in , ,

காதல் கண் கட்டுதே ❤️ (அத்தியாயம் 2) – நேத்ரா பாலாஜி

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மணியனுக்கு மனம் வலித்தது. 3வயது குழந்தையிலிருந்து தூக்கி வளர்த்த குழந்தை அல்லவா மலர்…

இதுநாள்வரை தாயில்லாத கவலையே தெரியாமல் வளர்த்து வந்தான்…மலர் கேட்டு முடியாது என்று எதையும் அவன் மருத்ததில்லை… 

மலர்க்கு ஐஸ்கீரீம் என்றால் உயிர். ஆனால் அவள் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாததால் மலரின் தந்தை வேலுசாமி ஐஸ்கீரீம் சாப்பிட அனுமதிக்க மாட்டார்…

அப்போதெல்லாம் மணியன் தான் வேலுசாமிக்கு தெரியாமல் மலருக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தருவார்.. 

அவளுக்கு காய்ச்சல் வந்தால் வேலுசாமியிடம் திட்டு்ம் வாங்கி கொண்டு மலரை இரா பகலாக பார்த்துக் கொள்வான் மணிகண்டன்…

இன்றோ மலர் அழுதுக்கொண்டு 😭சாப்பிடாமல் அவள் அறையில் முடங்கி கிடந்ததை பார்க்க🙇🏻 முடியாமல் தவித்தான் மணியன்..

சரியாக 10 நாள் கழித்து சுகுமாரன் வந்தான்… அவன் முகத்தில் மீசை ஒரளவு வளர்ந்திருந்தது. இன்னும் 21 நாட்கள் இருக்கிறதல்லவா… முதலில் 2வது கண்டிஷனை நிறைவேற்ற மலரின் தோட்டத்திற்கு சென்றான்.. 

அங்கே மலர், வேலுசாமி, மணியன், மற்றும் வீட்டு தோட்டத்தில் வேலை செய்பவர்கள் அனைவர் முன்னிலையிலும் இளவட்ட கல்லை தூக்கி 1 நிமிடம் சுமந்தான்…

பார்த்த அனைவருக்குமே ஆச்சரியம்😲😳😱 மலருக்கு மயக்கமே 😴வருவதுப் போலிருந்தது..

அடுத்த 15 நாட்களுக்கு பிறகு, அதாவது 25 தேதியன்று அனைவரின் முன் காளையனையும் 🐂அடக்கினான்… 

முதலில் காளை 🐂முரண்டு பிடித்தாலும் திடீரென்று அடங்கிப் போய்விட்டது சுகுமாரனிடம்… 

அதை அடக்கிய பின் வேலுசாமியின் முன் கம்பீரமாக நின்றான்… இந்த முறை நன்றாகவே வளர்ந்திருந்தது சுகுமாரனின் மீசை ..

இன்னும் கொஞ்சம் சூருள் வந்தால் போதும் அப்படியே வேலுசாமியின் மீசைப் போன்றே இருக்கும்….

சுகுமாரை பார்த்து பெருமைப்பட்டாள் மலர்….வேலுசாமி எப்போதும் போல் அவர் மீசையை நீவீக் கொண்டு ….என்னைய யாரும் ஏமாத்த முடியாது ஆமா…என்று சுகுமாரனை தட்டிக் கொடுத்து விட்டு சென்றார்…

கடைசி நாளான 31 தேதி சுருள் மீசையோடு பட்டு வேட்டி சரசரக்க, பட்டு சட்டை பளிச்சிட, அங்கவஸ்தரம் போட்டுக் கொண்டு, நெற்றியில் சந்தனத்தை இட்டுக் கொண்டு மாப்பிள்ளைக்கே உரிய தோரணையோடு அவன் பெற்றோர் உறவினரோடு வந்து நின்றான்….

அவன் மீசையை கூர்ந்து பார்த்த வேலுசாமி மணியா என்று  ஜாடை செய்தார்…

மணியனும் ஏதோ புரிந்ததுப் போன்று தலை ஆட்டிவிட்டு சுகுமாரனின் முகத்திற்கு நேராக போய் கூர்ந்து பார்த்தான்…

பின்பு வேலுசாமியை திரும்பி பார்க்க அவர் ம்.. என்று தலை அசைத்தார் …பட்டக் என்று சுகுமாரனின் உதட்டின் மேலும் மூக்கு துவாரத்தின் கீழ் உள்ள முடியை இழுத்துப் பார்த்தான்.. 

இதை சற்றும் எதிர்பாராத சுகுமார் வலியால் ஆஹா!😩 என்று கத்தினான்…

மனதிற்குள் கொலைக்கார பாவிங்களா! என்ன ஒரு ரெளடிதனம்… என்று மனதில் திட்டி தீர்த்தான்…

அவனுக்கு மட்டுமின்றி அங்கியிருந்த அனைவருக்குமே என்ன கூத்துடி இது மீசைய கூடவா இழுத்துப் பாப்பாங்க என்று பேசிக் கொண்டனர்🤦…மலர் அவள் அப்பாவை நினைத்து தலையில் 🤦அடித்துக் கொண்டாள்…

எப்போதும் போல் வேலுசாமி அவரது மீசையை நீவீக் கொண்டு…. சபாஷ்! மருமகனே!👏🏻👏🏻சபாஷ்!👏🏻👍🏻👌🏻👌🏻நான் வச்ச போட்டியில எல்லாதுலையும் ஜெயிச்சிடீங்க….ம்….என்னை யாரும் ஏமாத்த முடியாது என்று உறுமிக்கொண்டே மலர் சுகுமாரனுக்கு அனைவரின் ஆசிர்வாதங்களுடன் திருமணம் செய்து வைத்தார்….💑

திருமணம் முடிந்து அனைவரும் கோயில் சென்று சாமி கும்பிட்டு, மலரை புகுந்த வீட்டிற்கு அழைத்து சென்று விளக்கேற்றி சொன்னார்கள்… பிறகு புகுந்த வீட்டு சடங்குகள் முடித்து மறுபடியும் மலர் வீட்டிற்கு பயணமானார்கள்…

விருந்து உபசரணங்கள் முடிந்து சுகுமாரனின் பெற்றோர்கள் அவனையும் மருமகளையும், மூன்று நாள் கழித்து அவர்கள் வீட்டுக்கு அழைத்து செல்வதாக  வேலுசாமியிடம் கூறி விடைப்பெற்றனர்…

மதிய விருந்தெல்லாம் முடிந்து, வேலுசாமி ஊஞ்சலில் அப்படியே கண் அயர… சுகுமாரன் மலரை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று காற்றோட்டமாக இருந்த இடத்தில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தனர்…

சுகு! ரியலி யூ ஆர் கிரேட்👏🏻👏🏻👌🏻👌🏻👍🏻👍🏻 …எனக்காக சாகசமெல்லாம் செய்ஞ்சு 👍🏻 எங்க அப்பா வச்ச போட்டியில எல்லாம் வின்👍🏻 பண்ணிடீங்க💪🏻  ஐயம் சோ ப்ரெளட் ஆப் யூ 😍😘என்று அவன் கன்னத்தை அவள் இரு கைகளால்  ஆசையாக கிள்ள கையோடு வந்தது இரண்டு பக்கம் ஒட்டி வைத்திருந்த சுருள் மீசை..

ஆஹா! என்று மலர் அலற 😲😳😱மணியன் என்ன பாப்பா என்று ஓடி வர அவன் கால் பட்டு அங்கியிருந்த இளவட்ட கல் உருடோடியது… அதை ஆச்சிரியமாக பார்த்தாள் மலர்…

சுகுவோ என்ன மணி அண்ணா இந்த தெர்மாகோல் கல்ல நீங்க இன்னுமா இங்கியிருந்து அப்புரப்படுத்தலையா என்று கேட்க…. தெர்மாகோல் கல்லா😲😳..என்று மறுபடியும் அலறினாள் மலர்…

தன் மகளின் அலறல் சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த வேலுசாமி கண் விழித்தார்…..சத்தம் கேட்ட திசை நோக்கி நடந்தார்….

ஐயோ! மலர் கத்தாத😖 உன் சத்தத்துல மாமா எழுந்துடப் போறாரு என்று அவளை ஆசுவாசப் படுத்தினான் சுகு….

தம்பி இதுக்குமேல எதையும் மறைக்க முடியாது…. பாப்பாகிட்ட உண்மைய சொல்லிடலாம் என்றார் மணியன்…

உண்மையா என்ன உண்மை சொல்லு சுகு என்று மலர் கேட்க…சுகு மேலே 🙄வானத்தை பார்த்தான் ..

கொசு வத்தி சுருள் சுருளாக சுத்தியது🕸….வேற என்ன ப்ளாஷ்பேக் தான்…🤷🏻

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நின்னயே ரதியென்று ❤ (பகுதி 9) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    காதல் கண் கட்டுதே ❤️ (அத்தியாயம் 3) – நேத்ரா பாலாஜி