“என்ன கவிதா இப்படி இளைத்து இருக்கிறாய்” என்ற கேள்வியை ஆயிரமாவது முறையாக அதே உறவினர் கேட்டார். கவிதாவோ அமைதியாக நின்றாள்.
அவரோ ‘இவளுக்கு கேட்கவில்லை போல’ என்று நினைத்து திரும்பவும் அதே கேள்வியை கேட்டார். இப்போதும் அவள் அப்படியே நிற்க, அந்த பெண்மணி கடுப்போடு சென்றார்.
தூரத்திலிருந்து இதெல்லாம் பார்த்து கொண்டு இருந்த அவள் கணவன் கதிரவன் அருகே வந்தான். “என்ன நடக்கிறது மேடம்?” என்று வினவ,
“வேறு என்ன செய்வது?” நான் என்ன விளக்கம் கூறினாலும் அவங்க கேட்க மாட்டாங்க அதான் நான் அமைதியாக இருந்தேன்” என்று பதில் கூறினாள்.
அவனோ கண்ணில் சிரிப்புடன் “ஆனாலும் என்னுடைய அத்தை பாவம்” என்று கூற,
“என்ன” என்று அவள் முறைக்க,
“சும்மாடா” என்று புன்னகை செய்ய, அதில் அவளும் இணைந்தாள்.
சில நேரங்களில் விளக்கம் கூறுவதைவிட, மெளனம் என்ற மொழியை பதிலாக தரலாம்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings