in ,

வைகை ஆற்றின் காதல் நினைவுகள்! (சிறுகதை) – இரஜகை நிலவன்

ழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சார்… நீங்கள் பஸ்ஸில் எப்போதாவது கண்டக்டராக இருந்திருக்கிறீர்களா? பஸ் கண்டக்டராக இருந்தால் கண்டிப்பாக என் வேலை கஷ்டத்தை உணர்ந்திருப்பீர்கள். அவ்வளவு கூட்டத்தில் நான் டிக்கட் கொடுக்கும் போதும், என்னைத்தேடி, என்னோடு கொஞ்ச நோம் பேச ஒரு அழகிய தேவதை கிடைத்தாள் என்ற போது தான் எனக்கு அடிக்கடி நான் இந்த உலகத்தில் தான் இருக்கிறேனா என்ற சந்தேகமே ஏற்பட ஆரம்பித்தது.

உண்மையிலே நீங்கள் நம்புங்கள் ஸார். என் மாமா எப்படியாவது பாங்கிலே வேலை வாங்கித் தருகிறேன் என்று சொன்ன பிறகும் அவள் பஸ்ஸில் வருவாளே – தினமும் என்னுடன் போவாளே… என்ற ஒரே காரணத்திற்காக கண்டக்டர் வேலையை விட மறுத்து விட்டேன் ஸார்.

என் அம்மா, அப்பா. அத்தை, அண்ணன். இன்னும் எத்தனையோ நண்பர்கள் என்னை பாங்க் வேலைக்குப் போகச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால் நான் அவளுக்காய் எம்.ஏ. பட்டாதாரியாக இருந்தாலும் கூட கண்டக்டராக வேலை செய்வதை விட முடியாது என்று சொல்லி விட்டேன்.

தினமும் பொன் வயல் கிராமத்திலிருந்து டவுன் பஸ்ஸில் ஏறி மதுரை வரும் வரை நாங்கள் எத்தனை முறை ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்வோம் தெரியுமா?

அடிக்கடி அவள் கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டு வந்து பஸ் ஸ்டாண்டில் நிற்பாள். எனக்கு திடீர் தலைவலி வந்து விடுமுறை எடுத்துக் கொண்டு அவளுடன் எத்தனை முறை ஊர் சுற்றி வந்திருக்கிறேன் தெரியுமா?

மீனாட்சியம்மான் கோவிலுக்கு போகிற ஒவ்வொரு முறையும் “எதற்காக வேண்டிக் கொண்டீர்கள்” என்று அவள் கேட்கும்போது “என் சரோஜாவை என்னுடன் இணைத்துவிடு ஆண்டவனே” என்று வேண்டிக் கொண்டதாக சொல்வேன்.

ஒரு முறை வைகை ஆற்றங் கரையில் நாங்கள் இருவரும் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று “உங்களுக்கு நீச்சல் தெரியுமா?” என்றாள்.

“ம். கூம்” என்றேன்.

“நான் எதை சொன்னாலும் செய்வீர்களா?” என்று கேட்டாள்.

“ஓ! என்ன செய்ய வேண்டும் சொல். இந்த மலையைத் தலைகீழாக மாற்ற வேண்டுமா? வானத்து நட்சத்திரங்களை பிடித்து வந்து மாலை யாக்கி உன் கழுத்தில் அலங்கரிக்க வேண்டுமா? இல்லை… உன் காலடியில் இந்த உலகத்து செல்வங்களைச் குவிக்க வேண்டுமா? சொல்.” என்று நான் வசனம் பேசியதும், ”அவ்வளவு கஷ்டமான எந்த வேலையும் செய்ய வேண்டாம். எங்கே? இந்த ஆற்றில் குதியுங்கள் பார்க்கலாம்” என்றாள்.

