in ,

மதி வதனா (பகுதி 3) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2

கோவிலின் குளக்கரைப் படிகளில் வதனா, லலிதா,நூபுரா, விச்ராந்தி,விஜயா ஆகிய ஐவரும் பிரசாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

“பாவம் கிருஷ்ணன்…இந்த மார்கழி மாதம் முழுவதும்,…தினமும் ஒரே மாதிரி மிளகு பொங்கல் பிரசாதம். அவனுக்கு

அலுப்புத் தட்டாதோ?

யார் இதை ஆரம்பித்தார்கள் என்று தெரியவில்லை…

என்றாள் லலிதாங்கி சற்று கோபமாக..

“ஏனடி….கிருஷ்ணனுக்கு அலுப்புத் தட்டுகிறதா?…இல்லை உனக்கா?…என்றாள் விச்ராந்தி.

“எனக்கு தான் என்று வைத்துக்கொள்ளேன்…

சாதாரண மானிடப் பிறவி எனக்கே இப்படி இருக்கும்போது….அவன் பகவான் ….அதுவும் வெண்ணை தான் அவனுக்குப் பிடித்த உணவு. அதை நைவேத்யம் செய்யாமல் இந்த காரமான மிளகு பொங்கலை, அதுவும் தினமும் அளிக்கிறார்கள்.”

என்றாள் லலிதா வருத்தமாக…

“சரி…வதனா….உன் தந்தையிடம்

சொல்லி…. நாளை முதல் விதவிதமாக பிரசாதம் செய்ய சொல்கிறாள் லலிதாங்கி,என்று சொல்…..”என்றாள் விஜயமாலா

சிரித்தபடி.

“அதை விடுங்கள்…

அரண்மனை எப்படி இருக்கும்?….

அரசரையும், ராணியாரையும்

,பார்க்க முடியுமா? ….அவர்கள் நம்மிடம் பேசுவார்களா?…

இளவரசர்கள்..

இளவரிசிகள் இருப்பார்களா?

அவர்கள் நம்முடன் விளையாடுவார்களா?..

என்று கேள்விகளை அடுக்கிக்

கொண்டே போனாள் நூபுரா.

“இன்னும் சிறிது நாழிகையில்

தெரிந்து விடப் போகிறது”.

என்றாள் வதனா.

குழந்தைகளே, வாருங்கள்…குதிரை வண்டி வந்துவிட்டது…என்று அழைத்தபடியே சன்னிதானத்தின் நடையை பூட்டினார் கோவிந்த பட்டர்.

கிழக்கு கோபுர வாயிலில் அவர்களை ஏற்றிக் கொண்ட குதிரை வண்டி, வடக்கு வாயிலின் பக்கம் திரும்பி வேகமாக விரைந்தது.

வைகறை பொழுதின் இருளும்…. சூரிய உதயத்தின் முன் மெல்லிய வெளிச்சமும் கலந்த அந்த ரம்யமான பொழுதும்,…குளிர்ந்த காற்றில் தென்னங்கீற்றுகளின் வாசமும், நீர் நிறைந்திருந்த குளத்தில் தாமரை மொட்டுக்களும்,…. ஆனந்தமாக கீச் கீச் என்று சத்தமிட்டு பறக்கும் பறவைகளும் அவர்களை ஒரு புதிய இன்ப உலகத்திற்கு அழைத்துச் சென்றது. வண்டியின் வேகத்தினால் முகத்தில் போர்த்திய காற்றை ரசித்து ரசித்து அவர்கள் சிரித்த சிரிப்பின் அலைகள் வானை எட்டியது. குளிர்ந்த

காற்று தன் கைகளால் அவர்களின் கண்களை அழுத்தி மூட,…நித்திராதேவி அவர்களை அணைத்துக் கொண்டாள்.

சூரிய வெப்பம் முகத்தை இதமாக சூடேற்ற, விழித்தாள்

வதனச் சந்திரா. தோழிகளையும் எழுப்பினாள்.

பெரிய மாளிகை முன் வந்து நின்றது குதிரை வண்டி மாளிகையின் வாயிலில் இருந்த காவலர்களிடம் அழைப்பு ஓலையை பட்டர் காட்டிய பின் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

 மாளிகையின் உள்ளே சென்றதும் இரண்டு பெண்மணிகள் இவர்களை நோக்கி வந்தனர் வாருங்கள் வாருங்கள் என்று இவர்களை மகிழ்வோடு வரவேற்று இவர்களுக்கு உணவும் தங்கும் இடமும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

“இதுதான் அரண்மனையா..?” என்று கேட்ட லலிதாங்கியிடம் “இல்லை இல்லை…. இது விருந்தினர் தங்கும் மாளிகை அரண்மனை இன்னும் சற்று தள்ளி இருக்கிறது. நாளை ராணியாரிடம் அழைத்துச் செல்ல ஆட்கள் வருவார்கள்” என்று பணிவாக கூறிவிட்டு சென்றுவிட்டார்கள்.

“தந்தையே,…..நாங்கள் சிறிது நேரம் இந்த இடத்தை சுற்றிப் பார்த்து விட்டு வருகிறோம் சரியா….? என்று கேட்டாள் வதனா.

“சென்று வாருங்கள்…. ஆனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வழி மாறிப் போய் விடாதீர்கள்,…. விரைவாக வந்து விடுங்கள்”

என்று அவர்களுக்கு அனுமதி கொடுத்தார் பட்டர்.

மாளிகையை விட்டு இறங்கி இடது புறமாக திரும்பி பெரிய தெருக்களில் நிரம்பி இருந்த பெரிய பெரிய கடைகளை வேடிக்கை பார்த்தபடியே குதூகலத்துடன் சிரித்து பேசியபடி நடந்து சென்றனர்.

அந்தப் பெரிய கடைத் தெருவின் இறுதியில் இரண்டு பக்கமாக சாலை பிரிந்தது. இரண்டு பக்கமும் மிகப்பெரிய வெட்ட வெளியில் இடதுப்புறம் குதிரைகளின் சந்தையும், வலது புறம் யானைகளில் சந்தையும் நடந்து கொண்டிருந்தது.

“ஐ….. யானைகள், யானைகள்”…. என்று ஐந்து பேரும் ஆரவாரத்துடன் கோஷமிட்டனர்.

“ஏய்…. இந்தப்பக்கம் பாருங்கள் விதவிதமான குதிரைகள் எத்தனை இருக்கிறது பாருங்கள்… “என்று விஜயமாலா கூக்குரலிட்டாள்.

“எனக்கு யானைகள் என்றால் மிகவும் பிடிக்கும் முதலில் யானைகளை பார்த்து விட்டு , பிறகு குதிரைகளை பார்க்கலாம்…” என்றாள் வதனா.

“எனக்கு யானைகளையும் பார்க்க வேண்டாம் குதிரைகளையும் பார்க்க வேண்டாம்….. எனக்கு மாளிகைக்கு போக வேண்டும் எனைக் கொண்டு விடுங்கள்” என்றாள் அவர்களிலே மிகவும் இள வயதான நூபுரா.

“ஆமாம் இங்கு மிகவும் கூட்டமாக இருக்கிறது இதற்குள் நாம் செல்ல வேண்டாம் வாருங்கள் மாளிகைக்கு திரும்பலாம்” என்றாள் விச்ராந்தி.

“நீங்கள் மூவரும் மாளிகைக்கு செல்லுங்கள்,.. நானும் லலிதாங்கியும் சிறிது நேரம் யானைகளை பார்த்துவிட்டு வந்துவிடுகிறோம்…” என்று அவர்களை அனுப்பிவிட்டு வதனாவும், லலிதாங்கியும் கையை கோர்த்துக்கொண்டு யானைகளை ஆர்வமுடன் பார்க்க சென்றனர்.அந்த பரந்த பெருவெளியில் பெரிய பெரிய கூடாரங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன. கூடாரங்களின் முன் யானைகளை வைத்துக்

கொண்டு விலைக்கு

விற்றுக் கொண்டிருந்தனர்.

“எவ்வளவு பெரிய பெரிய யானைகளாக இருக்கின்றன…” என்று ஆச்சரியமுடன் கூறிக்கொண்டு பார்த்துக் கொண்டே வந்தனர் இருவரும்.

“இவைகள் எல்லாம் போர் யானைகளாக இருக்குமோ..? என்று கேட்டாள் லலிதா…

“பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது” என்றாள் வதனா.” அதோ பார்….. அந்த குட்டியானையை பார்… எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று லலிதா சுட்டிக்காட்டிய இடத்தில் வதனா தேடினாள்.

“வெகு தூரத்தில் இருக்கிறதே எப்படி கண்டுபிடித்தாய்…..? என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் வதனா.

“வா…. வா… அருகில் சென்று பார்க்கலாம்”என்று லலிதா வதனாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினாள்.

மண்ணில் கால் புதைய புதைய இருவரும் ஓடிக்

கொண்டிருக்கும் பொழுது…. திடீரென இவர்களின் எதிரே ஒரு கூட்டம் அலறிக் கொண்டு ஓடி வந்தது.

“எல்லோரும்… விலகுங்கள் விலகுங்கள் …..மதம் பிடித்த யானை ஒன்று பின்னால் ஓடி வருகிறது…. ஜாக்கிரதை……

ஜாக்கிரதை….”. என்று கத்திக் கொண்டே ஓடினார்கள் சிலர்.

“ஐய்யய்யோ….. “என்ற பயந்து இருவரும் திரும்பி ஓட யத்தனிக்க, பின்னால் வந்த கூட்டத்தில் இருவர் இவர்களை ஒரே தள்ளாக தள்ளிவிட்டு ஓடினர்.

தடுமாறி மண்ணில் விழுந்த இருவரும் ஓடும் கூட்டத்தின் நடுவே எழுந்து கொள்ள முடியாமல் தடுமாறினர்.

இரு கரங்கள் இவர்கள் மீது பதிந்தது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மகனின் கனவு (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 9) – வைஷ்ணவி