in ,

கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 14) – ஜெயலக்ஷ்மி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13

“அது அவரோட இயற்பெயர்“ எனக் கூறினார்.

அந்தப் பெண்களிடம் கேட்ட போது தனது தந்தை ரிக்‌ஷா ஓட்டுவதாகத் தெரிவித்தனர். ஆனால், இந்தம்மாவோ ‘கூலித் தொழிலாளி’ எனக் கூறுகிறார். அதற்கு மேல் ஏதாவது கேட்டால் மொழிபெயர்ப்பாளர் மூலம் ஹிந்தியிலேயே கேட்கப்பட்டபோதும், தனக்கு ‘மொழி புரியவில்லை’ எனக் கூறி சமாளித்தார்.

“எனக்கு உதவி செய்யத்தான் மேடம் என் மகள்களுக்கு பாதுகாப்பு கொடுத்தாங்க, எனக்கு கால் உடைந்தபோதும் (புடவையைத் தூக்கி காலைக் காட்டினார்), எனது கணவரின் மருத்துவ செலவிற்கும், தேவைப்படும் போதெல்லாம் மேடம்தான் பணம் தந்தாங்க“ என்றார் திரும்பவும்.

“இந்தம்மா அவங்க சொல்லிக் கொடுத்ததையே திரும்பத் திரும்ப சொல்லுது. இல்லண்ணா, புரியலன்னு ஆக்ட் பண்ணுது”

அவரைச் சிறிது நேரம் ‘வெளியே அமருங்கள்’ என அனுப்பிவிட்டு, “அந்த ஜண்டா… வை கூப்பிடுங்க விசாரிப்போம்“ என்றார் கோட்டாட்சியர் ஜண்டா உள்ளே வந்தார்.

“உங்களுக்கும், அந்த அம்மாவுக்கும் என்ன உறவு?” என்று ஆங்கிலத்தில் கேட்டார் கோட்டாட்சியர்

“நான் அவர்கள் கணவரின் அண்ணன்“ என்றார் ஜண்டா.

“அந்த அம்மா அவர்களது அண்ணன் என்றல்லவா கூறினார்?” எனக் கேட்டாள் நித்யா.

“அது… மொழி புரியாமல் கூறியிருப்பார்“ என்றார் ஜண்டா.

“அது சரி, அவர்களுக்கு எத்தனை குழந்தைகள்?“ என்றார் கோட்டாட்சியர்.

“நா…ன்கு குழந்தைகள்“ என்றார் ஜண்டா.

“ஆறு என்றல்லவா அந்த அம்மா கூறினார்?“ என்றார் காவல் ஆய்வாளர்.

“அது இரண்டு குழந்தைகளை முதலிலேயே வெளியூருக்கு அனுப்பிவிட்டதால் தெரியவில்லை” என்றார் ஜண்டா.

“தாங்கள் அவரது கணவனின் சகோதரர் தானே?“ என்று கேட்டார் கோட்டாட்சியர்.

“ஆமாம்“ என்றார் ஜண்டா..

“உங்கள் தம்பிக்கு எத்தனை குழந்தைகள் என்று தெரியவில்லையா?“ என்று கேட்டார் கோட்டாட்சியர்.

“மறந்து விட்டேன்“ என்றார் ஜண்டா.

“சரி, நீங்களும் அந்த ஊரில்தானே இருக்கிறீர்கள்?“ என்று கேட்டாள் நித்யா.

“ஆமாம்“ என்றார் ஜண்டா.

“உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?“ என்று கேட்டாள்.

“இரண்டு மகள்கள்“ என்றார் ஜண்டா.

“உங்க மகள்களுக்கு பாதுகாப்பா இருக்கிற ஊரில் அந்த தம்பி பெண்களுக்கு மட்டும் ஏன்  பாதுகாப்பு இல்லை?“ என்று கேட்டாள் நித்யா.

“அது… எனக்குத் தெரியவில்லை. நான் வேறு இடத்தில் இருக்கிறேன்“ என்றார் ஜண்டா..

“நீங்கள் எப்படி சென்னைக்கு வந்தீர்கள்? “ என்று கேட்டார் கோட்டாட்சியர்.

“ஃபிளைட்டில் வந்தோம்“ என்றார் ஜண்டா.

“டிரெயினில் வருவதாக அல்லவா கூறினார்கள்?” என்று கேட்டாள் நித்யா.

“குழந்தைகளை கூட்டிப் போய்விட்டதால், சீக்கிரம் பார்க்க வேண்டி வந்தோம்“ என்றார் ஜண்டா.

“சரி, உங்கள் பயணச்சீட்டுக்களை காண்பியுங்கள்“ என்று கேட்டார் கோட்டாட்சியர்.

அவரது அலைபேசியை எடுத்து அவரது விமான பயணச்சீட்டைக் காட்டினார் ஜண்டா. அதில் அவர் மட்டுமே தனியாக பயணம் செய்தது தெரியவந்ததால், “அந்த அம்மாவின் பயணச்சீட்டு எங்கே?“ எனக் கேட்டார் கோட்டாட்சியர்.

பிரபலத்தின் மேலாளர் மூலம் அனுப்ப சொல்வதாக தெரிவித்துவிட்டு, அலைபேசியில் பேசினார் ஜண்டா.

சில நிமிடங்களில் அந்த அம்மாவின் பயணச்சீட்டு, ஜண்டாவின் அலைபேசிக்கு அனுப்பப்பட்டு, கோட்டாட்சியரிடம் காட்டப்பட்டது.  அவர் முகத்தில் அதிர்வலைகள்!

கோட்டாட்சியர் அதை நித்யாவிடம் காட்டினார்.  “என்ன மேடம் இது? அந்தம்மா இவர தன்னோட அண்ணன்னு சொன்னாங்க, இவர் அவங்க கணவரோட அண்ணன்னு சொன்னார். அவங்களுக்கு எத்தன குழந்தைங்கனு கூட இவருக்குத் தெரியல. அதான் போச்சுனு பாத்தா, அந்தம்மாவுக்கு மொழி தெரியாதுன்னு கூட வந்தேன்னு சொன்னார். இப்போ இவரு தனியா டெல்லியிலிருந்து வந்திருக்கார்.

அந்தம்மா ஷஹானாஸ்ங்கறவங்க கூட மும்பையிலிருந்து வந்திருக்காங்க. அப்போ அந்த ஷஹானாஸ் யாரு? இவரு சொல்றதிலிருந்து, இவருக்கு அந்தம்மா குடும்பத்த பத்தி எதுவும் தெரியல. அந்தம்மாவுக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இருக்கிறா மாதிரி தெரியல மேடம்.  இவர் மொபைல முழுசா செக் பண்ணனும் மேடம்” என்றாள் நித்யா.

அதை ஆமோதித்த கோட்டாட்சியரும் அந்த நபரின் அலைபேசியை மறுபடியும் திறந்து தருமாறு கோரினார். ஆனால், அந்த நபர் தொலைபேசியைத் தர மறுத்து, ஜிப்பா பாக்கெட்டில் வைக்க முனைந்தார்.

காவல் ஆய்வாளர் அவர் கையைப் பிடித்து அலைபேசியை பறித்தார்.  மேலும், ”ஒழுங்கா திறந்து கொடுத்தா இங்கருந்து வெளில போலாம், இல்லன்னா இங்கேயேதான் இருக்கனும்” என்றார்.

ஜண்டா அலைபேசியை திறந்து கொடுத்தார்.  அவருடைய வாட்ஸ்அப் செயலியை திறந்து பார்த்தவர்களுக்கு, மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

பிரபலம் மும்பையில் வசிப்பதாகச் சொன்ன அவருடைய தாயாரின் பெயலிரிருந்த பகிர்வில் கீழ்கண்ட திடுக்கிடும் தகவல்கள் ஜண்டாவிற்கு பகிரப்பட்டிருந்தது.

