in ,

பாசம் மாறுமா? (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அம்மா, அண்ணன் அண்ணியோடு வந்து கொண்டிருக்கிறார்கள் என தம்பி கார்த்திக் தன்னுடைய அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

எங்கடா பார்த்த?. எங்க வந்துட்டு இருக்காங்க? என படபடப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள் தாய்.

பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸில் இருந்து இறங்கும்போது பார்த்தேன் மா என கார்த்திக் சொன்னான்.

அவன் உன்னையே பார்க்கவில்லையா என அம்மா கேட்க இல்லம்மா அவர்கள் பார்க்கவில்லை நான் தான் பார்த்தேன் என்றான்.

அவர்களுடைய உறவினர் வீட்டுக்கு விசேஷம் என்று வந்திருப்பார்களோ என் மனதுக்குள் நினைத்தவாறு படபடப்புடன் சோபாவில் அமர்ந்தாள் தாய்.

மூன்று வருடத்திற்கு முன் தன்னுடன் வேலை செய்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து நின்றான் மூத்தவன் ரவி.

இதைப் பார்த்த பெற்றோர் என் மூஞ்சியில் முழிக்காதே, எப்படியோ எங்கேயோ போய் தொலை என சொன்னார்கள்.

அப்பா நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேளுங்கள் என ரவி சொன்னாலும் எதையும் கேட்கும் மனநிலையில் நான் இல்லை என சொல்லிவிட்டார் அப்பா .

தன்னுடைய அம்மாவிடம் நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள் மா என சொன்னாலும் உன்னுடைய அப்பாவை மீறி நான் எதையும் பேசவும் முடியாது, சொல்லவும் முடியாது நீ கெளம்பி போயிடு என்றாள் அம்மா.

பலமுறை செல்போனில் அம்மா, அப்பா, தம்பிக்கு போட்டாலும் யாரும் செல்போனை எடுக்கவில்லை. அதன் பிறகு இவனும் கூப்பிடவில்லை அவர்களும் அவனை அழைக்கவில்லை.

காலங்கள் கடந்து கையில் ஒரு பெண் குழந்தையோடு வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

அப்பா ஒரு முறை சென்னைக்கு ஒரு வேலையாக வந்திருந்தார். எங்கள் இருவரையும் ரயில் நிலையத்தில் பார்த்தார். கையில் குழந்தை இருந்ததையும் பார்த்தார்.

மூன்று வருடத்தில் அப்பா மிகவும் தளர்ந்து நடையும் தளர்ந்து விட்டது என்பதை என்னால் உணர முடிந்தது. அப்பாவை நெருங்கி எப்படி இருக்கிறீர்கள் என கேட்டேன்.

ஜீவாவும் குழந்தையை தூக்கிக் கொண்டு ரவி அருகில் வந்து நின்று கொண்டாள். குழந்தையை பார்த்ததும் ரவியின் அப்பா மனசு மாறி குழந்தையை வாங்கி கொஞ்சினார்.

காப்பி சாப்பிடலாம் வாங்க என இருவரையும் அப்பா அழைத்து கொண்டு ஹோட்டலுக்கு சென்றார். இவ்வளவு நேரம் மகனுடன் பேசிக் கொண்டிருக்கிறோமே மருமகள் வாயை திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை, என மனதுக்குள் வருத்தப்பட்டார் ரவியின் அப்பா. புன்னகை மட்டும் முகத்தில் இருந்து வந்தது.

அப்பா நீங்கள் நினைப்பது போல என்னுடைய மனைவிக்கு வருத்தம் கிடையாது. அவளுக்கு பேச முடியாது பிறவியிலேயே ஊமை. நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே என்னுடைய அக்கா ஊமை என்றும், திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தாலும் ஊமை என்ற ஒரு காரணத்திற்காக ஒருவரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. அதனால் தன்னுடைய வாழ்வை தற்கொலையால் முடித்துக் கொண்டார்கள் என்று என்னிடம் எத்தனை முறை சொல்லி இருப்பீர்கள். இரண்டு பேருக்கும் பிடித்திருந்தது. ஆனால் அவள் என்னை கல்யாணம் செய்து கொள்ள விரும்பவில்லை. பிடிவாதமாக ஜீவாவை நான் திருமணம் செய்து கொண்டேன். நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதால் தான் நான் திருமணம் செய்து கொண்டேன் என சொல்ல அப்பாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

நீங்கள் அடுத்த வாரம் மூன்று நாள் தொடர் விடுமுறை வருகிறது. கிளம்பி வீட்டுக்கு வாருங்கள் என சொல்லிவிட்டு அப்பா கிளம்பி விட்டார்.

சென்னை சென்ற போது மகனைப் பார்த்ததும் பேசியதும் மனைவிக்கும் சின்ன மகனுக்கும் தெரியப்படுத்தவில்லை.

கதவை தட்டுற சத்தம் கேட்குது, இங்கே தான் வந்திருப்பார்களோ, உங்க அப்பாவுக்கு என்னடா பதில் சொல்றது என பயத்துடனே வாயில் வந்ததை உளறிக் கொண்டிருந்தாள் தாய்.

நான் கதவை திறக்கிறேன் என சின்னவன் கதவை திறக்க அப்பா, அண்ணன்,  அண்ணி,  குழந்தை என அனைவரையும் பார்த்து ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

டேய் என்னடா பாக்குற, உங்க அம்மாவை ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வரச் சொல்லு என சொல்ல அவசர அவசரமாக ஆரத்தி தட்டை எடுத்து வந்து மூவருக்கும் சுற்றிவிட்டு வலது காலை எடுத்து வைத்து வாங்க என்று அம்மா சொல்ல சந்தோசத்துடன் உள்ளே நுழைந்தார்கள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பிரியாணியும் பீர்பாட்டிலும் (சிறுகதை) – சசிகலா எத்திராஜ், கரூர்

    டிசைனே அப்டித்தானே! (சிறுகதை) – ஜெயலக்ஷ்மி