எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அமுதா
உள்ளேன் மிஸ்
காந்திமதி
உள்ளேன் மிஸ்
பாரதி
உள்ளேன் மிஸ்
ரேவதி
ஏன் இன்னைக்கு ரேவதி லீவா?, யாருக்காவது தெரியுமா என வகுப்பு ஆசிரியர் நிர்மலா மாணவிகளிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
பாரதி, இரண்டு பேரும் சேர்ந்து தானே வருவீங்க, ஏன் வரலை என்று உனக்கு தெரியுமா? எனக் கேட்க
என்னோட வந்து கொண்டிருந்தாள் மிஸ், அப்புறம் யாரோ ஒரு அண்ணன் கூப்பிட்டாங்கன்னா என்னை முன்னாடி போக சொல்லிவிட்டாள் என்றாள் பாரதி.
அந்தப் பையன் யாருன்னு தெரியுமா?
தெரியும் மிஸ்
யாருப்பா அந்த பையன் என்று ஆசிரியை கேட்க
எங்க தெருவில் தான் மிஸ் அந்த அண்ணன் இருக்கின்றார்கள்.
அப்படியா? சரி என சொல்லிவிட்டு தன்னுடைய கைபேசியை எடுத்து ரேவதியின் அம்மாவிற்கு அழைத்தாள்.
கைபேசியை எடுத்த ரேவதி அம்மா என்னங்க மிஸ் என கேட்க,
உங்க பெண் இன்னிக்கு பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை, உங்க தெருவில் இருக்கும் பையனுடன் வெளியே போனதாக பாரதி சொன்னாள் என ஆசிரியை தெரிவித்தார்.
ஓகே மிஸ், நான் என்னவென்று பார்க்கிறேன், என உடனே தன்னுடைய கணவருக்கு போன் செய்தார் ரேவதியின் அம்மா.
ரேவதியின் அப்பா தன்னுடைய நண்பரை அழைத்துக் கொண்டு அலுவலகத்திலிருந்து வேகமாக வந்து கொண்டிருந்தார்.
கொஞ்சம் வண்டியை நிறுத்து பா, அந்த மலைக்கோவிலுக்கு டூவீலர்ல ரெண்டு பேர் போறாங்க, அந்த பொண்ண பாத்தா உன்னுடைய பொண்ணு மாதிரியே இருக்குப்பா ..
அப்படியா யூனிபார்ம் போட்டு இருந்தாங்களா
இல்லடா கலர்.ட்ரெஸ் தான் போட்டு இருந்தாங்க..
அவள் கிளம்பும்போது பார்த்தேனே யூனிபார்ம் தான் போட்டிருந்தா
எதற்கும் போய் பார்ப்போம் என வேகமாக மலைக்கோவிலுக்கு இரண்டு பேரும் சென்று கொண்டிருந்தார்கள்.
மலைக்கோவிலின் அடிவாரத்தில் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மலைக்கு மேலே வேக வேகமாக ஏறினார்கள்.
மலை உச்சி கோவிலை அடைந்தவுடன் நண்பர் சொன்னது போலவே தன்னுடைய பெண் கலர் உடையில் வந்திருந்தது கையில் மாலையுடன் அந்தப் பையனுடன் நின்று கொண்டிருந்தாள்.
தன்னுடைய அப்பா வருவதை கவனிக்காமல் ரேவதி தன்னுடைய ஆண் நண்பருடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.
ரேவதியின் அப்பா அருகில் வந்தவுடன் ரேவதிக்கு கை கால் நடுங்கியது, அச்சோ அப்பா பார்த்து விட்டார்களே என்ன சொல்வார்கள் என்ற பயத்தில் இருக்க பளார் என கன்னத்தில் கன்னத்தில் அறைந்தார்.
என்னம்மா? என்று தன்னுடைய மகளைக் கேட்க சும்மா கோயிலுக்கு வந்தோம் அப்பா என்றாள் மகள் ரேவதி.
காலையில் யூனிபார்ம் தானே போட்டு இருந்தாய், கலர் டிரஸ்ல வந்திருக்க, கையில் இரண்டு மாலை வச்சிருக்கியே என்ன ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா எனக் கேட்டார் ரேவதியின் அப்பா.
அப்படி எல்லாம் இல்லப்பா, ஜஸ்ட் இவரு என்னுடைய பிரண்டு தான் என சொல்ல
ரேவதியின் அப்பா, வாய மூடு, இவன் சரியான ஒன்னாம் நம்பர் பொறுக்கி, இவன் ஏற்கனவே ரெண்டு பொண்ணுங்கள இது மாதிரி ஏமாற்றி கல்யாணம் பண்ணியிருக்கான் எனப் பேசிக் கொண்டிருக்க
அந்தப் பையன் நான் ஒன்னும் அப்படிப்பட்ட பையன் கிடையாது, உங்க பொண்ணுக்கு என்ன பிடிச்சிருக்கு அவதான் என்னை கல்யாணம் பண்ணனும்னா ஆசைப்பட்டாள் என சொன்னான்.
17 வயசு கூட ஆகல, பெண்ணை கடத்திட்டு போயிட்டான்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் என ரேவதியின் அப்பா சொன்னார்.
கம்ப்ளைன்ட் பண்ணிக்கோங்க, எனக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது உங்க பொண்ணுக்கு தான் அவமானம் என திமிராக பேசினான்.
நான் சொன்னேன் தானே, இவன் சரியான ஏமாற்று பேர்வழி, வா வீட்டுக்கு போகலாம் என தன்னுடைய மகளைக் கூப்பிட
ரேவதியும் அவனுடைய சுயரூபத்தைக் கண்டு அப்பா என்ன மன்னிச்சிடுங்க பா, தெரியாமல் தவறு செய்து விட்டேன். அம்மாவிடம் இதைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என அப்பாவிடம் அழுது கொண்டே கூற வா என தன்னுடைய மகளின் கையை பிடித்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார் ரேவதியின் அப்பா.
எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings