in ,

இரத்தத்தின் இரத்தமே… (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ஏன் அக்கா அழுகுற, என்ன பிரச்சனை மகன் ஏதும் சொன்னானா?  என தன்னுடைய மூத்த சகோதரி சந்திராவிடம் தங்கை தீபா கேட்டுக் கொண்டிருந்தாள்.

இல்லம்மா.. வந்து என்று எதையும் சொல்ல முடியாமல் மீண்டும்  சந்திரா அழுது கொண்டே இருந்தாள்.

அக்கா,  நீ அழுகாமல் சொன்னால் தான் என்னால் புரிந்து கொள்ள முடியும்.  என்ன நடந்தது என்று சொல்லு என்ன மீண்டும் தீபா கேட்டாள்.

மருமகள் காலையில் காபி கொடுத்தாள். கைத் தவறி கீழே விழுந்து விட்டது. அதனால் வீட்டில் ஒரே சண்டை.  நீ ஒன்றும் சுத்தம் செய்ய வேண்டாம் நானே செய்து கொள்கிறேன் என்று சொன்னேன்.

ஆமாம்மா இந்த வேலையை செய்து விட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் நான் தான் வீட்டை சுத்தம் செய்தேன் என்று வாய்க்கு வந்ததை என்னை பற்றி புறணி பேசுவது என மருமகள் கேட்டாள்.

நான் அதற்குப் பிறகு வாய் திறந்து எதையும் பேசவில்லை. மகன் இரவு வீட்டுக்கு வந்தவுடன் ஒன்றுக்கு இரண்டாக போட்டுக் கொடுக்க மீண்டும் இரவு முழுதும் ஒரே சண்டை.

நான் சொல்வதை எதையும் காது கொடுத்து கேட்கவில்லை. பொண்டாட்டி என்ன சொல்கிறாளோ அதை மட்டும் தான் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிக் கொண்டிருக்கிறான் என்றாள் சகோதரி சந்திரா.

சரி அக்கா, அதற்குப் பிறகு என்ன ஆச்சு என்று தங்கை தீபா கேட்க நீ உங்க பொண்ணு வீட்டில் பத்து நாள் இருங்கள். பிறகு நான் வந்து அழைத்துக் கொள்கிறேன் என்று சொன்னான் மகன்.

சரி பொண்ணு வீட்டுக்கு தானே பத்து நாள் தானே இருந்து விட்டு வரலாம் என நானும் மகள் வீட்டுக்கு சென்றேன்.  நான் வந்ததில் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் சந்தோசம்.

பத்து நாட்கள் என்னை நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள் மகள் வீட்டில் உள்ளவர்கள்.   15 நாட்கள் ஆகியும் மகன் வரவில்லை என செல்போனில் அழைத்தேன்.

நீங்க கொஞ்சம் நாட்களுக்கு பொண்ணு வீட்ல இருங்க என  மகன் சொல்ல எனக்கு கோபம் வந்துவிட்டது. இருந்தாலும் பொறுமையாக மாப்பிள்ளை வீட்டில் இருப்பது சரியாக வராது என்னை வந்து அழைத்துக் கொண்டு போங்கள் என்று சொன்னேன்.  இப்போதெல்லாம் என்னால் வர முடியாது.

நான் வெளியூரில் இருக்கிறேன், உங்க மருமகளும் அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறாள்.  நான் பிறகு வந்து அழைத்துச் சொல்கிறேன் என்று பேசிவிட்டு செல்போனை வைத்து விட்டான் மகன்.

மீண்டும் நான் அழைத்தேன் அவன் செல்போனை எடுக்கவே இல்லை. அதன் பிறகு இரண்டு நாட்களாக மகள் வீட்டில் இருந்தேன்.

மகள் மாமியார் பக்கமும் பேச முடியாமல் என்னிடமும் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததை கண்ணால் பார்க்க முடிந்தது. பிறகு மகளே வாய்விட்டு நீங்கள் அண்ணன் வீட்டுக்கு போங்கள்,  ஒரு வாரம் இருங்கள், நான் பிறகு வந்து உங்களை அழைத்துக் கொள்கிறேன் என்று சொன்னாள் மகள்.

கூட்டுக் குடும்பத்தில் மகள் இருக்கும் போது அந்த இடத்தில் நாம் இருப்பது சரியில்லை. எனவே உங்க வீட்டில் வந்து நான் இருந்து கொள்ளட்டுமா என தங்கை தீபாவிடம் கேட்டாள் சந்திரா.

நான் என்னுடைய கணவரிடம் கேட்டுச் சொல்கிறேன் என சொல்லிவிட்டு செல்போனை வைத்து விட்டாள் தங்கை தீபா.

மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து தீபா தன்னுடைய சகோதரியை தொடர்பு கொண்டு அக்கா நான் மாமாவிடம் கேட்டு விட்டேன். மகனும் விரட்ட, மகளும் விரட்ட அவர்கள் எங்கே போவார்கள். அதனால் அவர்களை  வர சொல்லு, நாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்லிவிட்டார். நீங்கள் தாராளமாக இங்கே வந்து இருக்கலாம் அக்கா,  ஒரு பிரச்சனையும் இல்லை. உங்க குழந்தைகள் எப்ப கூப்பிடுகிறார்களோ அப்போது நீங்க கிளம்பி போங்கள் என்று சொன்னாள் தீபா.

அம்மா தீபா, ரொம்ப நன்றி மா.  என் குழந்தைகள் என்னை கைவிட்டாலும் என்னுடைய உடன்பிறப்பு கைவிடவில்லை, என கண்ணீர் மல்க நான் மாலையில் கிளம்பி வருகிறேன் என்று சொல்லி செல்போனை வைத்தாள் சந்திரா.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மதி வதனா (பகுதி 6) – ராஜேஸ்வரி

    புது செருப்பு (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு