in ,

கண்ணான கண்ணே (சிறுகதை) – சுஶ்ரீ

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ஆபிஸ்ல ஒரே போட்டி, மும்பை 6 நாள் டிரெயினிங் கோர்சுக்கு யார் போறதுனு.அய்யே திடீர்னு இப்படி ஆரம்பிச்சா உங்களுக்கு என்ன புரியும்

.நான் வினோத் 44 வயசு, சென்னைல மருத்துவ உபகரணங்கள் செய்ற மல்டி நேஷனல் கம்பெனில குவாலிடி கன்ட்ரோல் சூப்ரவைசர்.

அம்பத்தூர்ல பேக்டரி, வீடு கூட அங்கேயே. அழகான அன்பான மனைவி அனிதா, எங்கள் கண்ணுக்கு கண்ணான பிரேர்ணா 13 வயது மலர்க் கொத்து, வேற பெரியவர்கள் யாரும் இல்லை,

பிரேருக்குட்டி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கிறாள், படு சுட்டி, மொத்த பள்ளிக்கும் செல்ல சொத்து, இவ்வளவுதான் எங்கள் சாதாரண இந்திய குடும்பம்.பி.எஸ்.சி பிசிக்ஸ் வரை படிக்க வைத்தது பெரியப்பா,, வேலைக்கு சேத்து விட்டது பெரியப்பா, வலை போட்டு அனிதாவை தேடி கல்யாணம் பண்ணி வைத்தது பெரியப்பா ,இப்ப அவரும் இல்லை.சரி இப்ப மேலே போவோம்.

எங்க கம்பெனியின் கார்பரேட் ஆபிஸ், மெயின் பேக்டரி மும்பையில். நவீன புதிய கருவிகள் அறிமுகம் செய்யப் போகிறார்கள் அதற்கான பயிர்ச்சி கொடுக்க ஜெர்மனியிலிருந்து அடுத்த வாரம் வல்லுனர்கள் மும்பை வருகிறார்கள்.அதற்கு போகதான் நான், நாணு, பரசுராமன் மூணு பேருக்குள் போட்டி,     அவ்வளவு அறிவு தாகமெல்லாம் இல்லை, மூணு பேரும் பம்பாய் பார்த்ததில்லை.ஒரு வாரம் சகல வசதிகளோட இலவசமாய் பாம்பே பாக்க கிடைக்கறதே அதான்.

கடைசியா அரைகுறை இந்தி எனக்கு வாய்ப்பளித்தது.நாணுவும் , பரசுராமனும் நல்ல ஸ்போர்டிவ் பாம்பேல என்னல்லாம் பாக்கணும் வாங்கணும், லிஸ்ட் போட்டு கொடுத்தார்கள், மரைன் டிரைவ்,         ஒர்லி பாந்த்ரா சீ லிங்க்,மலபார் ஹில்ஸ் பாரு, ரெட்லைட் ஏரியா மறக்காம பாரு.ஜுகு பீச்ல வடா பாவ், பாவ் பாஜி மறக்காதே.

சிரித்துக் கொண்டே குறித்துக் கொண்டேன். அனிதா , பிரேரு குட்டிக்கு நான் ஏதோ வெளி நாடு போற பீலிங், பிரியா விடை பெற்று சென்னை தாதர் எக்ஸ்பிரஸ்ல முதல் வகுப்பு ஏ.சி சொர்க்கமா இருந்தது  (முத தடவையா ஏ.சி டிரெய்னல போறேன் இல்லை)

மறு நாள் காலை தாதர் ஸ்டேஷன். அப்பாடியோ அதி காலை 6 மணிக்கு இவ்வளவு கூட்டமா. நல்ல வேளை ஸ்டேஷனுக்கு எதிரில் எனக்கு ஹோட்டல் ஏற்பாடு ஆகி இருந்தது.மத்த படி டிரெய்னிங் நல்ல படி போனது உங்களுக்கு சொன்னால் புரியாது. நண்பர்கள் சொன்ன இடமெல்லாம் இந்த மாயாஜால நகரில் மயக்கியது.

அன்னிக்கு கடைசியா அதையும் பாத்துடுவோம்னு பாம்பே செனட்ரல் பக்கம் காமாத்திபுரால ஒரு ரவுண்ட், அனிதாவுக்கு துரோகம் பண்ற எண்ணமெல்லாம் இல்லை சும்மா பாக்க. அப்பப்பா பெண்கள், பெண்கள், பெண்கள்தான். பால்கனியில், வாசல் படியில், தெரு முனையில், என் கால்கள் நடுங்கின பல பிராந்திய பெண்களின் அழைக்கும் முகம் பாத்து.

ஒரு சின்ன பையன் பேசிய ஹிந்தி புரியவில்லை கையை இறுகப் பிடித்து இழுக்காத குறையா   ஒரு மாடி ஏற்றி விட்டான், கதவு திறந்து என்னை கவர்ந்து மூடிக் கொண்டது. மந்திரத்தில் கட்டுண்டது போல ஒரு சின்ன கட்டிலறையில் செலுத்தப் பட்டேன். நான் என் கட்டுக்குள் இல்லை.

ஒரு 16 வயது நேபாளிப் பெண் உள்ளே தள்ளப் பட்டாள், அவள் என் காலடியில் அமர்ந்து                            “குச் பி கர்லோ ன்னா” (என்ன வேணா செய்னு அர்த்தம் அப்பறம் தெரிஞ்சது)

திறந்த ஜன்னல் வழியே  பல சத்தங்கள காதில் மோதின, ஒரு கிரீச்சென்ற பெண் குரல் எல்லாவற்றையும் மீறி. “ஹே பிரேர்ணா கஸ்டமர் ஆயா”

தூக்கி வாரி போட்டது பேர் கேட்டு பதறி எழுந்தேன், கையில் வந்த பணத்தை கட்டிலில் எறிந்து விட்டு ஓடாத குறையாய் வெளியே, இப்ப சென்னை திரும்பறப்ப யோசிக்கிறேன்                                                                                                                                                                                                         ஏன் இதெல்லாம் நடக்கிறது, யார் குற்றம்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இரண்டாம் குலோத்துங்க சோழன் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 26) – ”கவி இமயம்” இரஜகை நிலவன்