வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து, அரை கிலோமீட்டர் நடந்து வந்துவிட்டாள். இன்னும் அரை கிலோமீட்டர் தான் 15 நிமிடங்களில் வீட்டிற்கு சென்றிடுவாள்.

“செருப்பு இல்லாம நாளைக்கு வேலைக்கு போனா மத்தவங்க  என்னை பார்த்து சிரிப்பாங்க”

“அதனால, நாளைக்கு ஒரு ஐம்பது ரூபாய் செருப்பாச்சும் வாங்கி போட்டுட்டு போனோம்”

என்று தன் மனதில் நினைத்துக்கொண்டு செல்கிறாள். அப்போது, அவளுக்கு பின்னாடி வேகமாக வந்த ஆட்டோ அவள் அருகில் வந்து நிற்கின்றது.

“எங்க போகனும்”

“இல்ல நீங்க போங்க”

“வாமா நீ எங்க போகணுமோ, அங்க உன்ன கூட்டிட்டு போய் விட்டுறேன்.”

“வேண்டாம் அண்ணா, நீங்க போங்க நான் நடந்தே வீட்டுக்கு போயிடுவேன்”

அந்த ஆட்டக்காரனுக்கு 30 வயசு இருக்கும்.

“வயசு பொண்ணு இந்த நேரத்துல தனியா போக கூடாதுமா. நீ காசு  தரத் தேவையில்லை, நீ எங்க போகணும்னு சொல்லு நான் கூட்டிட்டு போய் விட்டுறேன்.” என்று சொன்னான்.

இவள் மனதுக்குள் நினைகிறாள், சீக்கிரமா வீட்டுக்கு போனா தான், சோறு பொங்க முடியும். காசு கூட வேணானு சொல்றாரு. தம்பி வேற பசியில இருப்பான், அதனால சீக்கிரமா வீட்டுக்கு போகலாம்னு நினைக்கிறாள்.

இவள் ஆட்டோவில் ஏறி உட்காருகிறாள்.  ஆட்டோ மெதுவாக செல்கிறது. அந்த சாலையின் கடைகளை எல்லாம் கடந்து சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் செல்கிறது. முன்னர் மெதுவாக சென்ற ஆட்டோ, இப்போது வேகமாக செல்கிறது.

அண்ணா இங்கதா நான் இறங்கணும், நிறுத்திடுங்க. என்று அவள் கூறினாள். ஆனால்,  ஆட்டோக்காரன் வேகமாக ஆட்டோவை ஓட்டி செல்கிறான். இதை பார்த்ததும் அவள் மனதுக்குள் பயம் துளிர் விடுகின்றது. நிறுத்துங்க..நிறுத்துங்க..என்று கத்தினாள். இவள் பேச்சை  ஆட்டோக்காரன் கேட்பதாக இல்லை.

அவள் முகத்திலிருந்து வியர்வை சுரக்கிறது. உடல் நடுங்குகிறது. காப்பாத்துங்க. . காப்பாத்துங்க..என்று கத்தி அழுகிறாள்.

என்ன எங்கடா கூட்டிட்டு போற.. நிறுத்துட ஆட்டோவ..  என்று சொல்லி, தன் கையில் வைத்திருந்த அறுந்து போன செருப்பை கொண்டு ஆட்டக்காரனை அடிக்கிறாள். அவன் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆட்டோவை வேகமாக ஓட்டி செல்கிறான்.

மாரியம்மா தாயே ! உனக்கு கண் இல்லையா? என்று கதறி கதறி அழுகிறாள்.  அவள் குரலை கேட்பதற்கு, அங்கு ஒருவரும் இல்லை. தனியாக மாட்டிக் கொண்டாள்.

தன் உயிர் போனாலும் பரவாயில்லை, தன் மானம் போகக்கூடாது என்று எண்ணி ஓடும் ஆட்டோவில் இருந்து குதிக்கிறாள்.

அந்த ஆட்டோ தார் ரோட்டை கடந்து, மண்ரோடு வழியாக வந்ததால், அவளுக்கு அதிகமாக அடி படவில்லை. இருந்தாலும், அவளுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தை பொருட்படுத்தாமல், இவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று எண்ணி வேகமாக ஓடுகிறாள்.

இதை பார்த்த ஆட்டோக்காரன்,  ஆட்டோவை நிறுத்திவிட்டு. அவளை விரட்டி பின்னாடி ஓடுகிறான். அவன், தன் பின்னாடி விரட்டி வருவதை பார்த்த அவள், இன்னும் வேகமாக ஓட ஆரம்பிக்கிறாள். ஆனால், ஆட்டோக்காரன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. வேகமாக வந்த ஆட்டக்காரன், எட்டி அவளது தலைமுடியை பிடித்தான்.

