வானம் பொழிஞ்சதடி
நெல்லும் மகசூலானதடி…
பயன்படுத்திய வயலிலே விதைத்தே
முளைச்சுதடி…
களை பறிச்சு
காவல் காத்த
வெளியும்
விவசாயத்திலே
நூறு மடங்காய்
விவசாயிக்கு
பெருவாரியாய்
வெளஞ்சுதடி
தங்கமே…
கதிரறுத்தே
களத்து மேட்டில
சேத்திடவே…
கட்டுக்களாய்
சூடடிக்க
சொம்மாட்டுல
தூக்கி
களஞ்சியம்
சேக்க
சிரிப்பாய்
போறவள..
அடுத்த பூவும்
வெளயும் வரை
சேக்கணுமே…
சேத்த நெல்லு
பக்கவமா
அரங்காக்கணுமே….
கடவுளுக்கும்
இல்லாதவனுக்கும்
சொந்தத்துக்கும்
மல்லுகட்டுரவனுக்கும்
நெறயா
கொடுக்கோணுமே…
மனசெல்லாம்
நெறயணுமே….
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings