in ,

மகனின் கனவு (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ஏண்டா, இரண்டு நாளாக ராமு ஸ்கூலுக்கு வரல, யாருக்காவது தெரியுமா என வகுப்பு ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

மாணவர்கள் தெரியவில்லை சார் என்று  பதில் அளித்தார்கள். ராஜா,  நீ ராமுவின் வீட்டின் அருகில் தானே வசித்துக் கொண்டிருக்கிறாய்.  நாளைக்கு வரும்போது ராமுவை பார்த்து விட்டு என்ன காரணம் என கேட்டுட்டு வா என்றார் வகுப்பு ஆசிரியர்.

சரிங்க சார்,  என்று சொன்னான் ராஜா.

ராஜா பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது ராமு வீட்டிற்கு சென்றான். அப்போது ராமு வீட்டில் இல்லை.  ராமுடைய சித்தி தான் இருந்தார்கள். அச்சச்சோ இந்தம்மா இருக்குறாங்களே ராமுவை காணமே, இந்த அம்மாவிடம் கேட்டால் சரியான பதில் சொல்ல மாட்டார்கள், எதையாவது சொல்லி சமாளிப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் ராமுவின்  சித்தி கல்பனா என்னடா ராஜா?  அங்கே நின்று கொண்டிருக்கிறாய் உள்ள வா என்று அழைக்க உள்ளே சென்றான் ராஜா.

தேர்வு அடுத்த வாரம் ஆரம்பிக்கிறது அல்லவா,  அதனால ராமுவிடம் நோட்டு வாங்கிட்டு போகலாம் என்று வந்தேன் என்றான் ராஜா.

ஓஹோ!  அப்படியா, இனிமேல் ராஜா பள்ளிக்கு வரமாட்டான், அவன் படிச்சு முடிச்சு கலெக்டர் உத்தியோகமா கிடைக்கப் போகுது, அவங்க அப்பா செய்கிற வேலையை மகன் செய்யப் போறான். இதற்கெல்லாம் படிப்பு தேவையில்லை அனுபவம் இருந்தாலே போதும் என்று சொல்லிக் கொண்டே ராமுவின் புத்தகப் பையை எடுத்துக் கொடுத்தான்.

இல்ல பரவாயில்ல,  நான் ராமுவிடம் பிறகு வந்து கேட்டு வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு தன்னுடைய வீட்டிற்கு கிளம்பி சென்றான்.

ராஜா தன்னுடைய அப்பாவை அழைத்துக் கொண்டு ராமுவின் அப்பாவை பார்க்க கடைக்கு சென்றான்.  அங்கே ராமு தன்னுடைய அப்பாவுக்கு உதவியாக கடையில் பஜ்ஜி போட்டுக் கொண்டிருந்தான்.

ராஜாவை பார்த்த உடனே ராமு மனதில் சோகத்தை வைத்துக் கொண்டு முகத்தில் சந்தோஷமாக இருப்பது போல காட்டிக் கொண்டிருந்தான்.

வாங்க,  வாங்க என இரண்டு பேரையும் வரவேற்று விட்டு ஆளுக்கு ஒரு தட்டில் இரண்டு பஜ்ஜியையும், இரண்டு டம்ளர் டீயையும் கொண்டு வந்து வைத்தார் ராமுவின் அப்பா.

எதுக்குங்க இதெல்லாம், வீட்டில் டீ குடித்து விட்டு தான் வருகிறோம் என்று சொல்ல பரவாயில்லை சாப்பிடுங்கள் என்று சொல்ல  இரண்டு பேரும் சாப்பிட்டுவிட்டு டீயும் குடித்தார்கள்.

ஏன்?  ராமு  இரண்டு நாட்களாக பள்ளிக்குப் போகவில்லை என்று ராஜாவின் அப்பா கேட்க பள்ளிக்கூடம் படிப்பதற்கு விடுமுறை  விட்டிருக்கிறார்கள் என்று அவன் தானே என்னிடம் சொன்னான் என்றார் ராமுவின் அப்பா.

ராமுவை கூப்பிட்டு, பள்ளிக்கூடம் இருக்கிறது என்கிறார்கள் நீ விடுமுறை என்கிறாயே என்று கேட்டதற்கு ராமுவின் கண்களில் இருந்து ஆறாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஏன்.. என்னாச்சு?  என்று கேட்க, சித்தி என்னை பள்ளிக்கூடம்  போவதற்கு எனக்கு விருப்பமில்லை என்று உங்களிடம் சொல்ல சொன்னார்கள்.  நான் எப்படியாவது சித்தியை சமாளித்து பள்ளிக்கூடம் சென்றுவிடலாம் என்று தான் உங்களிடம் விடுமுறை என பொய் சொன்னேன் என  அழுது கொண்டே சொன்னான்.

நான் உன் சித்தியிடம் பேசிக் கொள்கிறேன், என்னிடம் எதையும் மறைக்காமல் உண்மையை சொல். உன்னுடைய வாழ்க்கையை நான் வீணாக்கி விடக்கூடாது டா. நீ நன்றாக படிக்க கூடிய பையன். உன்னுடைய ஐஏஎஸ் கனவை நான் நிறைவேற்ற எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என சொல்ல, சரிங்க அப்பா,  நான் இனிமேல் உங்களை கஷ்டப்படுத்துவது போல் நடந்து கொள்ள மாட்டேன் என சொன்னான் ராமு.

சரிடா ராமு,  நாளைக்கு மறக்காம ஸ்கூலுக்கு வந்துடு என சொல்லிவிட்டு ராஜாவும் அவனுடைய அப்பாவும் தன்னுடைய வீட்டிற்கு கிளம்பினார்கள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இனி இல்லை இந்தக் கொலை (குறுநாவல் – பகுதி 4) – சுஸ்ரீ

    மதி வதனா (பகுதி 3) – ராஜேஸ்வரி