இலையின் பனித்துளி
இனிமையில்லை
உன் இதழின் பனித்துளி
தேனினும் இனிமை
இரவின் மழையில்
குடைக்கீழ் அடக்கம்
உன்னுடன் நடக்கையிலோ
குடையோர் பாரம்..
மின்மினி பொன்னொளி
புதுமையில்லை
கண்மணி உன்னெழில்
இனிமை அதிலில்லை..
மனமறிய சொன்னதில்லை
ஒரு பொய் அன்று
ஓராயிரம் பொய்யுரைக்கிறேன்
உனை கண்ட பின்பு..
கண்ணிமைக்கும் நேரத்தில்
கண்ணிமைக்குள் உறக்கம்
கண்மணி உனை கண்ட பின்
கனவுக்குள் நான் அடக்கம்..
விழித்துக் கொண்டே நான்
நினைவிழக்கிறேன்
உன்னை நினைத்துக் கொண்டே
உணர்விழக்கிறேன்..
உண்டாலும் உறங்கினாலும்
உண்டாகும் தவிப்பெதற்கு
உண்மை உரை கண்ணே
இதுதான் காதலா??
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings