உடையணிந்து வெளிசெல்ல முனையும் போது
உட்கார்ந்து விளையாடிக் கொண்டி ருந்த
நடைபயின்ற குழந்தையது ஓடி வந்து
நானும்தான் வருவேனென் றடம்பி டிக்கும் !
சடைபின்ன தாயருகில் அமர்ந்த போது
சரியாக மாலைவெயில் மறையும் போது
நடைதன்னில் நிழல்கண்டே அப்பா வென்று
நான்குகால்கள் பாய்ச்சலிலே கைபி டிக்கும் !
பள்ளிவிட்டு வந்தபின்பு காலை சொன்ன
பாடநூலை வாங்கிவரு வாரா வென்று
துள்ளியெட்டி வாசலிலே உருவம் பார்த்துத்
துடிப்புடனே அப்பாவைக் கட்டிக் கொள்வாள் !
அள்ளிகொண்டை போட்டவாறு கல்லூ ரிக்கு
அடியெடுத்து வைத்தமகள் தேவைக் காக
உள்ளிருக்கும் அப்பாவின் காது கேட்க
உரிமையுடன் குரல்கொடுப்பாள் பாசத் தோடே !
இத்தனைநாள் இத்தனைநாள் கேட்ட அந்த
இனிமையான குரலெப்போ கேட்கு மென்று
சத்தமாகச் சொல்லிட்டால் தவித்தே அம்மா
சாய்ந்திடுவாள் துயரத்தில் என்றே எண்ணி
பெத்தமகள் கணவனுடன் செல்லும் போது
பெருமையுடன் மனமடக்கிப் பார்க்கும் அப்பா
மொத்தமாகத் தன்னுயிரே போகு தென்ற
மௌனமான ஏக்கவலி அறிவார் யாரே !
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings