in ,

இரகசிய உயில் (சிறுகதை) – மரு உடலியங்கியல் பாலா

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அம்மாவின் இறுதி சடங்கை முடித்தபின், அடுத்தநாள் காலை சீஃப் இன்ஜினியராக சிங்கபூரில் செட்டிலான மூத்தமகன் ரவியும் அவன் மனைவியும், போபாலில் டெப்டி கலக்டராக பணியாற்றும் இளைய மகன் ராஜாவும் அவன் மனைவியும், மணமாகாத கடைக்குட்டி பெண் சிந்துவும், வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் அமர்ந்து, ஏற்கனவே காலமான தந்தை தன் சுய சம்பாதனையில் வாங்கிய அண்ணாநகர் வீட்டை பாகப்பிரிவினை செய்து கொள்ள பேச்சு வார்த்தையை தொடங்கினர்.

மூத்தமகன், “சம்பிரதாயப்படி அம்மாவின்  நகைகளை சிந்துவுக்கும், வீட்டை நானும் தம்பியும் சரிசமமாக பிரித்து கொள்கிறோம். தங்கைக்கான திருமண செலவை நாங்கள் இருவரும் பகிர்ந்து கொள்கிறோம். மணமாகும்தனில் சிந்து இந்த வீட்டில் தங்கிக் கொள்ளட்டும். என்ன பெரியப்பா நான் சொல்றது சரிதானே” என வினவ

அத்தை அன்னம்மாள் குறுக்கிட்டு, “உங்களுக்கெல்லாம் குடும்பம் ஆயிடுச்சி. அந்த பாவப்பட்ட பொண்ணு கல்யாணமாகாம அப்பா அம்மாவ தொலச்சிட்டு தனிமரமா நிக்குதே. அதுக்கும் வீட்டில பங்கு குடுத்திங்கன்னா புண்ணியம் ராசா” என சிந்துவுக்கு பரிந்து பேச

பங்காளிகள் குறுக்கிட்டு, “நம்ம குலவழக்கப்படி புள்ளைங்களுக்குதானே வீட்ட குடுக்கணும். அதுதான் சம்பிரதாயம்” என பேசி முடிவுசெய்ய

அழுது அழுது முகம்வீங்கி அன்னந்தண்ணி உண்ணாமல் தாயை இழந்த சோகத்தில் பைத்தியம் பிடித்தவள்போல், அங்கு என்ன நடக்குது என்ற பிரக்ஞையே இல்லாமல், விட்டத்தை வெறித்து பார்த்தபடி மொனமாய் அமர்ந்திருந்த அவளை சீண்டி உசுப்பிய அத்தை “கண்ணு, இது உனக்கு சம்மதமா? வாய் தொறந்து பேசு ராசாத்தி” என அவளை வாஞ்சையுடன் அணைத்தபடி கேட்க

அவள் மௌனமாய், “சரி” என தலையாட்ட., அவள் அண்ணன் அண்ணிகளுக்கு ஒரே சந்தோஷம்.

பெரியப்பா, “சரி, தலக்கட்டு நல்லபடியா முடிஞ்சிது. ஒரு நல்ல நாளா பாத்து பாகப்பிரிவினை  பத்தரத்த ரெஜிஸ்டர் பண்ணிடுங்க. சீக்ரமா எல போட சொல்லுங்க எல்லாரும் பந்திக்கு போலாம்” என கூறியபோது, அனைவர்க்கும் வியப்பூட்டும் வகையில் ஒரு வயதான வக்கீல் வருவதை கண்டு அதிர்ச்சியுற்றனர்.

“வணக்கம். என்பேர் ரங்காச்சாரி. உங்க அப்பாவோட பால்ய சிநேகிதன், நான் ஐகோர்ட் வழக்கறிஞர். உங்கப்பா இறக்கும் தருவாயில் என்னை அழைத்து உயில் ரிஜிஸ்டர் செய்துள்ளார். அதில் தன் இரு மகன்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பு, திருமணம் என அனைத்து கடமைகளையும் செய்துவிட்டபடியாலும், தன் மகளுக்கு படிப்பு ஏறாததாலும், கல்யாணம் தகையாததாலும், தன் மகளை இறப்பால் பிரிய நேரிடின், என் சுயார்ஜித சொத்தான இந்த வீடு, என் மனைவியின் காலத்துக்கு பிறகு என் மகளுக்கு முழுமையாக சேரவேண்டியதுன்னு எழுதிட்டார். இந்த உயிலை தன் மனைவியின் காலத்துக்கு பிறகு தன் வாரிசுகளுக்கு தெரியபடுத்த வேண்டும் என சத்தியபிரமாணம் பெற்றதால், இ‌வ்வளவு நாள், ரகசியம் காத்தேன்” என கூறி முடித்ததும், மகன்கள் மருமகள்கள் முகத்தில் ஈயாடவில்லை.

சிலைபோல் உணர்ச்சியின்றி இருந்த சிந்துவை மீண்டும்  அத்தை உலுக்கி விஷயத்தை விளக்கினாள்.

கோபத்தின் உச்சிக்குசென்ற மருமகள்கள், “என்ன அநியாயமாக இருக்கே, அவளே எவ்ளெ நாள் அனுபவிக்கிறான்னு பாத்துடுலாமே! இனிமே இங்கென்ன வேல நமக்கு. சீக்கரம் கிளம்புங்க” என கூறி தங்கள் கணவன்மார்களுடன்  கிளம்ப முற்பட

சிந்து கேவிக்கேவி அழுதபடி, “அண்ணா அண்ணி, என்ன நீங்க அநாதையா தனியா விட்டுட்டு போய்டாதீங்க ப்ளீஸ்!. நீங்களும் போய்ட்டா எனக்குன்னு யார் இருக்காங்க. எனக்கு இந்த வீடு வேணாம். நீங்கள எடுத்துக்கோங்க அண்ணா. உங்க ஆதரவு இருந்தா அதுவே போதும்” என கெஞ்ச, அங்கு உறவுகளின் மறுமலர்ச்சிக்கு, புத்துயிர் தந்தாள் அந்த சின்னப்பெண் சிந்து.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆக்ரமிப்பு ❤ (கவிதை) – வைஷ்ணவி

    வசூல் ராஜா (சிறுகதை) – முகில் தினகரன், கோவை