“நமக்கு நீச்சல் தெரியாதே – நாம் எப்படி இதில் நீந்த முடியும்” – என்று கூடக் கவலைப்படாமல் நான் தண்ணீருக்குள் குதித்து விட் டேன். நான் தண்ணீரில் தத்தளிக்க, நல்ல வேளை – அவளுக்கு நீச்சல் தெரியும் என்பதால் அவள் உடனே ஆற்றில் குதித்து என்னைக் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தவள், “ஓ! சுரேஷ் உங்களை… உங்களை…” என்று ஏதோ சொல்ல விரும்பியவள் ஒன்றுமே சொல்லாமல் என் நெற்றியில் அவள் முத்தமிட்ட போது உண்மையில் நான் ஒரு நிமிடம் என்னையே மறந்து போனேன். அப்புறம் இருவரும் துணிகள் காயும் வரை அந்த ஆற்றங்கரையிலேயே உட்கார்ந்து கனவு கண்டு கொண்டிருந்தோம்.

ஒரு நாள் நாயக்கர் மஹாலில் நடந்து இருவரும் கொண்டிருந்த போது, “நீங்கள் வெளியே போங்கள். நான் இங்கே ஒளிந்து கொள்கிறேன்” என்று சொன்னவள். வெளியே வந்து விட்டு திரும்பி உள்ளே போனபோது அவளைக் காணவில்லை.

அரை மணி நேரம் அவளைத் தேடியும் காணாததால் “சரோஜா” என்று சப்தம் போட ஆரம்பித்தேன். அவளைக் காணவில்லை. எனக்கு உயிரே போய்விட்டது போல் இருந்தது. எங்கே போயிருப்பாள் என்று ஒவ்வொரு தூணாகத் தேடியலைந்து வாறு நான் சுற்றிக் கொண்டிருக்க, ஒரு மணி நேரம் கழித்து ‘க்ளுக்’கென்று சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் சரோஜா நின்று சிரித்துக் கொண்டிருந்தாள்.

தெய்வம் நான் சுற்றித் நெரக் கழித்து ‘மளூசிசிகன்று தம்வேடுத் திருமபிய பாரதி தேன், என் சரோஜா நின்று சிரித்துக் கொண்டிருந்தாள்,

உண்மையிலே ஸார். என் சர்வ நாடிகளும் அவ்வளவு நேரமும் அப்பிடியே அடங்கிப் போயிருந்தது. அப்போது தான் எனக்கு நிதானமாக மூச்சு வரவே ஆரம்பித்தது.

ஓடி வந்த எனனைக் கட்டிக் கொண்டவள், “பரவாயில்லையே. என்னைத் காணவில்லை என்று எவ்வளவு கஷ்டப் பட்டீர்கள்” என்று சிரித்தாள்.

அன்று பஸ்ஸிலிருந்து வந்து கொண்டிருக்கும் போது டிக்கட் கொடுத்ததும் சிறிது நேரத்தில் அவளிடமிருந்து அதே டிக்கட் திருப்பி வந்தது. அடிக்கடி நான் கொடுத்த டிக்கட்டிலிருந்து செய்திகள் வரும். நானும் அதை எடுத்து வாசித்து விட்டு என் பணப் பைக்குள்ளே போட்டுக் கொள்வேன். அன்று டிக்கட் திரும்பக் கிடைத்ததும் கூட் டம் அதிகமாக இருந்ததால் பணப்பைக்குள்ளே டிக்கட்டைப் போட்டு விட்டு டிக்கட் கொடுக்க ஆரம்பித்தேன்.

பஸ் ஸ்டாண்டிலிருந்து தினமும் அவள் இறங்கும் போது கைகாட்டி விட்டுச் செல்வது தான் வழக்கம். அன்று அவள் கைகாட்டாமல் இறங்கிச் சென்றதும் எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

அவள் திருப்பிக் கொடுத்த டிக்கட்டை எடுத்து பின்னால் எழுதியிருந்த வாசகத்தை எடுத்துப் படித்தேன்.

“என்னை மன்னித்து விடுங்கள். தயவு செய்து இனி என்னுடன் பேச வேண்டாம்” என்று எழுதியிருந்தாள்.

என் மண்டைக்குள் ஆயிரம் இடிகள் இறங்கியது போல இருந்தது. என்னையே இந்த உலகம் ஒரு மாதிரி சுற்றியது போலத் தோன்றியது, என் கண்கள் இருண்டு கொண்டே வந்தது.

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தீயவை தீயினும் அஞ்சப்படும் (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி

    கடவுள் தந்த வரம் (சிறுகதை) – இரஜகை நிலவன்