  • ஐந்து நாட்களுக்கு முன் தேசிய புலனாய்வு முகமையால் சர்வதேச பயங்கரவாதி என்று சொல்லப்பட்ட ஒருவரின் கூட்டாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பிரபலத்தின் தாயார் வீடும் ஒன்று. இதை ஒரு பெண் டிவிட்டரில் பதிவிட்டிருந்தது. அந்தப் பதிவை பிரபலத்தின் தாயார் ஜண்டாவிற்கு அனுப்பியிருக்கிறார்.
  • ஒரு வீடியோ காட்சி. அதில் ஒரு இளம் பெண் அழுது கொண்டிருக்கிறாள்.  யாரோ ஒரு முரட்டுப் பெண்மணியின் குரல் அவளை பிரபலத்தின் தாயார் வீட்டிலிருந்து பணத்தை திருடிவிட்டதாகவும், திருடிய பணத்தை தன் தாயாருக்கு கொடுத்து விட்டதாகவும், ஒத்துக்கொள்ளும்படி மிரட்டுகிறது.
  • பிரபலத்தின் தாயாரும் இவர்கள் சென்னை வந்த அன்று, சென்னைக்கு வந்ததாகத் தெரிவிக்கும் விமான பயணச்சீட்டு.
  • சிறுமிகளை கூட்டி வந்ததாகச் சொல்லப்பட்ட ஷப்னம் என்ற பெண் சிறுமிகளின் தாயார் என்று சொல்லப்பட்டவரின் ஆதார் அட்டையையும், அவரை கூட்டி வந்த ஷகனாஸ் என்ற பெண்ணின் ஆதார் அட்டையையும் ஜண்டாவுக்கு அனுப்பியுள்ளார்.  ஜண்டாவின் புகைப்படத்தை சிறுமிகளின் தாயாரைக் கூட்டி வந்த ஷகனஸுக்கு அனுப்பியுள்ளார்.
  • இவர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில்தான் சந்தித்துள்ளனர்.
  • பிரபலத்தின் தாயார் என்று சொல்லப்பட்டவரது கணவரின் பெயர் டிவிட்டர் பதிவில் வேறாகவும் பிரபலத்தின் ஆதார் அட்டையில் தந்தை பெயர் வேறாகவும் இருந்தது!
  • இரண்டு போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்) வழக்குகளின் குற்ற எண்களும் பிரபலத்தின் தாயாரால் பகிரப்பட்டிருந்தது.

“இது பயங்கரமான கேசா இருக்கும் போல மேடம்.  இண்டர்நேஷ்னல் பயங்கரவாதி லெவல்ல போயிட்டிருக்கு. பிரபலத்தின் அம்மான்னு சொன்னவங்க அவங்களோட உண்மையான அம்மாவான்னு தெரியல. அந்த வீடியோல இருக்கிற பொண்ணு யாருண்ணு இந்த அம்மாட்ட கேட்டா, பிரபலத்தின் அம்மா வீட்ல இருக்கிற, தன்னோட மூத்த பொண்ணுன்னு சொல்லுது.

இந்த போக்சோ கேஸஸ் என்னவாயிருக்கும்? இது மிகப்பெரிய நெட்வொர்க்கா இருக்கும் போல இருக்கே! கரெக்டா 13 வயசுல எதுக்கு ஒவ்வொரு பொண்ணையும் கூட்டிட்டு வர்றாங்க?  இந்த ஷப்னம் யாரு? அதுதான் எல்லாப் பொண்ணுங்களையும் கூட்டிட்டு வந்து விடுது.  இந்தாளு பிரபலத்தின் அம்மாவோட அடியாள் போல. அதுக்குனு அந்தப் பொண்ண மிரட்டற வீடியோ வெல்லாம் எதுக்கு இந்தாளுக்கு அனுப்பிருக்காங்க?”  என்றாள் நித்யா.

“இன்னொன்னு கவனிச்சீங்களா? அந்தப் பொண்ண மிரட்ற வாய்ஸ் இந்த அம்மாவோடது“ என்றார் கோட்டாட்சியர்.

“திருடின பணத்த உங்கம்மாட்ட கொடுத்திட்டியானு ஒரு அம்மா எப்படி தன் பொண்ணுட்டயே கேக்க முடியும்?!!!“

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைசாக் விஜயம் (பகுதி 2) – சுஶ்ரீ

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 38) – தி.வள்ளி, திருநெல்வேலி