in ,

குடும்பம் ஒரு கதம்பம் (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

என்னுடைய சாமி ரூம் எவ்வளவு அழகா இருக்கு பாத்தியா என  ஊரிலிருந்து வந்த தோழி சித்ராவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் பத்மினி.

ஆமா, ஆமா அழகாத்தான் இருக்கு, எங்க வீட்ல இருக்குற சாமி அறையை நீ பார்த்தது கிடையாது, வீடு கிரகப்பிரவேசம் நடந்த போது நீ வந்தது. கிட்டத்தட்ட ஆறு வருடம் ஆகிவிட்டது, எத்தனை தடவை உன்னை கூப்பிட்டு விட்டேன், நீ வர மாட்டேன் என்கிறாய் என்றாள் சித்ரா.

எங்கடி வர முடிகிறது. நானும் பையனுக்கு பொண்ணு பார்த்துக் கொண்டிருக்கிறேன்,  பொண்ணு ஒன்றும் சரியாகவே அமைய மாட்டேங்குது. அவனுக்கும் வயசு 34 ஆகிவிட்டது என்றாள் பத்மினி.

ஏண்டி உன் மருமகனோட தங்கச்சி ஏதோ இருக்குதுன்னு சொன்னியே, அதை பார்த்து முடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாயே என்ன ஆச்சு என  சித்ரா கேட்க, அதெல்லாம் கேட்காதடி,  அது ஒரு பெரிய கதை.  அதை பிறகு ஒருநாள் சாவகாசமா சொல்கிறேன். 

அந்தப் பொண்ணுக்கு 24 வயது தான் ஆகிறது, என்னுடைய பையனுக்கு  வயசு ஜாஸ்தின்னு வேறொரு இடத்தில் பேசி முடித்து கல்யாணமே நடந்து முடிஞ்சிருச்சு என்றாள் பத்மினி.

யார் யாருக்கு எங்க பிராப்தம் இருக்கோ அங்க தான் முடியும், பையனுக்கு இன்னும் நேரம் வரலை என்று சொல்லிக் கொண்டிருக்காதே, நம்ம நினைக்கிறது அத்தனையும் எதிர்பார்க்க முடியாது. எதையாவது ஒன்றை விட்டுக் கொடுத்தால் தான் மற்றொன்றை பெற முடியும். நீ எதிர்பார்ப்பது போல ஒரே பெண் ஆக இருக்க வேண்டும்,  சொந்த வீடு இருக்க வேண்டும். படித்திருக்க வேண்டும்,  வேலைக்கு போக வேண்டும். திருமணத்தை ஜாம் ஜாம் என்று நடத்த வேண்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகளை போட்டால் என்ன செய்ய முடியும்? எனக் கேட்டாள் தோழி சித்ரா.

நாங்க வசதி வாய்ப்போடு தானே இருக்கிறோம்,  என் பையனுக்கு என்ன குறை, அவனும் லட்சங்களில் சம்பாதிக்கின்றான் அழகுக்கு என்ன குறைச்சல் என்று பத்மினி சொல்ல தோழி சித்ராவுக்கு கோபம் வந்தது.

இப்படியே சொல்லி சொல்லி பையனுக்கு 34 வயசு ஆகிவிட்டது. இனிமேல் உன் பையனுக்கு வயது அதிகமாக இருக்கிறது என்ன காரணம் காட்டி பொண்ணு கொடுப்பதற்கே யோசிப்பார்கள்.

எவ்வளவு விரைவில் நீ உன்னுடைய பையனின் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று நினைக்கிறாயோ நடத்தி விடு. நீ ஒவ்வொன்றாக பார்த்தால் இந்த ஜென்மத்தில் அவன் சன்னியாசியாக தான் வாழ வேண்டும் என்றாள் சித்ரா.

நீ எனக்கு ஆறுதல் சொல்வேன் என்று எதிர்பார்த்தால் என்னை சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது போல இருக்கிறது என்றாள் சித்ரா. 

நான் உண்மையைத் தானே சொல்கிறேன். எனக்கு பொய்யாக நடிக்கவும் தெரியாது,  பேசவும் தெரியாது. உன் பையனை விட என் பையனுக்கு நான்கு வயது குறைவு. எங்களுக்கு மட்டும் என்ன வசதி குறைவாகவா  இருக்கிறது. பொண்ணு நன்றாக இருக்கிறாள் படித்திருக்கிறாள், கூட பிறந்த சகோதரிகள்,  சகோதரர்கள் என பெரிய குடும்பத்தில் தான் நான் பெண் எடுத்தேன்.  நாளைக்கு என்னுடைய பையனுக்கு ஏதாவது ஒன்று என்றால் அந்த குடும்பமே தாங்கி பிடிக்கும். உனக்கு தான் ஒரே பொண்ணா இருக்க வேண்டும் என்று நினைக்கிறாய், உன்னுடைய கணவர் இறந்த போது உன் கணவரின் கூட பிறந்தவர்களும்,  உன் கூட பிறந்தவர்களும் தானே உன் குடும்பத்தை இந்த அளவுக்கு முன்னேற்றி வைத்திருக்கிறார்கள் என்றாள் சித்ரா.

சரி சரி நீ சொல்ற மாதிரி நானும் எதையாவது விட்டுக் கொடுத்து என் பையனுக்கு விரைவில் திருமணத்தை முடிக்கிறேன் என்று கூறினாள் பத்மினி.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைதேகி காத்திருக்கிறாள் (சிறுகதை) – வைஷ்ணவி

    மூக்கு நுனியில் வாழ்க்கை (சிறுகதை) – முகில் தினகரன், கோவை