2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“ஏனணை உனக்கு நேரத்தோடு வீட்டுக்கு வரத் தெரியாதோ ! பிள்ளை பசியால அழுவுது நீ எங்கயாவது இப்படியே நின்று வெட்டிக்கதை கதச்சிட்டு பிந்தி வாறது” என்று கமலத்தின் மகள் கேட்ட கேள்வியால கண்களில் ஓரம் சிந்திய இரு கண்ணீர் துளிகளை தன்ர சேலைத்தலைப்பால் துடைத்துக்கொண்டே
“இல்லை மோளே, வரேக்க நான் உண்ட சித்தப்பன் ராசனை பார்த்தேன். அவன் தண்ர மோன் வெளிநாட்டுல போய் காட்டும் இல்லாமல் வேலையும் இல்லாமல் கஸ்டப்படுறதா சொல்லி கவலைப்பட்டவன்டி அதுதான் நான் கொஞ்ச நேரம் நின்று ஆறுதல் சொல்லிப் போட்டு வாரேன் டி” என்று சொல்லி முடித்த கமலம்.
கமலத்தின் மோள் பவளமும் சளைக்காம “சரியணை உன்ர வீட்டு பிரச்சனை எல்லாம் தலையில போட மாட்ட நீ. உனக்கு ஊரானின்ட பிரச்சனைகள் தான் எல்லாம் பெருசா போடுமணை சரி விடு இன்டைக்கு என்ன சமைப்போம்” என்று கேட்டுக் கொண்டே தண்ர ஆறு மாசமான பெடியனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு கேட்டாள்
அப்ப அந்த வழியால போன பக்கத்து வீட்டு சுமதி அக்காவும் “என்னடி கமலம் உன்ர பெறாமோனும் வெளிநாட்டுல பாடுறானாம்” என்று சொல்லப் பவளத்துக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
உடனே “என்னக்கா நீங்க இங்க கிடைக்கிற வயல் வரப்பெல்லாம் செய்ய மாட்டேன்இ போனா லண்டனுக்கு தான் போவேன் என்று தூக்கி பிடித்துக் கொண்டு சித்தப்பற்ற வீட்ட அடகு வச்சு அந்த கிழடுகள் இரண்டையும் விட்டுவிட்டு போனவனைப் பற்றி கதைக்காத” என்று படக் என்டு சொல்லிப் போட்டாள.
கமலமும் “என்ன செய்கிறது காலக்கொடுமையடி” என்று புலம்பிக் கொண்டு அடுப்பை பத்த வைத்து உலையையும் மூட்டினாள்.
அப்ப பேக்க அங்க வந்த கமலத்தின்ர மருமகன் சிவம் “என்ன மாமி என்னையும் உன்ர மோளையும் இந்த வீட்டை வித்து வெளிநாட்டுக்கு அனுப்புறன் எண்டெல்லாம் சொல்லிப்போட்டு இப்ப உங்க அடுப்ப பத்த வைத்துக் கொண்டிருக்கிறியள் எப்ப தான்; எங்களை வெளிநாட்டுக்கு இந்த நரகத்திலிருந்து அனுப்புவியள்” என்டு கேட்டான்.
உடனே பவளமும் “ஓமோம் இப்ப அம்மா முதலாவதா எங்களை அனுப்பி போட்டுத்தான் மத்த வேலை செய்வா, எங்களிட்ட கிடக்கிற கோழிப் பண்ணையையும் மாட்டுப் பண்ணையையும் பாருங்கோஇ வெளிநாட்டுக்கு என்ன விட்டுட்டு போய் நானும் கஸ்ரப்பட்டு நீங்களும் கஸ்ரப்பட போறியள்; என்று புலம்பத்தான் சரி” என்று தன்ற பங்குக்கு புலம்பி போட்டு பிள்ளையோட போய் ஒரு பேணி அரிசியை சுளகில் போட்டுக் கொண்டு வந்து இருந்து புடைக்க தொடங்கினாள்.
