எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த தெருவில் மடிசார் கமலா மாமி வைத்தது தான் சட்டம். எல்லோருமே கமலா மாமி சொன்னால் அதற்கு மறுபேச்சு கூற மாட்டார்கள். அத்தனை பயம். பயம் என்பதை விட அந்த மாமிக்கிட்ட பேசி யார் மாட்டிப்பா என்ற எண்ணம் தான், எல்லோர் மனதிலும் இருந்தது.
ஒரு நாள் வெளியுரிலிருந்த வந்த ஒரு நபர் அந்த தெருவில் நின்று கொண்டிருந்த இந்த மாமியிடம் ஒரு பேப்பரை கொடுத்து அதிலிருக்கும் விலாசத்திற்கான வழி கேட்டார். இந்த மாமி வேண்டுமென்றே ஏடாகுடமாக கேள்விகளை கேட்கவே அந்த நபருக்கு கோபம் வந்து விட்டது.
இத பாருங்கோ மாமி, விலாசம் தெரிஞ்சா சொல்லுங்கோ. இல்லைனா தெரியலனு சொல்லிடுங்கோ.. அதை விட்டுட்டு லுசு மாதிரி தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேட்கிறேள், வயசுல பெரியவான்னு பார்க்கறேன் என்று ஜோராக கத்தினார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர் கத்தியதை பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும், மனதில் நல்லது, இந்த மாமி மூக்கை எவனோ ஒருத்தன் உடைத்தானே என்று நினைத்து சந்தோஷபட்டு கொண்டார்கள்.
இந்த மாமி, அக்கம் பககம் சுற்றி பார்த்து விட்டு, நல்லவேளை யாரும் பார்ககல, பார்த்திருந்தா நம்ம மூக்கு உடைந்திருக்கும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டு, அவனிடம் எனககு தெரியாதுப்பா, நீ வேற யார் கிட்டயாவது கேளு என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டாள். பாவம் மாமிக்கு தெரியாது ….. அவள் மூக்கு உடைந்து விட்டதென்று!!!!!!
எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings