in ,

ஈரமான ரோசாக்கள் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கூவம் ஆற்றங்கரையோர ஒரு குடிசையில் தான் எப்பொழுதும் கூச்சல் …தினக்கூலிகள் கணவன் மனைவி இருவரும் மது போதைக்கு அடிமையானதில் எழும் சண்டையைத் தடுக்க என்ன செய்ய முடியும் 15 வயது ‘ஜெயா’ என்ற அப்பாவி மகளால்.

கந்துவட்டிக்குப் பணம் கொடுத்து கறாராக வசூல் செய்யும் ‘விசாலாட்சி’க்கு கூட ஜெயாவைப் பார்த்துப் பரிதாபம் வந்தது …அவள் தனக்குத் தெரிந்த ஒரு கார்மெண்ட் கம்பெனியில் சேர்த்துவிட்டாள் …வீட்டுச் சண்டையிலிருந்து விலகிப் போன பின்னர்ச் சற்று நிம்மதி மூச்சு விட நினைத்த போது வந்தது வில்லங்கம் மேனேஜர் ‘பிரபு’ உருவில்.

திருமணம் முடிந்து குழந்தை இரண்டுக்கு தகப்பன் ஆனா பின்னரும் அடங்கவில்லை ஆசை …தன்னுடைய வீட்டு வேலைக்கு வந்தால் கூடுதல் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஜெயாவை வீட்டுக்கு அழைத்துச் சென்றார் …சில நாள் கூடுதலாக அங்கே வேலை செய்யும் போது அவரில் பாலியியல் சீண்டல் அதிகமானது …

இதை கவனித்த அவனது மனைவி …ஜெயாவை அழைத்து .. “நீ வேலைக்கு வரவேண்டாம் …அதே போலக் கார்மெண்ட்லேயேயும் உனக்குப் பாதுகாப்பு இருக்காது …உன் நல்லதுக்குச் சொல்றேன் புரிஞ்சிக்கோ “…என்று சொல்லி அனுப்பிவிட்டான் .

வேலை போன விரக்தியில் போன பாதை தெரியாமல் இரவு நேரம் நெடுஞ்சாலை ஓரம் தடுமாறி நடந்தாள் ஜெயா …இந்த நேரத்தில் இப்படி யார் ஒரு பெண் வருத்தைக் கண்ட திருநங்கை ‘சுகன்யா’ …ஜெயாவை தடுத்து நிறுத்தி முழுக் கதையும் அறிந்துக்கொண்டு…

 “பாப்பா..சின்ன வயசா இருக்க …நல்லவேளை என் கண்ணுல பட்ட ..இதுவே எவனாவது புரோக்கர் கண்ணுல பட்டு இருந்த சினிமாவுல சான்ஸ் வாங்கித் தரேன்னு சொல்லி கொத்திட்டுப் போய்க் குதறியிருப்பானுங்க ‘

 ஜெயா அழுவதும் சுகன்யா தேற்றுவதுமாக இருந்த பொழுது ..இரவு நேர ரோந்து பணிக்கு வந்த இன்ஸ்பெக்டர் ‘புனிதா’..வண்டியை நிறுத்தினார் …தவறான வழியில் போகாத சுகன்யாவை நன்கு அறிந்த புனிதா தனது காவல்துறை மிடுக்கை தளர்த்திக் கொண்டு விசாரித்தார்.

 பின்னர் ..ஜெயாவிடம் …இப்போ சுகன்யாவுடம் போயிட்டு காலையில வந்து என்ன ஸ்டேஷன்ல பாரு என்று சொல்லிவிட்டு ..சுகன்யாவைப் பார்த்துக் கண் சிமிட்டிவிட்டு கிளம்பினார் .

 பயத்துடன் காவல் நிலையத்தில் கால் வைத்த ஜெயாவை அழைத்த புனிதா ..ஒரு கவரைக் கொடுத்துப் பிரித்துப் பார்க்க சொன்னார் .

 மகளிர் பாதுக்கப்புக்கான தொண்டு நிறுவனத்தில் தங்கிக்கொள்ள ஒரு கடிதமும் …பள்ளியில் சேர்த்துவிட்ட கடிதமும் இருந்தது.

 ஜெயாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை …முட்கள் நிறைந்த செடியில் பூக்கும் ரோசாக்களிடம் ஈரம் இருக்கின்றது என்று எண்ணி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

 சாலையில் இருசக்கர வாகனத்தில் கம்பி கூண்டியில் அடக்கப்பட்டிருந்த கறிக்கோழி ஒன்று தப்பித்து வாகனங்களின் வேகங்களுக்குச் சிக்காமல் உயிர் தப்பி ஓடியது .

 ஜெயாவின் மனதில் நிம்மதி பிறந்தது . 

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பயணத்தின் வேளையிலே (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

    கனமழை (சிறுகதை) – கோவை தீரா