எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஏய் ராஜா கிளம்பிட்டியா டா? இங்க இருந்து மதுரைக்கு போனா இப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும்
நான் கிளம்பிட்டேன் மா
போகிற வழியில் உங்க சித்தி வேற கூட்டிட்டு போகணும்
அப்ப அத்தையும் வராங்கலாமா
உங்க அத்தை எல்லாம் கூட்டிட்டு போகல உங்க சித்தி மட்டும் தான் கூட்டிட்டு போறேன், உங்க அத்தையை கூப்பிட்டா ஏதாவது பேசிட்டே வருவாங்க கடைசில வம்புல தான் முடியும் அதனால உங்க அத்தை எல்லாம் கூப்பிடல .
இந்த பெண்ணாவது எனக்கு அமைய வேண்டும். போன முறை பார்த்த பொண்ணு ரொம்ப உயரமாக இருக்கிறது என நீங்கள் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள் என்றான் ராஜா.
ஆமாண்டா ரொம்ப உயரமா இருந்துச்சு அதனால தான் வேண்டாம் என சொன்னேன் என்றார் அம்மா.
கார் வந்துவிட்டது, உங்க அப்பாவை கூப்பிடு அவர் செல்போனை காதுல வச்சாருன்னா எடுக்க மாட்டார் என்றாள் அம்மா.
அப்பா கார் வந்து விட்டது வாருங்கள் என்றான் ராஜா. ஏம்மா அக்காவ கூப்பிடல என ராஜா கேட்க, மாப்பிள்ளை வெளியே போய் இருக்கிறாராம். அதனால நம்மளை மட்டும் போய் பார்த்துவிட்டு வர சொன்னா, நமக்கு பிடித்திருந்தால் பிறகு அவர்கள் வருகிறேன் என்று சொன்னார்கள்.
சித்தி, சித்தப்பா அங்கே நிற்கிறார்கள் மா
வாங்க வாங்க என ராஜாவின் அம்மா அப்பா வரவேற்க காரில் ஏறி அமர்ந்து கொண்டார்கள்.
ஏதாவது சாப்பிடுறீங்களா என்ன ராஜாவின் அம்மா கேட்க சாப்பிட்டு வந்து விட்டோம் அக்கா என்றாள் தங்கை கல்பனா.
பெண் வீட்டில் போய் இறங்கியவுடன் அனைவரும் வரவேற்றார்கள்.
சிறிது நேரம் உரையாடல் நடந்தது. பிறகு பெண்ணை வரச் சொன்னார்கள்.
பெண்ணை பார்த்த ராஜாவின் அம்மாவிற்கு பகீர் என்றது. கருப்பாக இருக்கின்றார் என பார்த்த உடனேயே முகத்தை சுளித்தாள்.
ராஜாவை திரும்பி பார்த்த அம்மா வேண்டாம் என கை ஜாடையில் சொன்னாள்.
பெண் பெயர் ரோஜா என்று சொன்னார்கள், ரோஜாவுக்கும் பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது.
பொக்கே ஷாப் போட்டு மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கின்றார், எங்களுக்கு ஒரே பெண் தான் உங்கள் சம்மதம் ஓகே என்றால் அடுத்த மாதத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பெண்ணின் அப்பா சொன்னார்.
நாங்கள் வீட்டில் கலந்து ஆலோசனை பண்ணிவிட்டு உங்களுக்கு போனில் அழைக்கின்றேன் என்றார் ராஜாவின் அப்பா.
ஒன்றும் அவசரம் இல்லை, உங்கள் குடும்பத்தைப் பற்றி விசாரித்தேன், நல்ல குடும்பம் என்று தெரிந்தது. அதனால தான் உங்களை பெண் பார்க்க வர சொன்னேன் என்றார் பெண்ணின் அப்பா.
பெண்ணை பெத்து வச்சிருக்க பாரு கருகருன்னு, இதுல என்னுடைய குடும்பத்தை விசாரிக்கிறார் என மனதிற்குள் திட்டியவாறு ராஜாவின் அம்மா அமர்ந்திருந்தார்.
சரி நாங்கள் கிளம்புகின்றோம், அடுத்த வாரத்தில் ராஜாவின் அக்கா இருக்கிறார், அவரை அழைத்துக்கொண்டு நல்ல செய்தியுடன் வருகிறேன் என கிளம்பினார்கள்.
போகும் வழியில் ராஜாவின் அம்மா இந்த பொண்ணு வேண்டாம் பா ரொம்ப கருப்பா இருக்கிறா என்றார்.
அம்மா, நீங்க எத்தனை பொண்ணு பாத்துட்டீங்க, ஒவ்வொரு பெண்ணிடமும் ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றீர்கள், இது சரி இல்லை அம்மா.
உங்க பெண் ரொம்ப சிகப்பாக இருக்கின்றார்களா, நிறம் குறைவு தானே, மாமா எவ்வளவு கலராக இருக்கின்றார்கள், அவர்கள் நினைத்திருந்தால் உங்களுடைய பொண்ணை வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அவர்கள் வந்து பார்த்த உடனே பிடித்துப் போய் விட்டது என்று தானே சொன்னார்கள் என்றான் ராஜா.
இப்ப என்னடா சொல்ற என சித்தி கேட்க
நான் இந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறேன், எனக்கு பிடித்திருக்கிறது என்றான் ராஜா.
உனக்கு பிடித்திருந்தால் ஓகே ராஜா, வீட்டுக்கு சென்றவுடன் நல்ல தகவலை பெண் வீட்டாரிடம் சொல்லி விடுவோம். அடுத்த வாரத்தில் உன்னுடைய அக்காவை அழைத்துக் கொண்டு நிச்சயம் செய்து கொள்வோம் என்றார் ராஜாவின் அப்பா.
எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings