மனதை வசீகரிக்கும்
வண்ணமிகு
அழகைப் பெற்றிருந்தாலும்
இனிக்கும் திரவியமாம்
தேனமுதைப் சுமந்திருந்தாலும்
இளமை அழகு
வாடித் தொய்ந்திடும்
காலம் உறுதி என்பதை
மனத்தில் நிறுத்தி
வாழும் சொற்ப காலம்
முழுவதும் பிறரை
மகிழ்விக்கும் மலர்கள்
போல் இருக்க வேண்டும்
இதமாய்
என்பதனை
உள்ளர்த்தமாய்
உரைக்கத்தானோ…?
இல்லற வாசலில்
அடி வைக்கும்
மணமக்களின்
கைகளில் தரப்படுகிறது
மலர்ச் செண்டு….?
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings