in ,

கலங்கி நிற்கிறேனடி, எழுந்து வா! (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

நம்ம குழந்தையை பார்த்துக்கோங்க, நான் பிழைக்க மாட்டேன் என தன் கணவன் சுந்தரிடம் புலம்பிக்கொண்டிருந்தாள் சுதா.

உனக்கு ஒன்றும் இல்லை சுதா எதையாவது  மனசுல போட்டு குழப்பிக் கொண்டு இருக்காதே.. நீ பயந்து போய் என்னையும் பயம் காட்டிக் கொண்டிருக்கிறாய் என்றான் சுந்தர்.

இங்கே சில மருத்துவ பரிசோதனைகள் இல்லை என்பதால் நான் உன்னை சென்னைக்கு கூட்டிக்கொண்டு போகிறேன்.  நான்  இன்றே கூட்டி போகிறேன் என்று சொன்னதற்கு இன்று வேண்டாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய சில முதலுதவி எல்லாம் தயார் செய்து அனுப்ப வேண்டும் கூடவே என்னுடைய டாக்டர் ஒருவர் வருவார் என்றார் மருத்துவர். அதை பற்றி தான் டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

நீங்கள் சொல்வதை எல்லாம் நான் நம்ப வேண்டும், சாகப் போகிற எனக்கு எதற்காக செலவு செய்து கொண்டிருக்கிறீர்கள், செலவு செய்தது வரை போதும்.  மேற்கொண்டு செலவு செய்யாதீர்கள்.

குழந்தையை உங்களிடம் விட்டு செல்கிறேன்.  நல்ல முறையில் வளர்த்து அந்த குழந்தையை காப்பாற்ற வேண்டும். இதை ஒன்றை மட்டும் தான் உங்களிடம் கேட்கின்றேன் என தன் கணவனின் கையைப் பிடித்துக் கொண்டு அழுதாள் சுதா.

 நான்கு வயதான நம்  குழந்தைக்கு பசி என்பது கூட தெரியாது.  அதனால் நீங்கள் அவனுடைய பசி அறிந்து சாப்பாட்டை நேரா நேரத்துக்கு தவறாமல் ஊட்டி விடுங்கள் என சுதா சொன்னவுடன் சுந்தர் அவளின் கையைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதான்.

எதற்காக அழுகிறீர்கள், நீங்களும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக என்னுடன் போராடிக் கொண்டு தானே இருந்தீர்கள், மருத்துவ செலவு எவ்வளவு செய்து இருக்கிறீர்கள், என்னை குணப்படுத்த வேண்டும் என்று எவ்வளவோ மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக எத்தனை முறை என்னை அழைத்துக் கொண்டு வந்தீர்கள்.

கடவுள் மனம் இறங்கவில்லையே, அதற்காக என்ன பண்ண முடியும் என பேசிக்கொண்டு இருக்கும் போதே நான்கு வயது குழந்தை அனுஷ்கா தன் மாமாவுடன் அம்மாவை பார்க்க மருத்துவமனைக்கு வந்தாள்.

அம்மாவை பார்த்ததும் எதற்கும் அழுகிற, நீ சாமியை  தானே பாக்க போற, பார்த்துட்டு வந்துடுமா, நான் அது வரைக்கும் அப்பா  கூட பத்திரமாக இருக்கிறேன்.

நான் சாப்பிட்டுக் கொண்டு அப்பா கிட்டயும் மாமா கிட்டயும் சமத்தா இருப்பேன்.  நீங்க போயிட்டு சீக்கிரம் வந்துடுங்க என்று  சொல்ல குழந்தையை கட்டிப்பிடித்து அழுதாள் தாய் சுதா.

மனைவி அழுவதை பார்த்த சுந்தர் குழந்தை முன் அழுக கூடாது என்பதால் பாத்ரூமில் கதவை மூடிக் கொண்டு கதறி அழுதான் சுந்தர்.

மனதை கொஞ்சம் சமாதானப்படுத்திக் கொண்டு வெளியே வந்த சுந்தர் மனைவியின் கண்களை பார்த்ததும் என்னமோ நடக்கப் போகிறது என்பதை அறிந்து தன்னுடைய மச்சானிடம் மருத்துவரை அழைத்து வர சொன்னான்.

சுதா,  சுதா என் மனைவியை அழைத்துக் கொண்டே இருக்க தன்னிலை மறந்து அவள் கண்ணை மூடிவிட்டாள்.

மருத்துவர்  பரிசோதனை செய்த பிறகு இறந்து விட்டதாக சொல்ல கதறி அழுதனர் இரண்டு பேரும்.  நான் என்ன செய்யப் போகிறேன்,  இப்படி எங்களை தவிக்க விட்டுட்டு போயிட்டியே என்று கதறி அழுதான் சுந்தர்.

கண்ணை முழிக்கலைன்னா அனுஷ்கா பாப்பாக்கு பசிக்குதுன்னு சொல்லுங்க  அப்பா,  உடனே எழுந்து உட்கார்ந்துக்குவாங்க அம்மா என்று குழந்தை சொல்ல செவிலியர், மருத்துவர் உட்பட அனைவரும் குழந்தையின் பேச்சைக் கேட்டு கலங்கி நின்றனர்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 4) – வைஷ்ணவி

    பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 5) – வைஷ்ணவி