in ,

காணோம் (சிறுகதை) – அர்ஜுனன்.S

எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“என்ன டாக்டர்.. ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்திட்டு அப்படி ஷாக் ஆகுறீங்க..?” பதைபதைப்புடன் கேட்டாள் கவிதா.

கவிதாவும், அவளது கணவன் ரமேஷும் நீண்ட வருடங்களாக குழந்தைக்காக காத்துக் கொண்டிருந்தனர். ஒருவழியாக IVF சிகிச்சை ஆரம்பித்து, இரட்டைக் குழந்தைகள் என்று சொன்னதும் அவர்களுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. மாதந்தோறும் ஸ்கேன் செய்து பார்த்து வந்தனர்.

இந்த மாசம் ரிப்போர்ட்டை கொடுத்ததும் டாக்டரின் முகத்தில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் இருந்தது.

“ரெண்டுல ஒன்னை காணோம்..” என்றார் டாக்டர் மெதுவாக.

“என்ன சொல்றீங்க.. டாக்டர்..?”

கவிதாவின் இதயம் தடதட வென்று துடித்தது.

“உங்களுக்கு ரெட்டைக் குழந்தைகள் தானே சொல்லியிருந்தேன்..?”

“ஆமா..” ரமேஷ் வேகமாக பதில் சொன்னான்.

“இதிலே ஒரு குழந்தை..தான் தெரி..யுது..”

“என்னது.. ஒன்னைக் காணோமா..?” கணவன், மனைவி இருவரும் ஒரே நேரத்தில் கத்த…

அந்நேரம் டாக்டரின் அறைக்கதவை வேகமாக திறந்துகொண்டு வந்த நர்ஸ்.. “ஸாரி.. டாக்டர்.. ஸாரி மேடம்.. வேறொரு கவிதாவோட ஸ்கேன் ரிப்போர்ட்டை உங்ககிட்ட மாத்திக் குடுத்திட்டாங்க.. அவங்களுக்கும் இதே இனிஷியல் தான்.. வயசு மட்டும் வேற..” என்று சொல்லி சரியான ரிப்போர்ட்டைக் கொடுத்துவிடடு சென்றாள்.

அதைப் பார்த்த டாக்டர்.. “ரிப்போர்ட் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ரெண்டு குழந்தைகளும் ஆரோக்கியமா இருக்குது..” என்று சொன்னவர், “ஸாரி.. நானும் அந்த ரிப்போர்ட்ல உள்ள வயசைக் கவனிக்காம.. உங்ககிட்ட தவறான தகவலை முதல்ல சொல்லிட்டேன்..” என்று அசடு வழிந்தார்.

‘போன’ உயிர் திரும்ப வந்த சந்தோஷத்தில் மிதந்தனர் தம்பதியினர்.

எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விளையாட்டாய் ஒரு திருட்டு (சிறுகதை) – அர்ஜுனன்.S

    கொலையும் செய்வாள் (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி