in ,

கவிதை எழுதுங்கள் !! (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

எழுதுங்கள்  எழுதுங்கள்  கவிதை  யொன்றை

          எவருக்கோ  என்றோநல்  பயனை  நல்கும்

அழுகின்ற  ஒருவர்தம்  கண்து  டைத்தே

          அக்கவிதை  ஆதரவாய்  அணைக்க  லாமே !

விழுந்திட்ட   ஒருவர்தம்  மனத்தைத்  தேற்றி

          வீறுகொண்டு  எழுவதற்குத்  தூண்ட  லாமே

பழுத்தயிலை  போல்துயரில்  விழுந்த  வர்க்குப்

          பசுந்துளிராய்  நம்பிக்கை  ஊட்ட  லாமே !

 

தோல்வியிலே  துவண்டவனின்  தோளைத்  தட்டித்

          தொடர்வெற்றி  வருமென்று  சொல்ல  லாமே

கால்நடுங்கி  அச்சத்தில்  அமர்ந்தோர்  நெஞ்சுள்

          கால்தூக்கும்  துணிவுதனை  எற்ற  லாமே !

கோல்பிடித்து  நடக்கின்ற  முதிய  வர்க்குக்

          கோல்போல  உறுதுணையாய்  அமைய  லாமே

நாள்கொல்லும்  தனிமையிலே  தவிப்ப  வர்க்கு

          நறவுபோல  பேச்சுதுணை  யாக  லாமே !

 

அன்பில்லார்  நெஞ்சுள்ளும்  மனித  நேய

          அருங்கருணை  பிறக்கவைக்க  முளைய  லாமே

கன்னல்சொல்   விடுத்துவேம்பாய்ப்  பேசு  வோரைக்

          கனியவைக்கும்  மந்திரச்சொல்  லாக  லாமே !

அன்புகாட்டி  மறுத்திட்ட   காதல்  நோயின்

          அன்பர்க்கு  மருந்தாக   அமைய  லாமே

நன்றாக  எழுதுங்கள்  கவிதை  யொன்றை

          நாட்டோர்க்கு  நலம்பயக்கும்  கவிதை  யொன்றை !

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மங்களாவின் புதுப்புடவை (சிறுகதை) – பவானி உமாசங்கர்

    உயிர்க்கொல்லி (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்