in ,

மன்னிக்க வேண்டுகிறேன் (பகுதி 2) – சுஶ்ரீ

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1

நான் லலித்குமார் மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ், சக்தி மெடிகல் அண்ட் டென்டல் காலேஜ்ல படிக்கறேன். என் ஊரு விருதுநகர், மதுரை மெடிகல்ல முட்டி மோதி பாத்துட்டு கிடைக்காம இங்கே வந்து சேந்தேன். ஓரளவு வசதியான குடும்பம்தான் என்து. அப்பா பிசினஸ், அம்மா ஹவுஸ் வொய்ஃப், தம்பி பொடியன் ஊர்ல ஏழாவது படிக்கறான்.

நான் இதுவரை படிப்புல டாப்பர். மெடிகல் காலேஜ்ல கூட எனக்கு நல்ல பேரு. டிஸ்டிங்ஷனுக்கு குறைஞ்சு மார்க் எடுத்ததில்லை. எங்க புரொபசர்லாம் கூட லலித் லலித்னு தனி கவனம் கொடுத்து சொல்லிக் கொடுப்பாங்க. எந்நேரமும் புஸ்தகம் கையுமா இருப்பேன்.

எங்க ஹாஸ்டலுக்கு பக்கத்துல சின்ன ஓடை அதை ஒட்டி நாலஞ்சு சிமென்ட் பெஞ்ச் இருக்கும். அதுல உக்காந்து ஏகாந்தமா படிக்க பிடிக்கும். அன்னிக்கும் அப்படித்தான் உக்காந்திருந்தேன் எங்க காலேஜ்ல நியூ அட்மிஷன் பசங்களோட குடும்பமும் சேர்ந்து சாரிசாரியா திருவிழா கூட்டம் மாதிரி.

ஏதேச்சையா நிமிந்து பாத்தப்ப இளம்நீல சுடிதார்ல அந்த பொண்ணை பாத்தேன், அவ குடும்பத்தோட கேர்ல்ஸ் ஹாஸ்டல் பக்கம் போயிட்டு இருந்தா. அந்த பெண்ணின் கண்ணில் படபடப்பு, ஆர்வம், சந்தோஷம், பயம் எல்லாத்தையும் அந்த நிமிஷத்துல பாத்தேன். அவ என் வாழ்க்கையையே மாத்தப் போறானு அப்ப தெரியலை.

மூணு வாரம் எப்பவும் போலதான் போச்சு. ஹாஸ்டல்ல இருந்து காலேஜ் கொஞ்சம் தூரம்தான், காலைல 8.30 மணிக்கு பஸ் பிக் அப் பண்ணி கூட்டிண்டு போகும், பஸ் மிஸ் பண்ணிட்டா நடந்தும் போகலாம் 20,25 நிமிஷ நடை. அன்னிக்கு நான் ரூமை விட்டு கிளம்பறப்பவே லேட், இன்னிக்கு நடைதான்னு நினைச்சிட்டே கீழே வந்தேன், கேர்ல்ஸ் ஹாஸ்டல் பக்கம் இருந்து அந்தப் பெண் வேக வேகமா நடந்து வந்தா.

என்னைப் பாத்ததும் தயக்கமா நடந்து வந்தா,பஸ்ஸை மிஸ் பண்ணிட்டா போல அவளும். நான் புன்னகையுடன் “என்ன பஸ் விட்டுட்டீங்களா, வாங்க நடப்போம்.நடைப் பயிற்சி நல்லதுதான் உடம்பு ஃபிட்டாகும்”

அவ ஒண்ணும் அப்படி குண்டு இல்லை கொஞ்சம் பூசினாப்பல இருப்பா. நான் அவளை குண்டுனு     கேலி செய்றதா நினைச்சிட்டா.

“ நான் இது வரை பஸ் மிஸ் பண்ணினதே இல்லை இன்னிக்கு பாத்ரூம்ல சரியா தண்ணி வரலை.     நான் ரொம்ப குண்டாவா இருக்கேன்?”

இப்ப நாங்க காலேஜ் நோக்கி நடந்தோம்.” அப்படி சொல்லலைங்க, பொதுவா சொன்னேன்                 நடந்தா நல்லதுனு”

“ நீங்க எந்த வருஷம், இதுக்கு முன்னே பாத்ததில்லையே”

“ என் பேர் லலித்குமார், 3 வது வருஷம்”

“ நான் மீனலோசனி 3 வாரம்தான் ஆச்சு சேந்து”

பொதுவா பேசிட்டே நடந்தோம்.ஆனா அவளோட அழகு முகம் என் மனசுல அச்சா பதிஞ்சது.

நாட்கள் வேகமாக ஓடிச்சு.காலேஜ் போகும் போது வரும் போது அவளை பாப்பேன் சின்ன அறிமுகப் புன்முறுவல், ஹாய், ஹலோ அவ்வளவுதான்.முதல்ல எதேச்சையா பாத்தது இப்ப அவளுக்காக காத்திருந்து பாத்தேன், வலியப் போய் எதாவது பேசினேன். அவ கிட்ட பெரிய மாறுதல் இல்லை      பொதுவா பேசுவா ஒரு நாள் லீவுன்னாலும் சென்னைக்கு ஓடிடுவா.எனக்கு கஷ்டமா இருக்கும் பாக்கலைன்னா.

முத தடவையா அந்த ரிவிஷன் டெஸ்ட்ல எல்லா பேப்பர்லயும் என் மார்க் ஆவரேஜ். புரொபசர்களுக்கே ஆச்சரியம், என்ன ஆச்சு லலித் பேப்பர் சரியா எழுதலை, உடம்பு சரியில்லையானு கேட்டாங்க.

இப்ப லெக்சர்ல கவனம் குறைந்தது மனசுல மீனு நிறைஞ்சு வழிஞ்சா. இது ஒருதலைக் காதல்தான்,ஆனா கண்டிப்பா மீனுதான் என் மனைவி எப்படினு இப்ப தெரியலை. லேப்ல, ரிவிஷன் பேப்பர்ல எல்லாம் என் பெர்பார்மன்ஸ் இறங்கிட்டே போச்சு. படிப்புல கவனம் செலுத்த முடியலை.

3 வது வருட இறுதி தேர்வு நெருங்குகிறது.எனக்கு கண்ணை கட்டி காட்ல விட்ட மாதிரி இருக்கு. ஒண்ணும் மூளைல ஏறலை. என்ன பண்றதுனு யோசிச்சேன். அந்த மீனலோசனி கிட்ட மனசுல உள்ளதை சொல்லிடறதுனு தீர்மானிச்சேன். அந்த சனிக்கிழமை அவ வீட்டுக்கு சென்னை புறப்படறப்ப   பின்னாலயே போனேன்.

“என்ன லலித் நீயும் ஊருக்கு போறயானு “ கேட்டா

எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை“சும்மா சென்னை வரை உன் கூட வரலாம்னு”

“ ஓ வீட்டுக்கே வாயேன், என் பேரண்ட்ஸ், தம்பி எல்லோரும் நல்லா பழகுவாங்க”

“ பஸ்ல பக்கம் பக்கம் உக்காந்தது ஒரு கிளர்ச்சியை கொடுத்தது. முதலில் பத்து நிமிஷம் பேசலை, அப்பறம் மெதுவா அவள் கையை என் கையில் எடுத்தேன்”

அவள் சட்னு கையை உறுவிக் கொண்டு என் முகத்தை பார்த்தாள்.” என்ன பரிட்சை டென்ஷனா? என்னாச்சு”

என் குரல் குழைந்தது,” மீனு மீனு நான் உன்னை விரும்பறேன், என்னை கல்யாணம் பண்ணிப்பயா”

அவள்,” பிளீஸ் இப்படிப் பேசி நம்ம நட்பை கொச்சைப் படுத்தாதே. உன் கூடவே படிக்கற 2 பசங்க நீ இப்ப சொன்னதை மூணு மாசம் முன்னாலயே சொல்லிட்டாங்க. நான் படிச்சு டாக்டராகணும்னு காலேஜ்ல சேந்திருக்கேன். காதல் பண்ண இல்லை.என் பேரண்ட்ஸ் என்னை டாக்டராக்கி பாக்க எத்தனையோ தியாகம் பண்ணி படிக்க வைக்கறாங்க,உன் பேரண்ட்ஸ்ஸும்தான் ,அவங்க நம்பிக்கையை காப்பாத்தறது நம்ம கடமை. சாரி இனிமே இந்த எண்ணத்தோட என் கிட்ட பழக வேண்டாம்.”

 அடுத்த ஸ்டாப்ல பஸ் நிக்கறப்ப , “ சாரி மீனலோசனி” சொல்லிட்டு இறங்கிட்டேன்.திரும்ப நடந்து நடந்து நடந்து என் ஹாஸ்டல் ரூம்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கருங்கல் மனசும்… பூவானதே! (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 1) – வைஷ்ணவி