ஐயோ. . அம்மா..யாராவது இருக்கிறீர்களா? காப்பாத்துங்க..காப்பாத்துங்க.. என்று கத்தி அழுகிறாள்.

இந்த காமேஷ்கிட்டயிருந்து, யாரும் தப்பிக்க முடியாது, என்று சொல்லி அந்தப் பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்துக்கொண்டு செல்கிறான்.

அந்தப் பெண் தன் மனதிற்குள், தைரியத்தை வர வைத்துக் கொள்கிறாள். என்ன ஆனாலும் சரி இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.

அவள் முகம் சிவக்கின்றது, கண் துடிக்கின்றது. அவள்,   கையை முறுக்கி, வேகமாக அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து  விடுகிறாள்.

அவன் எதிர்பார்க்காத நேரத்தில் தாக்கியதால், இரண்டடிக்கு  அப்பால் போய் விழுந்தான்.

“பார்வதி பத்திரகாளியாய் உருவெடுக்கிறாள்”

கீழே விழுந்த அவன், எழ முயற்சி செய்கிறான். அதற்குள், இவள் வேகமாக ஓடி வந்து அவன்  நெஞ்சில் எட்டி உதைக்கின்றாள்.

அந்த சாலையின் ஓரத்தில் கிடந்த தென்னை மட்டையை எடுத்து, பலமாக தாக்குகிறாள்.

தங்கைக்கு நிகரான பெண்ணை, தவறாக நினைத்து விரட்டி வந்ததால், அவனது இரண்டு கால்களையும் உடைக்கிறாள்.

பெண்ணை போற்றி வணங்க வேண்டிய கரம், பெண்ணை இழிவுபடுத்த நினைத்து,  அவளது தலைமுடியை பிடித்ததால், அவனது இரண்டு கைகளையும் உடைக்கிறாள்.

பெண் என்பவள்,  நினைத்தால் விலைக்கு வாங்கும் விளையாட்டு பொம்மை அல்ல. இந்த பாரத நாட்டின் பொக்கிஷ பெருமை.  ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்று நிரூபித்த இந்த வீரப்பெண், தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறாள்.

நடந்ததை நினைத்து போகும் வழியிலேயே, அழுது கொண்டு செல்கின்றாள்.  பத்து நிமிடங்களில் தன் வீட்டை அடைந்தாள். வேலைக்கு சென்ற தன் அக்கா, இன்னும் வீடு திரும்பவில்லை என்று வீட்டிற்கு வெளியில் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருக்கிறான், அவளது தம்பி.

அக்கா எப்பொழுது வருவாள் என்று வாசலிலேயே, விழி மேல் விழி வைத்து காத்திருக்கிறான். தூரத்தில்  தன் அக்கா வருவதை பார்த்த அவன் வேகமாக ஓடி, தன் அக்காவை அணைத்துக் கொள்கிறான். தன் தம்பியை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்கின்றாள், செண்பகம்.

செண்பகத்தின் தம்பியின் பெயர் தேவா. தேவா பிறந்த மூன்றாவது மாதத்தில், அவளது தாய் இறந்து விட்டாள். தேவா தன் வீட்டிற்கு அருகில் உள்ள, அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.

செண்பகத்தின் அப்பாவிற்கு, போன வருடம் ஏற்பட்ட விபத்தில் ஒரு கால் இழந்துவிட்டார். அதனால் வேலை செய்யவும் முடியவில்லை. இந்த நிலையில் தான், குடும்ப பொறுப்பை தலையில் ஏற்க்கின்றாள் செண்பகம். இவள், வேலைக்கு செல்வதால்தான், அவள் குடும்பமே  வாழ்கிறது.

வீட்டிற்குள் வந்த செண்பகம், தன் தம்பியும், அப்பாவும் பசியோடு இருப்பார்கள் என்று எண்ணி,  வேகமாக உணவு சமைக்க ஆரம்பிக்கிறாள்.

அடுப்பு மூட்டி பானையில் அரிசி போட்டாள். பானையிலிருந்து சோற்று நீர் பொங்கி வழிவது போல், அவள் கண்ணிலிருந்து  கண்ணீர் பொங்கி வழிகிறது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 36) – தி.வள்ளி, திருநெல்வேலி 

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 16) – முகில் தினகரன், கோவை