in ,

நினைவோ ஒரு பறவை! (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

வீடெல்லாம் பிடித்திருக்கிறது, சாயங்காலமா உங்க கணவர் வந்ததுக்கப்புறம் நாங்கள் அட்வான்ஸ் கொண்டு வந்து கொடுக்கிறோம், வேற யாருக்கும் விட வேண்டாம் என பவித்ரா அந்த வீட்டுக்காரம்மா செல்வியிடம் சொன்னார்கள்.

நான் இந்த வீட்டில் வேலை செய்யும் பெண். சந்துரு என்னுடைய கணவர் அல்ல, தூரத்து உறவுமுறையில் அவர் எனக்கு தம்பி முறையாவார் என்றாள் செல்வி.

சாரிமா தெரியாம சொல்லிட்டேன் என பவித்ரா சொல்ல, தெரியாமல் தானே சொன்னீர்கள் பரவாயில்லை. நான் சந்துரு வந்தவுடன் சொல்கிறேன், நீங்கள் அவசியம் மாலையில் வந்து விடுங்கள் என சொன்னாள் சந்துரு வீட்டில் வேலை செய்யும் பெண் செல்வி.

மாலை வீட்டுக்கு சந்துரு வந்தவுடன்  வீட்டை ஒருவர் பார்த்து விட்டு சென்றதாகவும் மாலையில் உங்களை பார்க்க வருவதாகவும் சொல்லி விட்டு சென்றார்கள். வீடு ஓகே என்று சொல்லிவிட்டார்கள். சாயங்காலம் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுப்பதாக சொன்னார்கள் என்று சொன்னாள் செல்வி.

அவர்களைப் பற்றி ஏதேனும் விசாரித்தியா என்று சந்துரு கேட்டதற்கு, நான் ஒன்றும் விசாரிக்கவில்லை சந்துரு, வந்தவர்கள் நடுத்தரமான வயது தான் என்று சொன்னாள் செல்வி.

சரி வந்தா பார்த்து பேசிக்கலாம், என்று பேசிக் கொண்டிருக்கும் போதே கதவை தட்டினார்கள். கதவைத் திறந்த செல்வி காலையில் வீட்டை பார்க்க வந்தவர்கள் தான் வந்திருக்கிறார்கள் சந்துரு என்று சொல்ல உள்ளே வரச் சொல் என்று சொன்னான் சந்துரு.

செல்வி வந்தவரிடம் ஏன் சார் அம்மாவை கூட்டி வரலையா எனக் கேட்க, இல்லம்மா அவங்க தான் காலைல வந்து பார்த்துட்டு போய்ட்டாங்களா, அதனால் தான்  வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

அட்வான்ஸ் மட்டும் தானே கொடுக்க போறோம், அதனால் நான் மட்டும் வந்தேன் என்றான் பவித்ராவின் கணவர் பரத்.

செல்வி,  சும்மா வளவளன்னு பேசிட்டு இருக்காத, போய் காபி போட்டு எடுத்துட்டு வா என்று சந்துரு  சொல்ல, சரி என்ன தலையாட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

பரத்திடம் நீங்கள் யார்?  எந்த ஊர்? என சொல்ல மனைவியின் பெயரையும், ஊரையும் சொன்னவுடன் அவர்கள் அப்பா தலைமை ஆசிரியரா என்று சந்துரு கேட்க ஆமாம் என்று சொன்னான் பரத்.

பவித்ராவும்,  கணவரும் தான் வீட்டை பார்க்க வந்திருக்கிறார்கள் என்று மனதில் நினைத்தான் சந்துரு

உங்களுக்கு அவர்களை தெரியுமா என்று பரத் கேட்க, எங்களுடைய சொந்த ஊரும் மயிலாடுதுறை தான், என்று சொல்லிக் கொண்டே இருக்க நினைவுகள் பின்னோக்கி சென்றது.

பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது  சந்துரும்,  பவித்ராவும் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள். எப்படியோ பவித்ராவின் அப்பாவிற்கு தெரிந்து சந்துருவை ஊரைவிட்டே குடும்பத்துடன் அடித்து விரட்டி விட்டார்.

அப்பா இல்லாத ஏழைகுடும்பத்தை சேர்ந்தவன் சந்துரு. பவித்ராவின் அப்பாவிற்கு பயந்து ஊரை விட்டு தன்னுடைய ஒரே மகனை அழைத்துக் கொண்டு வெளியேறி விட்டாள் சந்துருவின் அம்மா.

சந்துருவிடம் நல்லா படிக்கிற உனக்கு எதுக்குடா இந்த புத்தி,  பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் தேவையா? நீ அவளை மறந்து விடு இல்லாவிட்டால் நான் உயிரை விட்டு விடுவேன்.  நான் சந்திக்க மாட்டேன் என சத்தியம் செய்து கொடு என்று சொல்ல தாயிடம்  நான் பவித்ராவை பார்க்க மாட்டேன் என்று சத்தியம் செய்தான் சந்துரு.

அதன் பிறகு படிப்பு வேலை என சென்று விட்டதால் கல்யாணத்தை பற்றி நினைக்கவில்லை. காலப்போக்கில் அம்மாவும் இறந்து விட்டார்கள்.

ஆராய்ச்சிக்காக அமெரிக்காவுக்கு சந்துரு செல்ல இருப்பதால் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு போகலாம்  என நினைத்தான்.

சார் என பரத் அழைக்க, மீண்டும் தன்னுடைய சுய நினைவுக்கு வந்தான் சந்துரு.

ஏதோ ஒரு ஞாபகம், நான் இந்த வாரத்தில் அமெரிக்கா  கிளம்பி விடுவேன்.  சாவியை செல்வியிடம் கொடுத்து செல்கிறேன். நீங்க வாங்கிக் கொள்ளுங்கள்.

வருவதற்கு ஐந்து வருடங்கள் ஆகலாம், உங்கள் சௌகரியத்தை பார்த்து நீங்கள் இருந்து கொள்ளலாம் என சொன்னான் சந்துரு.

சரிங்க சார், அட்வான்ஸ் வாங்கிக் கொள்ளுங்கள் என்ற அட்வான்ஸ் பணத்தை கொடுத்துவிட்டு சாவியை கொடுத்து விட்டு செல்லுங்கள், நான் வாங்கிக் கொள்கிறேன் என்றான் பரத்.

சந்துரு அட்வான்ஸ் வாங்கியதும் பரத் சென்றுவிட மனதில் பவித்ராவை பார்க்க வேண்டும் என்ற ஆசைகள் இருந்தாலும் அம்மாவிற்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஊருக்கு கிளம்புவதற்கு தயாரானான் சந்துரு.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புரிதல் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    தலைமுறை தாண்டிய நேசம் (பேரிளம் பெண்) (சிறுகதை) – வைஷ்ணவி