அவளின்ர மனமும் வற்றாத நதியாய்இ தன்ர கடந்த காலத்தில அப்பரும் சாக அவளின்ர ஆத்தா கஸ்ரப்பட்டு மாடு மேச்சதும்இ தாங்கள் போட உடுப்பு நடப்பில்லாம கடனுக்கு வாங்கியதும், மற்றவயள் மாதிரி ஒரிடமும் போகாததும் அப்பற்ற சகோதரயின்ர கட்டாயத்தில அம்மா அவளுக்கு சிவத்தை கட்டி வைத்ததும் என்று யோசித்துக் கொண்டிருக்க பிள்ளையும் பாலுக்காண்டி அழ எழுந்து போனாள்.
இப்படியே ஏக்கங்களும் ஏமாற்றமுமாய் காலங்கள் ஓட ரண்டு வருசத்தால பவளத்தையும் குடும்பத்தோட வெளிநாட்டுக்கு அனுப்புவும் என்டு எல்லா சொத்தையும் வித்து போட்டு கஸ்ரப்பட்டு கமலம் வெளிநாட்டுக்கு அனுப்பி போட்டு இப்ப ஒரு வீட்டில இருந்து கண்ணீருடன் பிள்ளைக்காண்டி காத்துக் கிடக்கிறாள்.
“தான் போய் தன்ர பிள்ளைகளை நிலைப்படுத்தி போட்டு ஆத்தாவையும் எடுக்கிறன்” எண்ட பவளமோ திரும்பி கூட பாக்காதவளாய் கமலத்தை தவிக்க விட்டிருக்க கூடாது என்று ஊரார் பாடும் படியாக கமலத்தின் வாழ்வும் ஏனென்று புரியாத புதிராய் போனது.
கமலத்தின்ரையும் பவளத்தின்ரையும் தொப்புள் கொடி உறவு வற்றாத ஏக்கமாய் கமலத்தின்ர மனநதியில ஓட, கமலத்தின்ர வாழ்விலையும் முடிவுச் சக்கரமும் வந்திச்சு.
படுத்த படுக்கையில் போன கமலத்தின்ர பரிதாபத்தை பார்த்து பக்கத்து வீட்டு சுமதி அக்கா பத்து பேரிட்ட அலைஞ்சு திரிந்து பவளத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்யேக்கதான் தெரிந்தது.
பவளமும் மனுசனும் பிள்ளையும் வெளிநாட்டுக்கு போய் இறங்கி போன கார் அக்சிடன்பட்டு அதில் மூன்று பேரும் செத்துப் போட்டினம் என்றும், சாக முதல்ல பவளம் கடைசியா சொன்னது…
“என்ர அம்மா பாவம் ஊர்ல எல்லாத்தையும் இழந்து போன மனிசி அது சின்னனிலையும் எந்த சந்தோசத்தையும் பார்க்காத அந்த மனுசி வெளிநாட்டையும் பிளேனையும் ஒருக்காவாவது பாக்கணும் என்றும் அத எந்த கஸ்ரமும் இல்லாம நாங்க வசதி எல்லாம் செய்து அவவ கூப்பிடோணும், மனுசியை கோடீஸ்வரியா கூட வச்சுக்கணும், ஒரு மாசத்துல அவவிட்ட திரும்பிப் போக வேணும் என்று அவா வித்த காசில இங்க வராம எல்லாத்தையும் அவாண்ட பேரில் இருக்கிற புத்தகத்தில போட்டுட்டு என்ர நகையையும் காணியையும் வித்து இங்கவந்தனாங்க இதுவே எங்களுடைய இறுதி பயணமா போயிட்டு, அவாவுக்கு எங்கட சாவு தெரிய வேண்டாம், இங்கயே எங்களை எரிச்சு விடுங்கோ நாங்க வருவம் எண்ட நம்பிக்கையிலே அவா வாழட்டும்”
எண்டு அங்க நிண்ட நேசிட்ட சொன்னது எண்டு தெரியவர, சுமதியக்காவும் கண்ணீரோட கமலத்திட்ட போய் “உன்ர பிள்ளையிட்ட கதச்சிட்டன் வாறமாதம் வாறாளாம் நீ படு” எண்ட படி தேத்தண்ணிய கொண்டுவந்து தேக்கரண்டியால பருக்கினாள்.
கமலத்தின்ர கண்கள் சொன்னது என்ர பிள்ளையும் எனக்காக வருவாள் என்ர தாயன்பினை.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings