in ,

புதுப்புனல் (நூல் விமர்சனம்) – தி. வள்ளி, திருநெல்வேலி

நூல் விமர்சனம்:

புத்தகம் : புதுப்புனல்  

பதிப்பகம் : புஸ்தகா பதிப்பகம்

ஆசிரியர் : அனுராதா ஜெய்சங்கர் 

திருமதி அனுராதா ஜெய்சங்கர் அவர்களின் புதுப்புனல் மிக சமீபமாக படித்தேன். ஆஹா என்ன அருமையானதொரு கதை தொகுப்பு. புதுப்புனலில் ஆழ்ந்து, நனைந்து ,மூழ்கி, முத்தெடுத்து, படிப்பென்னும் சுகானுபவத்தில் திளைத்துப் போனேன். என்ன ஒரு திறமை இந்த பெண்ணுக்கு என்று வியப்படையாமல் இருக்க இயலவில்லை. அந்த அளவு ஒவ்வொரு கதையும் என்னை ஆட்கொண்டது.

மூத்த பத்திரிக்கையாளர் எழுத்தாளர் திரு.மாலன் அவர்கள் அணிந்துரையுடன் தொடங்கி. என் மதிப்பிற்குரிய பிரபல எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா அவர்கள் வாழ்த்துரையுடன் புதுப்புனல் பொங்கி பிரவாகமெடுக்கிறது.

முதல் கதை புதுப்புனலில் உறவுகள் சங்கமிக்க ரத்த சம்பந்தம் தான் தேவை என்பதில்லை.. அனாதையாய் நிற்கும் உறவுகளை ஏற்க நல்ல மனம் போதும் என்று வலியுறுத்துகிறது. அன்புக்கு எங்கும் தாத்தா பாட்டி, பேரனாய் முளைக்கும் சிறுவன் என அருமையான கதை.

கடல் கன்னியில் நம்மை பிரமிக்க வைக்கிறார். கடலை பற்றிய அவருடைய வர்ணனைகள்.. எத்தனை வகை கடலின் தோற்றம் என்பதெல்லாம் ஆழ்ந்த அறிவின் வெளிப்பாடு. முடிவில் மட்டும் ஏனோ அதிர்ச்சி அளிக்கிறார். தாய் தந்தை மகள் ..அவள் கணவன் என இழையோடும் அழகான பாச மலர் “மூச்சு விடும் நேரம்”. நகைச்சுவை உணர்வுக்கு “பருப்பளவு பொறுப்பு”.

 சமூக அவலத்தை கூறும் “இனி ஒரு விதி செய்வோம்” தந்தையை இழந்து ஏங்கும் சிறுவனின் மனநிலையை படம் பிடித்து காட்டும் பனிக் கதவு ..பதின் பருவப் பெண்கள்.. அவர்களை கையாள திண்டாடும் தாய் இறுதியில் குறைபாடு உள்ள சகோதரியை புரிந்து கொள்ளும் சகோதரி” ஐ லவ் யூ ஹரணி” என்கிறாள் ..குடும்ப உறவுகளின் இனிமையின் பின்னணியில் வர்ஷா அருண் பிரச்சனை பேசும் “லவ் ஆல்”.

“அரும்பு மலரும் தருணம்” நம்மை நெகிழ வைக்கிறது. வயதின் முதுமையில் குழந்தையாகி போன தந்தைக்கு தாயாய் மாறும் மகள். “உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருமடி” என்று ஜனனிக்கு தாய் பாடும் பாடல் ஆசிரியருக்கே பொருந்தும்.. உச்சிதனை முகிர்ந்து ஆசீர்வாதம் பண்ண தோன்றுகிறது அனுராதா ஜெய்சங்கர் அவர்களை.. அழகான நடையில் அத்தனையும் வித்தியாசமாக கோர்க்கப்பட்ட ஒரு பூ மாலை தான் இக்கதை தொகுப்பு ..

முத்தப்பாய் “உயிரில் மலர்ந்த சுடர்கள்” குறுநாவல் மனதை நெகிழ வைக்கிறது.. அழகான சரளமான நடை .. கடைசி நிமிடங்களில் மனைவி என்ன சொல்ல நினைத்திருப்பாள் என்று விடை தேடும் கணவன்.. அது தெரிந்த பின் அந்த விடை நம்மை வியக்க வைக்கிறது, நெகிழ வைக்கிறது. அருமையான குறுநாவல் நீரோட்டமாய் கதை செல்கிறது.

மொத்தத்தில் மிக அருமையான ஒரு தொகுப்பு புதுப்புனல் ..அனைவரும் படித்து மகிழ.. 

தி.வள்ளி

திரு நெல்வேலி. 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பொன்னுத்தாயி (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி

    ஏனிந்த கவலை? (சிறுகதை) – அர்ஜுனன்.S