வாழ்வளிக்க வந்த
உலகின் மீட்பின்
உன்னத நாயகன்
அன்பின் இயேசுவே!
கானாவூர் கல்யாணத்தில்
தண்ணீரை இரசமாக்கி
அதிசயம் செய்தீர்…
கண்ணில்லாத குருடருக்கு
பார்வை தந்தீர்…
காலில்லா முடவருக்கு
நடை பயணம் தந்தீர்…
இறந்த லாசரை
திரும்பவும் உயிர்ப்பித்தீர்…
எத்தனை அதிசயங்கள்
எத்தனை உன்னத
காரியங்கள்
என் தேவன் உம்மை
இவ்வுலகம் உணர்ந்திடச் செய்தீர்…
மலைப் பிரசங்கத்தில்
முடிவில்லா வாழ்விற்கு
மக்கள் சென்றிட
மனமுவந்து வழியைச்
சொன்னீர்…
அலைந்தாலும்
காற்றில்
தவழ்ந்தாலும்
தென்றல்
சுகந்தத்திலும்
சூரியனின்
சுட்டெரிப்பிலும்
எவ்வேளையும்
என் மன்னவர்
அன்பு தேவனாம்
தேவகுமாரன்
யேசுவின் இயல்பாடு…
அவரைப் புகழ்ந்தே
எப்போதும்
எழுதிட நீயும்
பழகிடு…
அன்பனவர்
அவனிக்கே
பாவங்களிலிருந்து
மீட்பு தந்த
பகலனவர்…
வானகத்தில்
பாண்பு மிகு
தந்தையோடும்
புனித ஆவியோடும்
வாசம் செய்யும்
அருட் புதல்வனின்
புகழ்ப் பாக்கள் ஏற்றுடு…
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings