வீழ்ந்தாலும் அருவியே!
நீ தரும்அழகின்
மகிழ்ச்சியேஉள்ளத்தை
கொள்ளையடிக்குதே…..
கரை தொட்டு
நாடகம் போடும்
விண்ணின் விரிப்பின்
வியப்பினைக் காட்டும்! ….
வனமெல்லாம் உதிரம்
தழுவி சாரலையும்
தூவானமாக்கி சரிந்து விழ
மண்ணினில் ….
உயரத்திலிருந்தே
உன்னதம் படைக்கும்
வீழ்ச்சியின் அயர்ச்சியிலும்
மனம் குளிரச்செய்திடும்
செப்படிவித்தை…..
இறைவன் கொடையின்
எழிலின் மிளிர்ச்சியை
மனம் சிலிர்த்திட
இரசித்திட ஏற்பாயா?
நண்பனே !
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings