in ,

நேற்றைய நான் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

காலையில் கண் விழிக்கும் போதே சந்தோஷமாய் இருந்தது முரளிக்கு.  இன்று ஏழாம் தேதி.  தன் முதல் சம்பளத்தை வாங்கப் போகிறான். இப்போதிருந்தே கனவு காண ஆரம்பித்தான்.

“ஈவினிங் ஆபீஸிலிருந்து நேரா அந்த “அகிலா ஷூ மார்ட்” போறோம்!… கண்ணாடிக் கூண்டுக்குள் உட்கார்ந்திருக்கும் அந்த மெரூன் நிற ஷூவை… என்ன விலையானாலும் சரி, வாங்கறோம்!” மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டான்.

இருக்காதா பின்னே?… எத்தனை வருடத்திய கனவு அது?. கல்லூரிக் காலத்தில் பணக்கார மாணவர்கள் மட்டுமே அணிந்து வரும் அந்த மெரூன் நிற ஷூவைப் பார்த்துப் பார்த்து ஏங்கியிருக்கான். அதே போல், வேலையில்லாப் பட்டதாரியாய்த் திரிந்த காலத்தில் தினமும் அந்த ஷூ கடை முன் சென்று, அந்த மெரூன் நிற ஷூவை ஏக்கம் வடியப் பார்த்துக் கொண்டு நிற்பதை, இப்போது நினைத்தாலும் அவனுக்குள் சுய பச்சாதம் ஏற்பட்டது.

வாழ்க்கையில் யார் யாரோ… ஏதேதோ லட்சியத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அதற்காகப் பாடுபடுவார்கள். ஆனால் இவன்?… அந்த மெரூன் நிற ஷூவை வாங்குவதே தன் வாழ்க்கையின் லட்சியம், என்கிற வெறியோடு வேலை தேடி அலைந்தான்.  திரிந்தான். கடைசியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தே விட்டது.  இதோ… இன்று முதல் சம்பளம் வாங்கப் போகிறான். நெடுநாள் லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளப் போகிறான்.

அந்த மாலை… வழக்கமான மாலையாக இல்லாமல் அது பொன் மாலைப் பொழுதாய்த் தோன்றியது அவனுக்கு.

அகிலா ஷூ மார்ட். அங்கிருந்த சேல்ஸ்மேனிடம் கெத்தாய் அந்த மெரூன் நிற ஷூவைக் காட்டினான் முரளி. அவன் அதை எடுத்து வந்து தன் காலில் மாட்டி விடும் போது கண்களை மூடி அந்த அனுபவத்தை ரசித்தான். மகுடம் சூட்டப்படும் மன்னனின் மகிழ்ச்சி அவன் ரத்த நாளங்களில் பரவியது.  மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தான். தன் இரு கால்களிலும் மெரூன் நிற ஷூ.

“எந்திரிச்சு நடந்து பாருங்க சார்” சேல்ஸ்மேன் சொல்ல, நடந்தான். அவனுக்கே அது ராஜநடையாகத் தோன்றியது.

கௌண்டரில் பணம் செலுத்தி விட்டு, தன் கனவு ஷூ அடங்கிய அந்தப் பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியேறும் போது பெருமையாயிருந்தது முரளிக்கு. உலகமே தன் உள்ளங்கைக்குள் வந்து உட்கார்ந்தது போல் ஒரு மகிழ்ச்சியிருந்தாலும், மனதிற்குள் ஏனோ முழு திருப்தி ஏற்படவில்லை.

தெருவில் இறங்கிய முரளி, அங்கே ஒல்லியாய்… ஒடுங்கிய தாடிக் கன்னத்தோடு, இடுங்கிய குழிக் கண்களோடு, நின்று கொண்டிருந்த இளைஞனைக் கூர்ந்து பார்த்தான்.  அவனது கண்கள் எங்கோ நிலைக் குத்திப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அந்த இடத்தை நோக்கித் தன் பார்வையைத் திருப்பிய முரளி அதிர்ந்தான்.

அவன் பார்வை கண்ணாடிக் கூண்டுக்குள்  “பள…பள”ப்பாய் அமர்ந்திருந்த இன்னொரு மெரூன் ஷூ மீது படிந்திருந்தது.  டன் கணக்கில் ஏக்கம் சுமந்த பரிதாபப் பார்வை. அழுகையே வந்து விடும் போலானது முரளிக்கு.

“இவன் கண்ணில் தெரியும் ஏக்கத்தின் வலி எனக்குத் தெரியும்!… இவன் நேற்றைய நான் ஒரு காலத்தில் இவன் இடத்தில் நான் நின்றிருந்தேன். அப்போதெல்லாம் யாராவதொரு மகராசன் வந்து, அந்த மெரூன் ஷூவை வாங்கி, எனக்குப் பரிசாகக் கொடுக்க மாட்டார்களா? என்று அல்பத்தனமாய் நினைப்பேன்!…”

திடீரென்று அவனுக்குள் அந்த எண்ணம் உதித்தது. “ஏன்?… நானே அந்த மகராசன் ஆகக் கூடாது?”

சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த இளைஞனை நெருங்கி, அவன் தோளைத் தொட்டு, அந்த வழவழப்பான பெட்டியை அவனிடம் நீட்டினான் முரளி.

முகத்தில் கேள்விக் குறியோடு அவன் தயங்க, “வாங்கிக்கப்பா… உனக்கு என்னோட அன்புப் பரிசு” என்றான்.

நீண்ட தயக்கத்திற்குப் பின் வாங்கிக் கொண்ட அந்த இளைஞனிடம், “பிரிச்சுப் பாரு” என்றான் முரளி.

பிரித்துப் பார்த்தவன் “குபுக்”கென்று கண் கலங்கி, எதையோ சொல்ல வர, அதைக் கண்டு கொள்ளாமல் திரும்பி நடந்த முரளியின் மனம் முழு திருப்தியை எட்டியிருந்தது.  “அடுத்த சம்பளத்தில் எனக்கு வாங்கிக்கலாம்”

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 17) – ”கவி இமயம்” இரஜகை நிலவன்

    பழனி பாத யாத்திரை அனுபவம் 1 (ஆன்மிகம்) – வைஷ்ணவி