in ,

என் காதல் (கவிதை) – தி. வள்ளி, திருநெல்வேலி

 

என்னை உனதாக்கிக் கொண்டாய்..

உன்னுள் என்னை புதைத்துக் கொண்டாய் ..

யார் நான் என்ற வினாவுடன் 

ஏங்கித் தவித்து தனித்திருக்கையில் 

உனக்குள் நான் இருக்கிறேன்..

உரிமையுடன் நீ குரல் கொடுத்தாய்..

உன்மத்தம் பிடித்திருக்கும் என் நிலை..

உன்னை கை கொள்ளவில்லையெனில்..

உன்னில் என்னைக் கண்டு ..

உள்ளம் உவகையுற்றது.. 

ஏற்றம் மிகத் தந்தாய் ..

ஏக்கத்தை மாற்றினாய்..

என் அடையாளம் நீயானாய்..

உன்னில் இணைந்த பின்..

உலகமே மாறிப்போனது..

அடையாளம் நீ தந்தாய் ..

அழகாகிப் போனதென் உலகம்..

பூத்துக் குலுங்கும் நந்தவனமாய்..

பூமியெங்கும் பூ வாசம்..

உன் காதலில் எனனை இழந்தபின்..

வேறொன்றை நாடவில்லை என் மனம்..

என் வாழ்வில் நீ இணைந்த பின்..

வசந்தம் கூட இரண்டாம் பட்சமாகிப் போனது..  

வாழ்தலின் அர்த்தம் அழகாய் விளங்கியது..

நேசிப்பில் இத்தனை அர்த்தமுள்ளதா ..

நேயத்துடன் கேட்டது என் மனம்..

உலகின் இன்பங்கள் எல்லாம்

இரண்டாம் பட்சமாய் தோன்றுகிறது..

உண்மை இன்பம் எதிலென்பது

உள்ளம் உணர்ந்து கொண்டதிப்போது ..

வீண் வாதங்களை வெறுக்கிறது..

சண்டை சச்சரவுகளை தவிர்க்கிறது ..

புறம் பேசுவதை புறத்தே தள்ளுகிறது..

உலகை புரிய வைத்து 

மனதை அமைதியாக்கி

வாழ்க்கையை அர்த்தமாக்கி

வாழ்தலை இனிமையாக்கி ..

எனக்கு ஒரு அடையாளம் கொடுத்த 

என் காதல் என் எழுத்தே..

காலன் வரும் வரை..காலம் உள்ளவரை

இக்காதல் என்னில் நீங்காது..

காலத்தே நிலைத்திருக்கும்..

என் சுவாசத்தில் கல ந்திருக்கும்.

 

   

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நிறம் மாறாத பூ (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    திருத்தெள்ளேணம் (நாவல் பகுதி 1) – பாலாஜி ராம்