in ,

வாழ நினைத்தால் வாழலாம்!!! – அகிலா சிவராமன்

வாழ நினைத்தால் வாழலாம்…வழியா… இல்லை …ஊரிலே…என்ற பாடல் வரிகளை நாம் எல்லோருமே கேட்டிருப்போம்..

நம்முடைய வாழ்க்கையில் சில சமயங்களில் எதிர்பாராத நஷ்டங்களோ, இல்லை  தோல்விகளோ  இல்லை எதாவது ஒரு இழப்போ ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில் இருந்து வெளியே வந்து அமைதியான வாழ ஏராளமான வழிகள் இருக்கலாம். ஆனால்  வழிகளை சரியாக தேர்ந்தெடுத்து முறையாக கையாள விட்டால் நம்மால் பிரச்சனைகளில் இருந்து மீள முடியாது. 

அத்தகைய சூழ்நிலைகளில் கையாளக் கூடிய 10 வழிகளை இப் பதிவில் பார்க்கலாம்..

1. தற்போதைய நிலைமையை பொறுமையாக அலசி ஆராய வேண்டும்.

2. நமக்கு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும், எதை குறைக்க வேண்டும்/அதிகரிக்க வேண்டும் என்று யோசித்து அதற்கேற்ற தீர்வை காண வேண்டும்.

3. நாம் எடுக்கும் தீர்வால் எதிர்காலம் பாதிக்க படாமல் இருக்க வேண்டும்.

4. எடுக்கும் தீர்வை தற்காலிகமாக தீர்க்கும் வகையில் எடுக்காமல் நிரந்தரமான தீர்வை அளிக்கும் வகையில் எடுக்க வேண்டும்.

5. அவசர அவசரமாக தீர்வை எடுக்க கூடாது.

6. சில நேரங்களில் நாம் எடுக்கும் முடிவால் பாதகமான விளைவுகள் நேர்ந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம்மிடம் இருக்க வேண்டும்.

7. கனவு என்ற ஒன்று நம் எல்லோருக்குமே இருக்கும் ஆனால் நிஜ வாழ்க்கையை கனவோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது.

8. நம் மன அமைதி கெடும் வகையில் எந்த செயலையும் செய்ய கூடாது.

9. கடந்த காலத்தில் செய்த தவறை மீண்டும் திரும்ப திரும்ப செய்ய கூடாது.

10. நம்மை விட சிறந்தவர்களிடம் ஆலோசனை கேட்க தயங்க கூடாது. எப்போதும் உண்மையை ஒத்து கொள்ளும் மனப்பான்மை இருக்க வேண்டும்.

இவைகளை முடிந்த வரை பின்பற்றினால், நமக்கும் சிறப்பாக வாழ வழி கிடைக்கும்…

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கடி ஜோக்ஸ் – அகிலா சிவராமன்

    அமுதவிழா (சிறுகதை) – பவானி உமாசங்கர்