in ,

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

வசந்த், இப்படியே நாம்  எவ்வளவு நாள் திருட்டுத்தனமாக சந்தித்துக் கொண்டிருப்பது, எங்க வீட்டில் சீக்கிரம் வந்து பெண் கேளுங்கள் என்றாள் சுமதி.

கொஞ்சம் பொறும்மா? என் தங்கை விஜயாவுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அது முடிந்ததற்குப் பிறகுதான் நான் நம்முடைய கல்யாணத்தைப் பற்றி கேட்க வேண்டும் என்றான் வசந்த்.

இப்படியே ஆறு மாதமாக சொல்லி கடத்தி விட்டீர்கள், எங்க வீட்டில் எனக்கும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். நான் தான் இன்னும் கொஞ்ச நாள் இருங்க, இன்னும் கொஞ்சம் பணத்தை சம்பாதித்து கொள்கிறேன் என்று சொல்லி சமாதானப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறேன் என்றாள் சுமதி.

நீ உங்க வீட்டில் ஓப்பனாக சொல்ல வேண்டியது தானே,  நான் ஒருவரை காதலிக்கிறேன் அவரை கல்யாணம் செய்து கொள்கிறேன் என கேட்டான் வசந்த்.

அம்மா , அப்பா  இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள். அதனால் நம்முடைய காதலுக்கு எங்கள் வீட்டில் எதிர்ப்பு இருக்காது. நீங்கள் உங்க அம்மா அப்பாவிடம் சொல்லி எங்க வீட்டில் என்னை பெண் பார்க்க மட்டும் வந்தால் போதும் என்றாள் சுமதி

வேறு மாப்பிள்ளை பார்த்தால் உனக்குப் பிடித்திருந்தால் நீ திருமணம் செய்து.கொள்ள வேண்டியது தானே.. என்றான் வசந்த்.

பேசுவீங்க பேசுவீங்க ஏன் பேச மாட்டீங்க, நானா உங்களிடம் முதலில் ஐ லவ் யூ என்று சொன்னேன், நீங்கள் தானே எனக்கு ஐ லவ் யூ சொன்னீர்கள். பின்னாடியே சுற்றி சுற்றி வந்து என் மனதை  அபகரித்துக் கொண்டதும் இல்லாமல்,  பேச்சு வேற பேசுறீங்களா? என  செல்லமாக வசந்த் முதுகில் அடியை போட்டாள் சுமதி.

உன்னுடைய நாத்தனாருக்கு மாப்பிள்ளையை பேசி முடித்து விட்டார்கள், இன்னும் பத்து நாளில் நிச்சயதார்த்தம். அடுத்த ஒரு மாதத்தில் திருமண தேதியும் குறித்து விட்டார்கள் என்றான் வசந்த்.

இந்த இனிப்பான செய்தியை வந்தவுடன் சொல்லாமல் இவ்வளவு தாமதமாக சொல்கிறீர்களே என்று வசந்தின் காதை பிடித்து திருகினாள் சுமதி.

என்னைய எங்க பேச விட்ட, நான் சொல்வதற்குள்ளையே என்னைய ஆயிரத்து எட்டு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறே என்றான் வசந்த்.

இன்னும் சில நல்ல விஷயங்களும் வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது, தங்கைக்கு நாத்தனார் ஒருவர் இருக்கின்றார்களாம். அவர்களும்  பி ஆர்க் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

அந்தப் பொண்ணுக்கும் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று சொன்னார்களாம். என்னுடைய தங்கை தன்னுடைய வருங்கால கணவனிடம் எங்க அண்ணன் நல்லா ஸ்மார்ட்டா தானே இருக்கின்றார்கள், உங்க தங்கையே எங்க அண்ணனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிடுங்க என்று சொன்னாளாம்.

உடனே சுமதி கோபம் கொண்டு, பிறகென்ன ஐயா சம்மதம் சொல்லிவிட வேண்டியது தானே என்றாள்.

ஓகே.. சொல்லலாம் என்று தான் இருந்தேன். எனக்கும் விருப்பம் தான். அந்த பொண்ண பார்த்தா அவ்வளவு அழகா இருந்தா, சும்மா சொல்ல கூடாது, கலராகட்டும், முக லட்சணமாகட்டும் அனைத்துமே ரவிவர்மாவின் ஓவியத்தை ஞாபகப்படுத்துகிறது என்றான் வசந்த்.

உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள், எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. உங்களுக்கு ஒரு பொண்ணு கிடைக்கும்போது  எனக்கு ஒரு பையன் கிடைக்க மாட்டானா என்ன கோபப்பட்டு கிளம்பினாள் சுமதி.

உடனே வசந்த் அவள் கையைப் பிடித்து இழுத்து “என்ன கோபம் கொள்ளலாமா, என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா”  என்ன கிண்டல் அடித்து பேச கையை உதறினாள் சுமதி.

சுமதியின் துப்பட்டாவை பிடித்து இழுக்க, தடுமாறி வசந்த்ன் மடியில் விழுந்தாள் சுமதி. சுமதியின் கன்னத்தில் ஒரு முத்தத்தை பதித்து விட்டு  நம்முடைய கல்யாணத்திற்கு எங்களுடைய வீட்டில் சம்மதம் சொல்லிவிட்டார்கள். இந்த வாரம் உன்னுடைய வீட்டில் வந்து பெண் கேட்கப் போகிறோம் என்று வசந்த் சொல்ல

அப்போது முதலில் பேசியது எல்லாம் என சுமதி கேட்க

அதெல்லாம் சும்மா உன்னை வெறுப்பேத்துவதற்கான விளையாட்டு என்று சொன்னதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள் சுமதி.

எப்படிங்க உங்க வீட்ல சம்மதித்தார்கள் என்று சுமதி கேட்க

எல்லாம் என்னுடைய தங்கையின் உபயம் தான் என்று சொன்னான் வசந்த்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்! (சிறுகதை) – ஜெயலக்ஷ்மி

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 6) – முகில் தினகரன், கோவை