மோகமெல்லாம் காமமாக மாறிப் போக
மொட்டினையும் கசக்குகின்ற கொடுமை யிங்கே
ஏகமாக நடக்கிறது ஊருக் குள்ளே
ஏற்றிட்ட ஒழுக்கமின்று பறந்து போக
தேகத்தின் சூட்டாலே இளைஞ ரோடு
தேகத்தோள் சுருங்கிட்ட முதுமை யோரும்
போகத்தின் பொருளாகப் பெண்கள் தம்மைப்
பொசுக்குகின்றார் பஞ்சைத்தீ பொசுக்கல் போன்றே !
மனமொன்றிக் காதலித்த சங்கக் காதல்
மறைந்தின்று போனதுவே பண்பும் கெட்டு
தனக்கான ஒருவனுக்கு ஒருத்தி என்ற
தமிழப்பண் பாடெல்லாம் போன தெங்கோ
மனத்தாலும் பிறன்மனையை நோக்கி டாத
மாண்பான பேராண்மை மாய்ந்த தின்று
தினவெடுத்த தோள்கள்போய் உடலு ணர்வின்
திமிராலே நடக்குதிந்த கயமை யெல்லாம் !
பாலியலின் கொடுமைக்குத் தண்ட னையாய்ப்
பலர்பார்க்க முச்சந்தி நிற்க வைத்து
வேலியெனும் உடைகளைந்து பிறப்பு றுப்பை
வெட்டியாடு கோழியைப்போல் துடிது டித்துக்
காலிரண்டும் இல்லான்போல் நிலம்பு ரண்டு
கதறிடவே அவனுயிரை எடுக்க வேண்டும்
கூலிக்கு மாரடிக்கும் நிலைமை மாறிக்
கூர்தீர்ப்பால் இக்கொடுமை நிற்க வேண்டும் !
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings