in ,

கொஞ்சும் நிகழ்வு (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

‘காரமடை ரங்கநாதன்’ என்றால் சுத்துப்பட்டு எட்டு கிராமத்தில் யாரைக் கேட்டாலும் சொல்லிடுவாங்க. அவரின் மகள் ‘இளவரசி’யின் 16வது பிறந்த அன்று பிறந்தவள் ‘லட்சுமி’.

லட்சுமி அவர்களின் மாட்டுக் கன்னுக்குட்டி. பருவம் வந்ததும் ,கால்நடை மருத்துவர் வருவார் …சினை ஊசி ஒன்று போடுவார் …லட்சிமியும் ஒரு பொட்டக்கன்னு போட்டிடும் . பத்து வருடத்தில் பண்ணையே உருவாகிவிட்டது .

இளவரசிக்கு  திருமணம் முடிந்ததும் தந்தை வீட்டுச் சீராக லட்சுமியும் புது இடம் புகுந்தது …மூன்றாம் மாதம் இளவரசிக்கு வாந்தி மயக்கம் …மருத்துவ பரிசோதனையில் கரு உண்டானது உறுதியானது . அதே நேரத்தில் லட்சுமிக்கும் சினை ஊசி போடாப்பட்டது.

ஒரு வீட்டில் இரண்டு கருக்கள் வளர்ந்தன …இளவரசிக்கு இது பத்தாம் மாதம் …குழந்தை பிறப்பிற்கான நாள் நெருங்கிவிட்டது …இளவரசியை மருத்துவமனையில் சேர்த்து விட்டனர்… எந்நேரத்திலும் குழந்தை பிறந்திடும் என்பதால் இரு குடும்பத்தினரும் மருத்துவமனையிலேயே கிடந்தனர்.

லட்சுமியின் வீட்டிலிருந்து வேலைகாரன் ஒருவன் அவசரமாக ஓடிவந்தான்…வந்த வேகத்தில் மாடு கன்னுபோட முடியாம தவிப்பதாக சொன்னான் …

பிரசவ அறையில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு நர்ஸ் முகத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்…

வேலைக்காரனைப் பார்த்த ரங்கநாதன் …மாட்டைப் பார்க்க கிளம்பிவிட்டார் …

வேலைக்காரனும் ரங்கநாதனும் வீட்டுக்கு வந்து சேர்ந்த நேரம் …மாடு தரையில் படுத்துக் கொண்டிருந்தது …

ரங்கநாதன் …வேலைக்காரனிடம் … “ ஏப்பா …ஒரு கைபிடிச்சி அந்த மாட்டை எழுப்பு …லட்சுமி எந்திரிடா …எந்திரிடா …” என்று அவரும் குரல் கொடுத்தார்.

மெல்ல லட்சுமி எழுந்து நிற்க …தரையில் வந்து விழுந்தது ஒரு காளைக்கன்னு …ரங்கநாதனுக்கு முகம் சுருங்கிப் போனது .

அலைபேசி அடித்தது …அழைப்பு மருத்துவமனையில் இருந்து …அவ்வளவு உற்சாகமின்றி அழைப்பை ஏற்க ….மறுமுனையில் …இளவரசிக்கு பெண் ஆண் குழந்தை பிறந்ததாய் செய்தி …சுக பிரசவமாம் …நாளைக்கு காலியில வீட்டுக்கு வந்துவிடுவதாக தகவல் …

மறுநாள் …வீட்டிற்கு தாயும் சேயும் வந்ததும் …எதையோ பறிகொடுத்தது போல ரங்கந்தான் உட்கார்ந்து இருந்தார் …அவரிடம் பிள்ளையை நீட்டினார் …

இனியும் தாத்தா உன்னை உட்கார விடமாட்டேன் ..உன்னை விரட்ட வந்துட்டேன் என்பது போல சர்‌ர்…ரென்று அவர் முகத்தில் உச்சா அடித்தான்…

“வந்ததும் என்ன காரியம் பண்ணிட்டான் ….அடேய் திருட்டுப்பயலே” …என்று கொஞ்சும் நிகழ்வு ஆரம்பம் ஆனது…

மாட்டுக் கொட்டகையில் இருந்து லட்சுமி “அம்மா …!” என்று கத்தியது….தூரத்தில் கன்று அம்மா என்று கத்தியது …வியாபாரியுடன் நடந்த படி .

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நட்பு உடைந்தது (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

    சொல்லில் அடங்காத வாழ்க்கை (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்