in ,

அம்மா என்ற வார்த்தை (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

நீ உங்க அம்மாவை எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்குற, என்னுடைய எட்டு வயதில் இழந்த என்னுடைய அம்மாவை நாள்தோறும் நினைத்து அழுவதை தவிர வேறு வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

எனக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்தாலும்  அம்மாவின் நினைவுகள் நீங்க மறுக்கிறது என பக்கத்து வீட்டில் இருக்கும் பூஜாவிடம் தன்னுடைய அம்மாவை பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள் நித்யா.

அட போங்க அக்கா, எப்ப பார்த்தாலும் எங்க அம்மா வெளிய போய் நிக்காத, தனியா கோயிலுக்கு போகாத என ஒவ்வொன்றிற்கும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்றாள் பூஜா.

கோயிலுக்கு தனியா போனால் என்ன? எங்க போனாலும் ஒரு துணையை தேடிக் கொண்டிருக்க முடியுமா என பூஜா கேட்க அதற்கு நித்யா பெரியவர்கள் சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். நீ சின்ன பொண்ணு, கல்லூரியில் படித்திருந்தாலும் உனக்கு அனுபவம் என்பது குறைவாக தான் இருக்கும் என்றாள் நித்யா.

ஆமா,  ஆமா நீங்க எப்ப பார்த்தாலும் எங்க அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணிட்டே இருங்க என்றாள் பூஜா.

இப்போது உனக்கு வருத்தம் தெரியாது. திருமணம் ஆகி இன்னொருவர் வீட்டுக்கு போகும் போது தான் அம்மாவின் பேச்சும், நீ அம்மா ஆன பிறகு தான் உனக்கு உலக நடப்பும் தெரியும்.

எங்கள் வீட்டில் நான் ஒரே பெண் தான். என்னுடைய அம்மா இறந்த பிறகு இரவில் எனக்கு தூக்கம் வராது. என்னுடைய அப்பா இரவு நேரத்தில் லேசாக கண் அயர்ந்த பிறகு அம்மாவின் புடவையை எடுத்து போர்த்தி விடுவார். அந்தப் புடவையில் அம்மாவின் வாசனை இருக்கும்.

அம்மா அருகில் படுத்திருப்பார்கள் என்று நினைத்து நான் அயர்ந்து தூங்கி விடுவேன்.  நான் பள்ளி செல்லும் போது தலையை சீவி விடுவது அப்பா தான். சரியாகவே தலை சீவ மாட்டார்கள்.

எனக்கு என்ன பிடிக்கும்,  என்ன பிடிக்காது என்று அம்மாவுக்கு மட்டுமே தெரியும். என்றாவது ஒரு நாள் சாப்பாடு பிடிக்கவில்லை என்றாலும் எப்படியாவது என்னை சமாளித்து எனக்கு ஊட்டி விடுவார்கள்.

அப்பாவுக்கு சமைக்கவும் தெரியாது. எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதெல்லாம் அப்பாவுக்கு ஒன்றுமே தெரியாது.  என்னமோ வளர்த்து நல்லபடியாக ஒரு இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டார்.

என்னை வளர்ப்பதற்குள் அம்மா பிரசவத்திற்கு கஷ்டப்பட்டதை விட அப்பா தான் அதிகம் கஷ்டப்பட்டு இருப்பார் என்றாள் நித்யா.

சின்ன சின்ன வேலையை உங்களுக்கு அம்மா கற்றுக் கொடுப்பது எதற்கு, நீங்கள் புகுந்த வீட்டில் போய் சின்ன சின்ன வேலையாவது செய்ய தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக தான் கற்றுக் கொடுக்கிறார்கள்.

வீட்டில் என்றாவது ஒரு நாள் நிம்மதியாக இருக்க முடிகிறதா? ஏதாவது வேலையை செய்ய சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அம்மாவை வசை பாடிக் கொண்டும்,  புலம்பிக் கொண்டும் இருக்கிறீர்கள் என்றாள் நித்யா.

சரி அக்கா, இனிமேல் அம்மா சொல்வதைக் கேட்கிறேன், அம்மாவின் அருமை பற்றி இவ்வளவு அழகாக எனக்கு சொல்லி புரிய வைத்தீர்கள் என்றாள் பூஜா.

அம்மாவை மட்டும் என்றும் குறை சொல்லாதே, அதுவே அம்மாவுக்கு நீ செய்யும்  மரியாதை என்றாள் நித்யா.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதல் ஒழிக (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 10) – தி.வள்ளி, திருநெல்வேலி