in ,

காலத்தின் கொடுமை (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஊரில் நடைபெறும் தேர்த்திருவிழாவிற்கு வந்திருக்கும் ‘தேசிங்கு’…தன் தாயார் ‘சகுந்தலா’ உடன்… ஊரில் அமைக்கப்பட்ட திருவிழாக் கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தான்…

“தேசிங்கு…அங்கே பார்…” என்றார் சகுந்தலா.

அவர் குறிப்பிட்டு சொன்ன பக்கம் …இரு சிறுவர்கள் போவோர் வருவோரிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த தேசிங்கின் முகம் இறுகி சிவந்தது…வார்த்தைகள் வெப்பமாய் வெளியே வந்தது…

“எப்பதான் இந்தநாடு முன்னேறுமோ …? பிச்சைகாரங்க ஒழியவே மாட்டாங்களா…? இந்த வயசுலேயே பிச்சை எடுக்குதுங்க எல்லாம்… இதுங்களச் சொல்லி குற்றமில்ல … இதுங்களப் பெத்தவங்களச் சொல்லணும்.”

“தேசிங்கு… கொஞ்சம் பொறுமை. அந்த ரெண்டு குழந்தைகளையும் பார்த்த உனக்கு இரக்கம் வரலேன்னாலும் பரவாயில்ல … அதுகள உத்துப்பாரு.”

அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டு குழப்பத்துடன் அக்குழந்தைகளைப் பார்த்தவன், “அம்மா …இந்த குழந்தைகள் முகம்… நம்ம பக்கத்துக்குத் தோட்டத்து ‘சசி’யின் முகச்சாயல் தெரியுதே!”

“ஆமாம் … அவனுடைய குழந்தைகள் தான்”

“இப்படித் தெருவுல விட்டிருக்கும் அவனை என்ன பண்ணறேன்னு பாரு”

“ஒன்னும் பண்ண முடியாது… இரண்டு மாசத்துக்கு முன்னாடிதான் மாரடைப்பு வந்து போய்ச் சேர்ந்துட்டான்.’’

“என்னமா சொல்ற…?!”

“எல்லாம்…”காலத்தின் கொடுமை’…டா”

“விவரமா சொல்லுமா”

“ம் ..சொல்றேன்….20 வருசத்துக்கு முன்னாடி நடந்தது நினைவிருக்கா?”

“இருக்கு..மா …தீபாவளி சமயத்துல வெடிக்காத பாட்டாசுகளில் இருந்த கரிமருந்தை கொளுத்த, உடலில் தீப்பிடித்துப் பாதிக்கபாட்டன் சசி. அவனை அவுங்க அம்மா காப்பற்றி நல்லபடியா ஆளாக்கினாங்க. அப்புறம் நான் படிச்சி வெளியூர் போயிட்டேன்”

“ம்.. மீதி கதையை நான் சொல்றேன். சசியும் 12 ஆம் வகுப்பு வரை படிச்சான். அவன் அப்பா இறந்துபோக… விவசாயம் பார்த்துக்கொண்டே லாரி ஓட்டப் போனான். படிப்படியா குடும்பம் முன்னேறியது. சசியின் அம்மா அவனக்கு உறவுக்கார பொண்ணு ஒண்ணு பார்த்து கட்டி வச்சாங்க. நல்லா போயிட்டிருந்த குடும்பத்துல.. நாசமா போன “குடி” பழக்கம் வந்து சசிக்கு ஓடிக்கொண்டது. அவுங்க அம்மாவும் பொண்டாட்டியும் தினமும் திட்டிதிட்டிப் பார்த்து வெறுத்துப்போய் இருவரும் அரளிவிதை அரைச்சி குடிச்சிட்டு இறந்துட்டாங்க”

“அடக்கொடுமையே …..சரி …சசிக்கு என்ன ஆச்சு …?”

“அதுதாண்டா “காலத்தின் கொடுமை”. அம்மா, பொண்டாட்டி இரண்டுபேரும் இறந்த பின்னர்… ஊரில் உள்ள பெரியவங்க சசியைத் திட்ட…. மனம் திருந்தி வாழ்ந்து வந்தான். பிள்ளைகளை அவனே நன்றாகக் கவனித்து வந்தான். திடீர்ன்னு போன மாசம் ஒருநாள் இரத்த வாந்தி எடுத்தான்… நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னான். ஆம்புலன்ஸ்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போனாங்க… பரிசோதித்த மருத்துவர்கள் தூக்கிட்டுப் போகச் சொல்லிட்டாங்க. பாவம் பிள்ளைகள் ஊருக்குள்ள அனாதையா நிற்குதுங்க.”

“வேதனையான விஷயம்தான், சென்னையில எனக்குத் தெரிந்த காப்பகங்கள் இருக்கு… அங்கே இவர்களைச் சேர்த்துப் பார்த்துக் கொள்ள முடியும்”

“அத செய் முதலில்”

அருகில் வந்த சிறுவர்களை அணைத்த தேசிங்கு… அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தான். இன்று கிடைத்ததை எண்ணி முகத்தில் சிரிப்புடன் பறந்தனர் சிறுவர்கள், நாளை புதுவிடியல் பிறக்கும் என்பதை அறியாமலேயே.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 12) – முகில் தினகரன்

    ரெக்கார்டு டான்ஸ் (குறுநாவல் – பகுதி 1) – நாமக்கல் எம்.வேலு