in ,

பெரிய மனசு (சிறுகதை) – M.மனோஜ் குமார்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

தொழிலதிபர், யோகேஷும் அவரது நண்பர் சிவராஜனும், காரில் சென்று கொண்டிருந்தார்கள்.  ஒரு நான்கு வழி சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு ஒரு ஏழை பெண்மணி  காட்டன் பட்ஸ்,  விற்றுக் கொண்டிருந்தாள்.

“அண்ணா! அண்ணா! காட்டன் பட்ஸ்  வாங்கிகோங்கண்ணா! நாங்க ரொம்ப ஏழைங்க கஷ்டப்படுறவங்கணா! இதுல தான் எங்களுக்கு வருமானமே வருது”

தொழிலதிபர் யோகேஷ் அவள் கையில் இருந்த அனைத்து காட்டன் பட்ஸ்களையும் வாங்கினார். அந்த பெண்மணிக்கு முகம் முழுக்க மகிழ்ச்சி வந்திறங்கியது.

“ஏம்பா! இந்த மாதிரி குவாலிட்டி இல்லாத பட்ச வாங்குறியே, அதுக்கு பதிலா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ல குவாலிட்டி பட்ஸ் குறைவா வாங்கி இருக்கலாமே! விலை குறைவுன்னு எதுக்கு தரம் இல்லாத பட்ஸ் வாங்குறே!” சிவராமன் எரிச்சலாய் கேட்டார். யோகேஷ் புன்னகைத்தபடியே காரை ஓட்டினார்.

அடுத்த ஜங்ஷன் சிக்னலில் கார் நிற்க, பிச்சை கேட்கும் பெண்மணி கார் கண்ணாடியைத் தட்டி பிச்சை கேட்டாள்

யோகேஷ் கார் கண்ணாடியை இறக்கிவிட்டு “உடம்புல தெம்பு இருக்குறப்போ பிச்சை எடுக்கிறியே, ஏதாச்சும் பிசினஸ் பண்ணி பிழைக்கலாம் இல்ல!” சொன்னார்

“ஐயா! நான் முதலுக்கு எங்கய்யா போவேன்?”

சட்டென்று யோகேஷ் முந்தின நிறுத்தத்தில் வாங்கிக் கொண்ட மொத்த காட்டன் பட்ஸையும் தூக்கி அவளிடம் கொடுத்துவிட்டு “இதை வித்து, மறுபடியும் காட்டன் பட்ஸ் வாங்கி வித்து பிழைத்துக்கொள். ஆனால் பிச்சை மட்டும் எடுக்காதே!” சொல்லிவிட்டு காரை ஓட்டினார் யோகேஷ்

“எனக்கு பிச்சை எடுக்கிறது பிடிக்காது. அதனால யார் பிச்சை எடுத்தாலும், அவங்களுக்கு இது மாதிரி ஹெல்ப் பண்றேன். இது என் அம்மா எனக்கு சொல்லித் தந்த விஷயம். காரணம், ஒரு காலத்தில அவங்க பிச்சை எடுத்தப்போ இப்படித்தான் ஒருத்தர் பொருள் வாங்கி கொடுத்துட்டு பொழைச்சுக்கோன்னு சொல்லிட்டு போயிட்டாரு. இப்ப நான் தொழிலதிபரா மாறுனதுக்கு அப்புறம், அம்மா சொன்னது மாதிரி பலருக்கு உதவுறேன்” கேட்ட சிவராமன் அவரது பெரிய மனசு பார்த்து மனதிற்குள் பெருமிதம் கொண்டார்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பெரியாத்தா (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி 

    யாமினியா கொக்கா? (சிறுகதை) – முகில் தினகரன், கோவை