எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மீனா வெகுநேரமாக தன் மூக்கு கண்ணாடியை தேடிக் கொண்டிருந்தாள். எங்குமே தேடியும் அது கிடைக்கவில்லை.
பிறகு மகனிடம் சென்று, “டேய் பிரபு, என் கண்ணாடியை பார்த்தியா, ரொம்ப நேரமா தேடறேன் டா, ப்ளீஸ் கொஞ்சம் பாரேன்” என்றாள்.
பிரபு அம்மாவின் முகத்தை பார்த்துவிட்டு வெளியே காட்டி கொள்ளாமல் “அம்மா போம்மா, உனக்கு வேற வேலையே இல்லை, எப்ப பாரு எங்கேயாவது வெச்சிடுவ, எனக்கு வேலை இருக்கு, நீயே தேடிக்கோ” என்றான்.
மீனாவும் எல்லா ரூமிலும் அலசிப் பார்த்தாள். கிடைக்கவே இல்லை.
மறுபடியும் “டேய், டேய் பிரபு, கிடைக்கலா டா” என்றாள்.
அவன் வேகமாக எழுந்து வந்து “எம்மா, இப்படி படுத்தற” என்று சொல்லி விட்டு மீனாவை கைப்பிடித்து பெட்ரூமில் இருக்கும் முகம் பார்க்கும் பெரிய கண்ணாடியின் முன் நிறுத்தி, “அம்மா உன் முகத்தை இதுல பாரு, மூக்கு கண்ணாடி எங்க இருக்கு என்று தெரியும்” என்றாள்.
மீனா பார்த்தாள், பிறகு தலையில் அடித்துக் கொண்டு, “அடக் கடவுளே, நான் இத்தனை நேரம் கண்ல போட்டுண்டே தேடி இருக்கேனா, கஷ்டம்” என்றாள்.
அதுவரை சிரிப்பை அடக்கி வைத்திருந்த பிரபு ஜோராக சிரித்தான்.
“ஏண்டா, இதை எங்கிட்ட சொல்லவில்லை, உன்னை…..”
அதற்குள் பிரபு ஓடியேப் போய்விட்டான் அங்கிருந்து….
எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings