in ,

காதலில் பூத்த மலர் – அகிலா சிவராமன்

தினமும் ஒழிந்து கொண்டு, ஓரக் கண்ணாலே பார்த்து பார்த்து,

அவள் ஏறும் பேருந்தில் ஏறி அவளையே ரசித்துக் கொண்டு அவள் செல்லும் இடமெல்லாம் சென்றேன்!!

அவள் நடந்தால் நடப்பேன், நின்றால் நானும் நிற்பேன்; அவளின் ஒவ்வொரு அசைவிற்கும் நானும் அசைந்தேன்.

சூரியன் தோன்றுவதும் மறைவதும் எப்படி மாறவில்லையோ அதைப் போல அவளின் தோற்றமும் மாறவில்லை!!

ஆனால் அவளைப் பார்த்த பின்பு நான் நானாகவே இல்லை;  மனதிற்குள் ஏதோ ஒன்று அடிக்கடி வந்து படபடவென அடித்துக் கொண்டது.

பசியும் தூக்கமும் இல்லாமல் போய் விட்டது..

கண்கள் எப்போதும் அவளையே தேடியது;

அவளைப் பார்த்தாலே 1000 வாட் பல்பு போல் மனதிற்குள் ஒரு பிரகாசம்..

அவள் என்னை திரும்பி பார்க்க மாட்டாளா, பேச மாட்டாளா என்று ஏங்கி ஏங்கி தவித்தேன்!!

ஆனால், அவளோ மௌனத்தின் சிகரமாகவே இருந்தாள்…

அவளுக்கு என் மேல் காதல் இருக்கிறதா இல்லையா?? ஒன்றுமே புரியவில்லை..

நேரடியாக பேசலாம் என்றால் நிமிரவில்லை அவள் தலை..

அடி என் ரோஜாவே..நீ எப்போது என் முகம் பார்ப்பாய், எப்போது உன் புன்னகை மலரும் என்ற போராட்டம் மனதிற்குள்..

அன்று ஒரு நாள் தெரியவில்லை..சூரியன் எந்த திசையில் உதித்ததென்று!!

என்றுமில்லாத திருநாளாம் அன்று அவள் என்னை நோக்கினாள்…புன்னகையோடு!!

அவ்வளவுதான்..நான் இமயமலையில் இருப்பது போல் உறைந்து பாறையாகி விட்டேன்..

இத்தனை நாளாக, இதற்காகத் தானே தவித்தேனடி, என் அன்பே!!! என்று மனதிற்குள் கூக்குரல் இட்டேன்!!!

என் மனதில் அவள் பார்த்த அந்த ஒரு பார்வையிலேயே மலர்கள் பூத்து குலுங்கின…

வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட்டு இங்கும் அங்குமாகத் திரிந்தன..

பாலைவனம் மலர்வனமானது…

நான் என்னை அறியாமலேயே நடனமாடினேன் நடு வீதியிலே..

ஒரு மலர் சிரித்ததால்,  இத்தனை ஆனந்தமா???

மலர்ந்த அந்த மலரை பத்திரமாக என் இதயத்தில் வைத்திருக்கிறேன்..

செடியில் பூத்த மலரோ காயலாம்…ஆனால் காதலினால் என் இதயத்தில் பூத்திருக்கும் அந்த மலரோ என்றுமே காயாது!!!

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கீழ் போர்ஷன் வாடகைக்கு (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

    மழையும் பசியும்(ஒரு ஓப்பீடு) – அகிலா சிவராமன்