in ,

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் ❤ (பகுதி 1) – சுஶ்ரீ

       2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

எங்க ஆபீஸ்ல வருஷம் ஒரு தடவை மேகசின் ஒண்ணு போடுவாங்க, இந்த வருஷம் நானும் விளையாட்டா ஒரு கதை மாதிரி எழுதினேன். என் பழைய காதலை எழுதியிருந்தேன். பலர் குறைபட்டுக் கொண்டார்கள், பாதில நிப்பாட்டிட்டேன்னு.

என் மனைவி கூட படித்து விட்டு, “ஓகோ இவ்வளவு நடந்திருக்கா, திருட்டுக் கொட்டு, ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி நம்ம முதல் இரவுல நடுங்கினீங்க? சரி சரி மேலே வனஜா கதை என்னாச்சு சொல்லுங்கோ நானும் தெரிஞ்சிக்கறேன்”

“ம்ஹூம் மாட்டேன், இப்ப சொல்லுவே, நானும் லூஸ் மாதிரி எல்லாத்தையும் சொல்லிடுவேன், அப்பறம் காலம் காலமா சொல்லிக் காட்டுவே எனக்கு தெரியாதா, சும்மனாச்சிக்கும் எழுதினேன், நீதான் என் முதல் காதலி, பிரியமான மனைவி எல்லாம்”

“அடேயப்பாடி, எனக்கு தெரியும் முன்னாலயே, ஒரு டைரில வனஜா, கண்ணே காதலியேனு ஏதோ கவிதையெல்லாம் எழுதி உங்க பீரோல பட்டு வேட்டிக்கு அடிலே மறைச்சு வச்சிருக்கறது தெரியாதா என்ன”

“அடிப்பாவி உன்னைப் போயி அப்பாவினு நினைச்சேனே, அந்த டைரி ஒண்ணுதானே பாத்தே?”

“கதை அப்படிப் போகுதா, வனஜா தவிர, இன்னும் எத்தனை? 25 வயசு உங்களுக்கு, நம்ம கல்யாணத்தப்ப, அதுக்குள்ளே அந்த ஆட்டமா? கல்யாணத்துக்கு அப்பறமும் ஏதாவது தொடுப்பு இருக்கோ? ஆபீஸ் டூடி ஆபீஸ் டூடினு மாசா மாசம் ஓடினேளே இதுக்குதானா?”

“அதெல்லாம் இல்லைடி, சும்மா டயம் பாசுக்கு எழுதினது அதெல்லாம். என் பால்ய சினேகிதன் விச்சுவை கேளேன், சொல்லுவான் என் ஒழுக்கத்தை பத்தி, எப்பவும் ரெண்டு பேரும் ஒண்ணாதானே இருப்போம்” சொல்லிண்டிருக்கும் போதே அந்த கடங்காரன் உள்ளே நுழைஞ்சிட்டான்.

“டே, பழி என்னடா வனஜாவைப் பத்தி எழுதிட்டே போல இருக்கு, ருக்கு, பத்மா பத்தியும் எழுதுடா சுவாரசியமா இருக்கும். கலைமகள், குமுதம், குங்குமம், விகடன்ல போடு” என்றவன், அப்பதான் என் மனைவியை பாத்தது போல, “தங்கச்சி நன்னா இருக்கயா, வேலையா இந்தப் பக்கம் வந்தேன் அப்படியே தலையை காட்டிட்டு போலாம்னு, வரட்டா, வரேண்டா நண்பா”

நழுவிட்டான் அந்தப் படு பாவி. என்னை மாட்டி விட்டுட்டு.என் மனைவி என்னைப் பாத்தா, “என்ன சாரே, உங்க பால்ய கால ஒழுக்கம் சந்தி சிரிக்குது?”

“அவனுக்கு பொறாமை நான் எழுதி பேர் வாங்கறதுல, அதான் வத்தி வச்சிட்டு போறான்”

“சரி, சரி பரவாயில்லை கல்யாணத்துக்கப்பறம், என் மேல எவ்வளவு பிரியமா இருக்கீங்கறதுதான் எனக்கு தெரியுமே, நேத்துக் கூட மல்லிப்பூவும், பிரேம விலாஸ் ஹல்வாவும், வாங்கிட்டு வந்தீங்களே. ஆனா ஒண்ணும் நடக்கலை அசதியா தூங்கிட்டீங்க” வெட்கப் புன்னகையோட சொன்னா.

“ஆமாம் இல்லை? இன்னிக்கு பூரா நான் ஃப்ரீதான்னு” பக்கத்துல போனா, “ஐய்யே ஆளைப் பாரு, போய் மீதியை எழுதுங்க. சுஜாதா சார், பாலகுமாரன் சார் மாதிரி என் வீட்டுக்காரரும் பெரிய எழுத்தாளர்னு பேர் வாங்கினா எனக்கும் பெருமைதானே”, சொல்லிண்டே ஓடிட்டா கிச்சனுக்குள்ளே.

இப்ப வருவோம் அந்த முதல் காதல் கதைக்கு. நானும் வனஜாவும. வெளி பிரகாரத்தை சுத்தி வந்தோம். எதிர்பாராத தருணம் ஆளில்லாத இடம் சட்னு தன் வலது கையால என் இடது கையை பிடிச்சிண்டா. கரண்ட் உச்சந்தலை வரை பாய்ந்தது. என்னை பிடிச்சிருக்கானு மெதுவா கேட்டா. பதில் சொல்லக் கூட வாய் திணறியது அவள் கையை இறுக்கினேன்.

யாரோ பின்னால் வர சத்தம் கேட்டு சட்னு விலகி நடந்தோம், கண்ணாலயே போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போயிட்டா. அன்னிக்கு ராத்திரி பூரா தூக்கமே இல்லை. இன்னிக்கு வனஜாவை பாத்து எதாவது கடிதம் எழுதி கொடுக்கணும் என்னென்னவோ யோசித்து எழுதி கிழிச்சு, திரும்ப எழுதி எனக்கு என்ன எழுதறதுனே தெரியலை.

என் எழுத்து வேற படு மோசம். கடைசியா நாலு வரி ஒரு வழியா எழுதியாச்சு. கண்ணே வனஜா ஐ லவ் யூ.நேத்து உன்னை பாத்ததுல இருந்து ஒரு வேலையும் ஓடலை. அடுத்த ஞாயிற்று கிழமையும் கோவிலுக்கு வருவயா.அன்புடன் xxxxx.

அவ்வளவுதான். அதை நாலா மடிச்சு ஒரு கவர்ல போட்டு வாரப் பத்திரிக்கை கல்கண்டு புக் உள்ளே வச்சு என் காலேஜ் பேக்ல வச்சிக்கிட்டேன்.

அம்மா, “என்னடா நேத்துல இருந்து ஒரே டென்ஷனா இருக்கே, ஏதாவது பரிட்சையா”

“ஆமாம்மா, அந்த மாதிரிதான்”

“பரிட்சை மாதிரியா? அது என்னடா புதுசா”

“உனக்கு புரியாது, அப்பறம் சாவகாசமா விளக்கம் சொல்றேன், என் லன்ச் டப்பா கொடு”

ஒரே பரபரப்புல புறப்பட்டா ஷூ கூட கால்ல நுழைய மாட்டேன்னுது, சைக்கிள் டயர்ல காத்து இல்லை, பரண்ல ஏறி பம்பை எடுத்து ஒரு வழியா காத்தடிச்சா, பரண் மேல ஏறினதுல டிரஸ் பூரா ஒட்டடை.சட்டையை மாத்திண்டு ஒரு ஜம்ப் பண்ணி சைக்கிள்ல ஏறி 10 அடி போகலை செயின் கழண்டுக்கிச்சு.

என்ன இப்படி இத்தனை தடைகள்? ஒரு நல்லது நடக்க பல தடைகளை தாண்டிதான் ஆகணும்னு நானே சமாதானம் பண்ணிக்கிட்டேன்.

மீனாட்சி காலேஜ்கிட்ட வரப்பவே லேட் ஆயிடுச்சு.மாணவிகள் எல்லாம் உள்ளே போயாச்சு. மனசு கனக்க காலேஜ் போனேன். லெக்சர் ஒண்ணுலயும் மனசு போகலை. ஏதோ நோட்புக் எடுக்கறப்ப கல்கண்டு புக் வெளில விழுந்தது. பக்கத்துல இருந்த நாராயணசாமி குனிந்து எடுத்தான்.

நான் பதறி அவன் கைல இருந்து பிடுங்கினேன். ஏண்டா, சங்கர்லால் கதை படிச்சிட்டு கொடுக்கறேண்டான்னான். நீ ஒண்ணும் கிழிக்க வேண்டாம், புரொபசர் சொல்லிக் கொடுக்கறதை ஒழுங்கா கவனினு சொல்லிட்டு புஸ்தகத்தை உள்ளே வச்சிக்கிட்டேன். இவனுக்கு என்ன ஆச்சுனு அவன் வினோதமா பாத்தான்.

சாயந்தரம் அவசர அவசரமா போனேன் மீனாட்சி காலேஜ் வாசலுக்கு, ம்ஹூம் அவளைக் காணோம். அந்த வாரம் பூரா ஓடிப் போச்சு ஏமாற்றம்தான்.

(அடுத்த பகுதி வரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கமலி பாட்டியும் விமலி பேத்தியும் 😜 (அலட்டல் 3) – ராஜேஸ்வரி

    காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் ❤ (பகுதி 2) – சுஶ்ரீ