in ,

அடிபடுவதும் ஓர் அனுபவம் (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ஐயா, தேங்காய் விளைச்சல் இப்போது அதிகமாக இருக்கிறது. அதனால இப்போ  5 ரூபாய்க்கு கொடுக்கிற ஆளுங்க கூட இருக்காங்க, சந்தைல சொல்லிட்டு தான் இருக்காங்க. நான்தான் அப்பாவின் நண்பர் என்பதால் உங்களிடம் வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்றான் தேங்காய் வியாபாரி முத்து.

அந்தக் காயெல்லாம் கொஞ்சம் பொடிசாக தான் இருக்கும், எங்க மரத்து காய் சைஸ் எல்லாம்  ஒரே மாதிரியாக தான் இருக்கும்.

உங்க அப்பா தேங்காய்  வியாபாரம் செய்யும் போது ஒரு நாள் கூட என்னிடம் பேரம் பேசியது கிடையாது. குறைவாக இருந்தால் நான் குறைவாக கொடுத்து விடுவேன் என்றார் பெரியவர்.

மரத்திற்கு இயற்கை உரம் வைத்து, தண்ணி பாய்ச்சி மரம் பட்டுப் போகாமல் இருப்பதற்கு அவ்வப்போது மருந்து தெளிப்பதும் சாதாரண விஷயம் கிடையாது.

ஒரு நாள் கூலியை அதிகமாக கொடுக்க வேண்டி இருக்கிறது. உங்களுக்கு ஆறு ரூபாய் போட்டு மிகவும் குறைவாகத் தான் கொடுக்கின்றேன்.  இதற்கு குறைவாக என்னால கொடுக்க முடியாது தம்பி.  நீங்க வேற யாராவது குறைவாக கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் பெரியவர்.

அப்ப நான் கேட்ட விலைக்கு நீங்கள் கொடுக்க மாட்டீர்கள், இவ்வளவு நாள் பழகியதற்கு வேறு இடத்தில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று எடுத்தெறிஞ்சு சொல்லி விட்டீர்கள் என்றான் வருத்தத்துடன் முத்து.

எனக்கு கட்டுப்படி ஆகணும் பா, உன்னைத் தவிர மற்ற ஆட்களுக்கு தேங்காய் ஒன்று 7 ரூபாய் என்று தான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் இதுவரை.  குடும்பம் மிகவும் நொடித்து போய்விட்டது என்று சொன்னதால் தான் உங்க அப்பாவுக்காக நான் ஆறு ரூபாய்க்கு கொடுத்தேன். 4 ரூபாய்க்கு எப்படி நான் கொடுக்க முடியும்,  நான் நஷ்டத்துக்காக கொடுக்க முடியும் என்றார் பெரியவர்.

சரிங்க ஐயா, உங்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை என்றால் நான் வேறு இடம் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான் முத்து.

பெரியவருக்கு மனசு கேட்கவில்லை. முத்துவின் அப்பா பள்ளி பருவத்திலிருந்து நெருங்கிய நண்பர்.  கண் பார்வை தெளிவாக தெரியவில்லை என்பதால் தன்னுடைய மகனை தான் செய்யும் வியாபாரத்திலேயே பழக்கி விட்டார்.

ஹார்ட் அட்டாக்கில் முத்துவின் அப்பா இறந்த விட முத்து மூத்த மகன் என்பதால் தடுமாறி விட்டான் முத்து. முத்துவிற்கு இரண்டு தங்கைகள் இருப்பதால் அவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டுமே,  அப்பா இல்லாமல் என்ன செய்வது என மிகவும் கலக்கத்தில் இருந்தான் முத்து.

பெரியவர் முத்துவை கூப்பிட்டு நீ எதற்கும் கவலைப்படாதே, உனக்கு நான் தேங்காய் விலையை ஐந்து ரூபாய்க்கு கொடுக்கிறேன்.  நீ அதை வைத்துக் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக்கொள் என சொன்னார் பெரியவர்.

முத்துவும் மிக மகிழ்ச்சியுடன் தேங்காய் வாங்கிச் சென்று வியாபாரம் செய்து வந்தான். மூன்று வருடங்களிலேயே இரண்டு தங்கைகளுக்கும் திருமணத்தையும் முடித்து விட்டான் முத்து.

இதைப் பார்த்த பெரியவருக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. முத்து நன்றாக வளர்ந்து விட்டான் என்ற பொறாமையில் உறவினர்கள் சிலர் முத்துவின் வியாபாரத்தை தடுப்பதற்காக தவறான விஷயங்களை சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தன்னைச் சுற்றியுள்ள உறவினர்களை பற்றி சரியாக தெரிந்து கொள்ளாத முட்டாளாக இருப்பதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார் பெரியவர்.

முத்து வெளியே தேங்காய் எடுத்து வியாபாரம் செய்யட்டும், அவனாகவே விரைவில் சீக்கிரம் தன்னிடம் தேங்காய் வாங்குவதற்கு வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் இருந்தார். வாழ்க்கையின் அடிபட்டால் தான் முன்னேற முடியும் என்பதை அறிந்து கொள்வான் என மனதுக்கு நினைத்தவாறு இருந்தார் பெரியவர்.

இரண்டு மாதம் சென்ற பிறகு மீண்டும் பெரியவரை தேடி முத்து வந்தான். வாப்பா முத்து என்று வாய் நிறைய கூப்பிட்டார் பெரியவர்.

அய்யா என்னை மன்னித்து விடுங்கள், உறவினர்களின் பேச்சை கேட்டு தான் நான் உங்களிடம் குறைவான விலைக்கு தேங்காயை கேட்டேன். வேறு ஒருவரிடம் தேங்காயை எடுத்து வியாபாரமும் சரியில்லை. வாடிக்கையாளர்களும் ஏதாவது குறை சொல்லிக் கொண்டே தேங்காய் வாங்குவதை நிறுத்திவிட்டார்கள் என்றான் முத்து.

அதனால்  என்ன,  பரவாயில்லை முத்து என்னுடைய நண்பரின் மகன் என்பதால் நான் உன்னை என்னுடைய மகனாக தான் நினைக்கின்றேன். குடிப்பதற்கு இளநீரை கொண்டு வந்து கொடுத்துவிட்டு உனக்கு வேண்டும் அளவுக்கு தேங்காயை எடுத்துக் கொண்டு போ என சொன்ன பெரியவரின் பேச்சை கேட்டு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் முத்து.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பெண் மனது (சிறுகதை) – சுஶ்ரீ

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 14) – ரேவதி பாலாஜி