in , ,

காதல் கண் கட்டுதே ❤️ (அத்தியாயம் 6) – நேத்ரா பாலாஜி

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

திருமணத்திற்கு பிறகு 3 நாள் கழித்து, சுகுமாரனின் பெற்றோர்கள் மற்றும் சில உறவினர்கள் சுகு, மலரை புகுந்த வீட்டிற்கு அழைத்து செல்ல வந்திருந்தனர்.

வேலுச்சாமி தன் ஒரே செல்ல மகள் மலரை பிரிவதை எண்ணி மனம் கலங்கினார்😥..குழந்தையை போல் அழ😭 ஆரம்பித்தார். தன் உயிரை  பரிவதுப்  போன்று ஒரு உணர்வு. அவர் மனம் கனத்தது💗…

சில பேரின் உருவத்திற்கும், உள்ளத்திற்கும் சம்பந்தமே இருக்காது….பார்க்க கருடுமுரடான தோற்றம் உள்ளவர்களாக இருந்தாலும் மனதளவில் ஒரு குழந்தையைப் போல் கள்ளம் கபடம் இல்லாமல் இருப்பர்….வேலுசாமி அந்த ரகத்தை சேர்ந்தவர்.💔.. 

மணியனும் அதே மனநிலையில் தான் இருந்தான்💗…அவரும் மலருக்கு இது நாள் வரையில் தந்தையின் ஸ்தானத்தில் இருந்து பாசத்தையும், பாதுகாப்பையும் தந்தவர் அல்லவா😔…

மாமா இதோ இருக்குற பக்கத்து ஊருக்கு தானே நாங்க போக போறோம்.. நீங்க கவலைபடாதீங்க…. மலர நான் பத்திரமா பாத்துக்குறேன் என்று வாக்களித்தான் சுகு….

அவன் பெற்றோரும் வேலுசாமியிடம் மலர் எங்க மருமக இல்ல  எங்க மக….நீங்க கவலைப்படாதீங்க …உங்களுக்கு எப்போ பாக்குணும் தோணுதோ சொல்லுங்க அனுப்பி வைக்கிறோம்… 

இல்லையா நீங்க எப்ப வேணுமுனாலும் வந்து பாக்குலாம் அது உங்க வீடு🏘 மாதிரி என்று ஆறுதல் சொல்லி அவரை சமாதானம் செய்த மனநிறைவோடு அனைவரும் கிளம்பினர்…

மணியனிடம் அப்பாவ பத்திரமா பாத்துக்கோங்க, B.P, sugar மாத்திரை 💊எல்லாம் சரியா  வேளா வேளைக்கு கொடுங்க என்று கண்ணீருடன் 😪சொல்ல…

நான் பாத்திக்குறேன் பாப்பா…. நீ பத்திரமா இரும்மா என்று பதிலுக்கு கண்ணீர் 😪சிந்தினான் மணியன்…

தோட்டத்தில் காளையன், 🐂கண்ணமாவை🐄 பார்க்க சென்றனர் சுகுவும், மலரும், கண்ணாம்மாவின் வயிறு லேசாக பெருத்திருந்தது, அதை வருடியவாரு போயிட்டு வரேன் 🐄கண்ணம்மா, காளையா 🐂என்று அழுதாள்😭மலர்…இரண்டும் பூம் பூம் னு தலையாட்டிக் கொண்டன அதன் கண்களிலிருந்து கண்ணீர் 😪😪வடிந்தன….

கனத்த இதயத்துடன்💔 பிரியாவிடைக் கொடுத்தாள்👋🏻 புகுந்த வீட்டில் வாழப்போகும் கனவுகளை சுமந்துபடி புறப்பட்டாள் மலர்…

இங்கே சுகுமாரனின் வீட்டில் 🏘அவர்களை மருமகளே! மருமகளே! வா! வா! 👣 உன் வலது காலை 👣எடு்த்து வைத்து வா! வா! என பாட்டு பாடி ஆரத்தி எடுத்து வரவேற்றனர்💐💐…

அழகான குட்டி அரண்மனைப் போன்று இருந்தது சுகுவின் வீடு🏘..பெரிய தோட்டம், அங்கே நிறைய செடிகள் 🌹🌷பூத்துக் குலுங்கின, தோட்டத்தின் நடுவில் அழகான ஒரு பெளடைன் (fountain). அதிலிருந்து எந்நேரமும் நீர்விழுச்சிப் 🌊💧போல் தண்ணீர்💦  கொட்டிக் கொண்டிருந்தது… பக்கத்தில் அழகான வேலைபாடுகளுடன் பெரிய மரஊஞ்சல்….

இவை அனைத்தையும் தாண்டி ஒரு பழைய காற்படிந்த வீடு 🏛10க்கு 12 சதுரடியில் இருந்தது…

வீட்டை, தோட்டத்தை சுற்றிப் பார்த்த  மலரை, என்ன மலர் வீடு பிடிச்சிருக்கா என்று சுகு கேட்க…

ம், ரொம்ப பிடிச்சிருக்கு சுகு… அதை விட இதோ இங்க இருக்குற ஊஞ்சல், பெளடைன், பூ 🏵💮🌸🌹🌷🌼செடிகள் எல்லாமே சூப்பர் 👌🏻👌🏻..என்று பேசிக் கொண்டே அந்த பாழடைந்த வீட்டின் 🏛அருகே செல்ல முயன்றாள்..

அதை பார்த்த சுகு பெரிதாக திடிக்கிட்டான்😲…ஏய்! மலர் அங்க போகாதே! என்று விருட்டென்று அவள் கையை பற்றி🤝🏻 இழுத்து மறுபக்கம் அழைத்து வந்தான்…

ஐயோ!😣 சுகு விடுங்க என் கை …ஆஹா! வலிக்குது … ஸ்ஹாாா,😧 எவ்வளவு அழுத்தமா பிடிச்சி இழுதீங்க என்று தன் கையை தொட்டு தடவிய படியே வலியால் கத்தினாள்…. 

சாரி! மலர் ரொம்ப அழுத்தமா பிடிச்சுட்டேனா என்று மலரின் கையை பிடித்து தடவிக் கொடுத்தான்…ஐயோ! என் மலரோட பட்டு கை சிவந்திடுச்சே! சாரி! டீ செல்லம்😘….மாமா எப்பவுமே அழுத்தமா பிடிச்சிடுறேன்ல என்ன பண்றது உன் மேல உன் மாமாவிற்கு அதிகம் பாசம் என மலரை கொஞ்சியபடி சமாதானம் செய்தான்…

மலர் தன் கையை வருடியவாறு சமாதானம் செய்துக் கொண்டிருந்த சுகுவின் கையை தட்டிவிட்டு, சுகுவை பார்த்து செல்லமாக முறைத்தாள்😏…பிறகு அவனிடம் ஏன்! அங்க போன என்ன?  பேயா☠💀👹 பார்த்த மாதிரி அலறீங்க😳😲😱

அங்க என்ன பேயா இருக்கு? என மலர் கேட்க சுகுவின் முகம் சட்டென மாறியது🙁…

என்ன சுகு..நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க…என்ன இருக்கு அங்க? என்று திரும்பவும் கேட்டாள் மலர்… 

ஒன்னுமில்ல மலர் ….அது தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுற மோட்டர் ரூம்…ரொம்ப பழைய ரூம்… அதான் அழுக்கா, டஸ்டா இருக்கும்…உனக்கு ஒத்துக்காதுல…. அதுவுமில்லாம ஏதாவது பாம்பு 🐍கீம்பு இருக்குப் போகுதோனு தான் உன்ன அங்க போகவேனாணு சொன்ன என்று வாய்க்கு வந்ததை  சொல்லி சமாளித்தான்…

பயத்தில் சுகுவின் முகம் முழுக்க வேர்வை😥 துளிகள்…அதை பார்த்த மலர் பதறியபடியே என்ன சுகு ….இங்கு சிலுசிலுனு காத்து வருது ஆனா உங்க முகம் இப்படி வேர்த்திருக்கு😥 என்று சொல்லி அவள் முந்தானையால் அவன் முகத்தை துடைத்து விட்டாள்…

அதற்குள் சுகுவின் அம்மா… மலர் இங்க கொஞ்சம் வந்துட்டு போமா என்று அழைக்க இதோ வரேன் அத்தை என்று ஓடினாள்….

அங்கே மலரை அழைத்து சமையல்காரி, தோட்டக்காரன், வீட்டு வேலைக்காரி, வீட்டு வாட்ச்மேன் என்று எல்லோரையும் மலருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் மாமியார் மரகதம்..

எல்லோருக்கும் புன்னகை ஒன்றை பதில் மரியாதையாக கொடுத்துக் கொண்டிருந்தாள் மலர்… சட்டென்று எதையோ பார்த்து மலரின் முகம் மாறி, பயத்தை வெளிப்படுத்தியது…அவள் உடல் நடுங்கியது… அவள் முகம் மாறுவதை கண்ட, மாமியார் மரகதம் …அவள் பார்வை சென்ற திசையை நோக்கினாள்…. 

அங்கே! எதை பார்த்து மலரின் முகம் மாறியது, ஏன் அவள் உடல் நடங்கியது..😨😧

அவள் அங்கே எதை பார்த்தாள்? 😟 அங்கே! அப்படி என்ன தான் இருக்கிறது? 🤔

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதல் கண் கட்டுதே ❤️ (அத்தியாயம் 5) – நேத்ரா பாலாஜி

    நீங்களும் வசீகரன்தான் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்