in ,

வலிகளை ரசிப்போம் (சிறுகதை) – சுஶ்ரீ

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

என்ன சார் பெரிய வலி, சித்தி தன் பையனுக்கு பாதாம் பருப்பு கொடுத்தாள், எனக்கு பொட்டுக் கடலைதான் கொடுத்தாள். இது ஒரு வலியா? இதை பாரமா இத்தனை வருஷம் மனசுல சுமக்கணுமா.பொட்டு கடலை எவ்வளவு மிருதுவா இருக்கும்? பாதாம் பருப்பு கடிக்கவே முடியாது. கொஞ்சம் கரகரனு பொரி, கொஞ்சம் நாட்டுச் சக்கரை, பொட்டுக்கடலையோட கலந்து சாப்டா 1 மணி நேரம் வச்சு எஞ்சாய் பண்ணி சாப்பிடலாம்.நாலஞ்சு பாதாம் பருப்பை கடக்முடக்னு சாப்டுட்டு, சித்தி பையன் நம்ம கிட்ட வந்து கெஞ்சுவான் கொஞ்சம் கொடு அண்ணானு.

என்ன ஆச்சு, மாமா பொண்ணு, விழுந்து விழுந்து காதலிச்சேன்,அவளுக்கு தெரியாம ஒன்சைட்தான்.அவளை அவ அண்ணனோட நண்பன் லவட்டிட்டு போயிட்டான்.

இதை தேவதாஸ் கணக்கா மனசுல வச்சு (இந்த தாடி மீசைதான் வளந்து தொலைக்கலை, அம்மா  நிறைய மஞ்சள் தேச்சு குளிப்பாட்டி தொலைச்சிட்டா) குடிச்சிட்டு நடு வீதில உளறணுமா?அந்த அளவு காசும் இல்லை, அடுத்த நாளே கருப்பு தாவணி போட்ட கல்பனா எதுத்த வீட்டு வாசல்ல கோலம்      போடறது தெரிஞ்சதே.இவ என் மாமா மகளை விட தளதளா, கலர் கூட சந்தனம் (கொஞ்சம் கலப்பட சந்தனம்) ஓரக் கண்ணால பாத்து ஸ்மைல் கூட பண்ணின மாதிரி தெரிஞ்சது.நல்லவேளை                    என் மாமா மகளை செட் பண்ணலை.

சரிப்பா நண்பன்தான், தன் மக கல்யாணத்துக்கு என்னை கூப்பிடலை, அது ஒரு வலியா மனசுல சுமக்கணுமா? உதறித் தள்ளிட்டு என்னடா மாப்பிள்ளை, பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சு போலனு கேட்டுட்டேன். இப்ப வலி அவனுக்கு அய்யோ நல்ல நண்பனை கூப்பிடாம தப்பு பண்ணிட்டோமேனு.    என் பொண்ணு கல்யாணத்துக்கு முதப் பத்திரிகை அவனுக்குத்தான். கட்டிப் பிடிச்சிக்கிட்டான்     உன்னை யாரோ சொன்னதை கேட்டு தப்பா நினைச்சிட்டேனே நண்பானு.

தெரியுமே எல்லோருக்கும் ஆர்வம் , அந்த கருப்பு தாவணி கல்பனாவையே கல்யாணம் பண்ணினேனானுதானே?

இப்ப என்ன, அவளும் ஏமாத்திட்டா அதனால என்ன, ( இப்பவும் மீசை தாடி வரலை) அண்ணா, எங்கப்பாவுக்கு தஞ்சாவூருக்கு மாத்தல் ஆயிடுத்து, இந்த தங்கையை மறந்துடாதீங்கண்ணானு சொல்லிட்டு போயே போயிட்டா.

பக்கத்துல பாத்தா தெரிஞ்சது அப்படி ஒண்ணும் அழகில்லை, நமக்கு தேவதை எங்கயோ  பிறந்திருக்காடா , கருப்பு தாவணி கழட்டி எறிஞ்சாச்சு.அதனால மனசுல வலியெல்லாம் இல்லை.

“எப்பப் பாரு திண்ணையை தேச்சுட்டு உக்கார வேண்டியது, பேப்பர்ல அப்படி என்னதான் இருக்குமோ, தெரியாதா என்ன, பேப்பர் படிக்கற சாக்குல கோவிலுக்கு போற வர பொண்ணுங்களை சைட்   அடிக்கிறது? போய் குளிச்சிட்டு, ரேஷன்ல சக்கரையும், பாமாயிலும் வாங்கிண்டு வாங்கோ.”

இந்த சத்தம் நம்ம தேவதை கிட்ட இருந்துதான் 60 வயசுலயும் அசத்தற அழகி.

நமக்கெல்லாம் எப்பவும் மனசுல எந்த வலியும் இல்லை, வலிகளை ரசிக்க கத்துக்கணும் அவ்வளவுதான்.தேவையில்லாம நாம ஏன் வலியை சுமக்கணும், வலியை கொடுத்தவங்க       சந்தோஷமா இருக்கும் போது.இவ்வளவு கெடுதல் செஞ்சாலும் ஜாலியா இருக்கானேனு அவங்களே டென்ஷனாகட்டும் சரியா?

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அரேபியக் குதிரை (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 27) – தி.வள்ளி, திருநெல்வேலி