எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தாத்தா அரை மணி நேரமாக எல்லோரையும் ராஜு வந்து விட்டானா, வந்து விட்டானா என்று கேட்டு கேட்டு நச்சரித்து கொண்டிருந்தார்.
அவருக்கு தினமும் இது தான் வேலை. 84 வயதாகிறது அவருக்கு. அவருடைய பையன் ரகு காலையிலும் பிறகு ஆபீஸிலிருந்து வந்த பிறகு மாலையிலும் ராஜுவை சிறிது நேரத்திற்கு வெளியே கூட்டி கொண்டு செல்வது வழக்கம்.
இந்த தாத்தா அவன் கிளம்பினதிலிருந்து வீடு வரும் வரை புலம்பி தள்ளிடுவார். கண் அவ்வளவாக தெரியாது. காதும் சரியாக கேட்காது.
வாசல் கேட் திறக்கும் சத்தம் வந்தாலே போதும், யாரு ராஜுவா? என்று மனைவியான கிரிஜா பாட்டியிடம் கேட்க ஆரம்பித்து விடுவார். பாட்டியும் கோபத்தில் ஜோராக கத்துவார்.
இதோ, ரகு வந்து விட்டான், கூடவே ராஜுவும் ஓடி வந்தான். பாட்டி தாத்தாவின் காதருகே சென்று, வந்துட்டான் உங்கள் செல்ல ராஜு என்றார்.
அவ்வளவு தான் எழுந்து உட்கார்ந்து கொண்டு ராஜு,,ராஜு வாடா என்று கத்த ஆரம்பித்து விட்டார்.
அதுவும் வேகமாக ஓடி வந்து தாத்தாவின் மடியில் உட்கார்ந்து கொண்டு நாக்கால் தாத்தாவின் முகத்தை நக்கியது. என்ன யோசிக்கிறீர்கள்? ராஜு யாரு என்றா?? ராஜு அவர்கள் வீட்டு நாய் குட்டி, தாத்தாவோட பெட்டுங்க…..
எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings