in ,

கைவிடாத கல்வி (சிறுகதை) – சுமித்ரா. R

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

கிராமத்தில் வாழ்ந்த நல்லதங்காள் தன் படிப்பின் போது மகிழ்வாய் வாழ்ந்து வந்தாள்.

மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தன் குடும்பத்தில் சொன்னபோது “பெண்கள் படித்து என்ன செய்யப் போகுதுக. இன்னொருத்தன் வீட்டுக்குத் தான் போகப் போகுது, இதுக்கு எதற்கு படிச்சுக்கிட்டு” என்று கூறி மேற்படிப்பை தொடர விடாமல் படிக்கிற காசுக்கு நகையை சேர்த்து கட்டிக் கொடுத்து விடலாம் என சொல்லி அவளை பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த உடனே கல்யாணத்தை முடித்து விட்டனர்.

அவள் கனவு கானல் நீராய் ஆனது. கணவனோ படிக்காதவன். பத்தாம் வகுப்பு முடித்துள்ளதாக பொய்க்கூறி திருமணம் செய்து கொண்டான். பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்ததும் அவளுடைய அப்பா தான் தவறு செய்து விட்டதாக நினைத்து தினந்தோறும் மனக்கவலை அடைந்தார்.

தன் செல்ல மகளுக்கு குடும்பத்துக்கு தேவையான அனைத்தையும் தான் வாங்கிக் கொடுத்து கலங்காமல் வாழ வழி செய்தார். அதனால் கணவன் ஒன்றும் சொல்லாமல் மகிழ்ச்சியாக அனைத்தையும் வாங்கிக் கொண்டு அவளை திட்டாமல் இருந்தான்.

இரு குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகள் வளர்ப்பதிலேயே அவளுடைய காலம் கழியத் தொடங்கியது. உறவினர்களும் வறுமையால் அவளை மதிக்கவில்லை. தன்னுடைய குடும்ப வறுமையைப் போக்க கணவரைப் படிக்கச் சொன்னாள். அப்போதுதான் நல்ல வேலை கிடைத்து நிறைய சம்பளம் கிடைக்கும் என்று நினைத்தாள்.

ஆனால் கணவனோ, “தன்னால் படிக்க முடியாது நீ வேண்டுமானால் படி” எனக் கடிந்து கூறினான்.

அப்போதுதான் அவள் சரியான முடிவு எடுத்தாள். யாருடைய உதவியும் இல்லாமல் தொலைதூரக் கல்வியில் படிக்க எளிமையானது தமிழ் என முடிவு செய்து, தமிழ் பாடத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள். பல இடர்பாடுகளுக்கு இடையே தன்னுடையப் பட்டப்படிப்பை முடித்தாள்.

அருகிலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக 500 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தாள். வேலை பார்க்கும் இடத்தில் சகஊழியர்கள் ஆசிரியருக்கான பட்டப்படிப்பு படிக்காமல் வந்ததால் ஏளனம் செய்து எடுபிடி வேலைக்கு அவளை பயன்படுத்திக் கொண்டனர்.

அதனால் அவள் விரக்தி அடைந்து தன்னுடைய அப்பாவிடம் சென்று “என்னுடைய வாழ்க்கையில் முன்னேற நான் ஆசிரியர் பட்டப்படிப்புப் படித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். என்னுடைய கணவர் பணம் இல்லை என்று ஒப்புக் கொள்ள மாட்டார். நீங்கள் படிக்க வைப்பீர்களா?” என அழுது கேட்டாள். தான் செய்த தவறுக்கு பிராய்ச்சித்தமாய் ஒப்புக் கொண்டார்.

படித்துக் கொண்டிருக்கும் போதே அவள் அப்பா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தன்னுடைய மகளின் நினைவாக பிரிய மனமில்லாமல் உயிர் பிரிந்தது.

அவளுடைய படிப்பிற்கான பணத்தை அவள் அம்மா “உன் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அவர் சொன்னது போல நான் தருகிறேன்” என்று தன்னால் முடிந்த பணத்தை கொடுத்து உதவினாள்.

தன் ஆசிரியர் படிப்பைக் கண்ணீருடன் வெற்றிகரமாக முடித்தாள். தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து தன் வருமானத்தில் இரு குழந்தைகளையும் படிக்க வைத்தாள்.

அவளுடைய அப்பா இறந்ததும் பிறருடைய பேச்சைக் கேட்டு அவள் கணவரின் எண்ணங்கள் மாறின. தினந்தோறும் திட்டுவதும் அடிப்பதும் வீட்டை விட்டு எங்கேயாவது ஓடிப் போவதும் என துன்புறுத்தினான்.

அவள் தன் குடும்பத்துக்கு உதவுவது தனக்காகத்தான் என உணராமல் “நீ ஆசிரியர் போல என்னை வழிநடத்துகிறாய்” என அவளுடைய முன்னேற்றத்தில் பொறாமை கொண்டவன் போல அவளை வெறுக்க ஆரம்பித்தான்.

அவள் படிப்புக்கு உதவாமல் அவளை ஒவ்வொரு செயலிலும் பழி வாங்கினான். படிக்கும் போதே கல்வியின் மோகத்தாலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் முனைவர் பட்டப்படிப்பு வரை தன் கல்வியில் தொடர்ந்தாள்.

அவளை மதிக்காமல் இருந்த உறவினர்கள் மத்தியில் கம்பீரமாய் சென்ற பொழுது அனைவரும் வியந்து பொறாமை கொண்டது அவளுக்கு பெருமையாக இருந்தது.

அதுவரை அவளுடைய கிராமத்தில் படிக்க வைக்காமல் இருந்த பெண்களை திருமணம் செய்யும்போது “நல்லதங்காவைப் போல நீங்கள் எங்கள் பெண்களைப் படிக்க வைக்க அனுமதித்தால் மட்டுமே திருமணம் செய்து வைப்போம்” என கட்டளையிட்டு திருமணம் செய்து வைக்க ஆரம்பித்தனர்.

பெண்ணுக்கான கல்வி சுதந்திரம் கிடைக்கும் போதே அவள் சமூகத்தின் ஆணி வேராகத் திகழ்கிறாள். அவள் விதைத்த கல்வி விதையே அவள் வாழ்க்கைக்கு விருட்சமானது. அவள் கணவன் அவளை கைவிட்டாலும் அவள் கற்றக் கல்வி அவளை கைவிடவில்லை.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 10) – ராஜேஸ்வரி

    நேர்மார் (சிறுகதை) – மலர்மைந்தன், கல்பாக்கம்