in ,

யார்? (சிறுகதை) – விடியல் மா.சக்தி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

     அரசு மருத்துவமனையின் அவசரப் பிரிவிலிருந்து வெளியே வந்த டாக்டர்,

” சார்!, இப்ப அவர்கிட்ட பேசலாம்”

அவர் கூறியதும் எழுந்து உள்ளே சென்றார் இன்ஸபெக்டர் அன்பன். சில தீக்காயங்களுடன் படுத்திருந்த அழகேசனிடம்,

” எப்படி நடந்துச்சு?”

“எனக்கு தெரியாது”

“உங்க மனைவியும், குழந்தையும் எப்படி செத்தாங்க? நீங்கதான் சிலிண்டர் வெடிக்க வச்சுக் கொன்னீங்கன்னு சொல்றாங்க?”

“எனக்கு தெரியாது சார்”

அழகேசன் மீண்டும்,

அதையே கூற அன்பன் எழுந்தார்.

      அன்றைய தினத்தின் பத்திரிக்கையில், மனைவியையும், குழந்தையையும் எரித்துக் கொன்ற கணவன், அலுவலகத்தில் வாங்கிய கடனைத் திருப்பி அடைக்கப் பணம் கேட்டு தர மறுத்ததால் கணவன் வெறிச்செயல். அண்டை வீட்டினர் வாக்குமூலம், கணவன் கைது.

      பத்திரிக்கையை வாசித்த அழகேசனுக்கு, இரண்டு தினங்களுக்கு முன்  நடந்ததவைகள் மனத்திரையில் காட்சிகளாக ஓடியது. சனிக்கிழமை இரவு மனைவி சுமதியிடம்,

“நீ கொஞ்சம் உதவுனா அதுலிருந்து தப்பிச்சுருவேன்”

” என்னால முடியாது! “

” ப்ளீஸ்!, நமக்காகத்தானே கடன் வாங்கினேன், அதுவும் இதுவரை நான் உங்கிட்ட இதுபோல கேட்டதில்ல “

“அதுக்காக இவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்க போவேன்?”

“வங்கியில உனது கணக்குல இருக்கும்ல, அது போக கொஞ்சம் நகையை வேணா அடகு வைக்கலாம்*

” அதெல்லாம் முடியவே முடியாது நகைய பத்தி நீங்க பேசவே கூடாது”

அழகேசன் மனைவி சுமதி கூறியதைக் கேட்டதும், அவன் கோபத்தில் கையிலிருந்த காபி டம்ளரை தரையில் ஓங்கி அடித்து விட்டு வெளியேறினான். அதைக் கண்டு குழந்தை நேகா பயந்து போனது.

      ஞாயிறு இரவு, அழகேசன் வீட்டுக்குள் நுழைந்தான். அவர்களுக்குள் மீண்டும் அதே வாக்குவாதம் அது பக்கத்து வீடுகளுக்கும் கேட்டது. சுமதி பணம் தன்னிடம் இல்லையென கூறிவிட்டு குழந்தையை கூட்டிக் கொண்டு சமையலறைக்குள் போய் விட்டாள்.

      அழகேசன் கோபத்தோடு வெளியே புறப்பட்டான். வெளியேறும் முன்பு எதற்கும் இன்னொரு முறை கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்து, சமையலறைப் பக்கம் திரும்பிப் பார்த்தான். அப்போது ‘படார்!’ என்று சிலிண்டர் வெடிக்க, தீ இவன் மீது பரவியது, எரியும் உடலோடு அழகேசன் அலறியடித்து வெளியே ஓடிவந்தான். சத்தம் கேட்டு உடனே ஓடி வந்த அண்டை வீட்டினர் தீயை அணைக்க போராடி முடிவில் அவனை மட்டும் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு தீயணைப்பு வண்டிக்கு தகவல் தந்ததும் அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் வீட்டுற்குள் சுமதியும், குழந்தை நேகாவும் கரிக்கட்டைகளாக கிடந்தனர்.

       ஆசுபத்திரியில் அழகேசன் தீவிபத்து எப்படி நடந்தது என்று திரும்பத் திரும்ப யோசித்தான். பட்டென ஒரு காட்சி ஞாபகத்திற்கு வந்து போனது. அது, ஞாயிறு இரவு சுமதியிடம் அவன் பணம் கேட்டதும் அவளும் இல்லையெனக் கூறிவிட்டு குழந்தையுடன் சமையலறைக்குள் சென்றாள். சிறிது நேரத்தில் எழுந்த அவன் வெளியே போகும் முன்பு மீண்டும் ஒருமுறை பணம் கேட்பதற்காக சமையலறைக்குள் எட்டிப்பார்க்க, அப்போது சுமதி கையில் ‘கரப்பான் பூச்சிக்கொல்லித் தெளிப்பானை’ வைத்தபடி எரியும் அடுப்பின் அருகில் அடித்துக் கொண்டிருப்பதை கண்டான். அந்த சமயத்தில்தான் சிலிண்டர் வெடித்தது. காப்பாற்ற சென்ற இவன் மீதும் தீ பரவ அலறியடித்து வெளியே வந்தான்.

      அந்த, கரப்பான் பூச்சிக்கொல்லி தெளிப்பானால் தான் தீவிபத்து நடந்திருந்தது. அழகேசன் அதை நினைத்து தலையிலடித்துக் கொண்டு அழுதான். என்ன செய்ய யாரும் அவனை நம்புவதற்குத் தயாராக இல்லை.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உடல் பொருள் ஆவி (அத்தியாயம் 4) – ஸ்ரீவித்யா பசுபதி

    பால் கடன் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை