in ,

அழிந்துவரும் உலகம் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

உலகத்தில்  எங்கேணும்  ஓரிடத்தில்

          உயிர்மாய்க்கும்  போர்நாளும்  நடக்கிறது

பலம்தன்னை  வல்லரசு  நாடுகள்தாம்

          பார்முன்னே  காட்டுதற்கே  இப்போர்கள் !

குலமதத்துக்  காழ்புணர்வு  பகையாகிக்

          குலமழிக்கும்  போர்களின்று  நடக்கிறது

புலம்பிடிக்கும்  ஆசையினால்  எல்லைதாண்டிப்

          புரிகின்ற  போரெல்லாம்  உலகழிவே !

 

அறிவியலின்  வளர்ச்சியென்று  நாள்தோறும்

          அழிவிற்கே  வித்துகளை  இடுகின்றோம்

பொறியியலில்  அணுக்குண்டைச்  செய்வித்துப்

          போட்டுலகைச்  சாம்பலாக்கி  எரிக்கின்றோம் !

வெறியாகத்  தொழிற்சாலை  கட்டுவித்து

          வேகமாகக்  காற்றுதனைக் கெடுக்கின்றோம்

அறிவின்று  வளர்ந்ததுபோல்  உலகத்தில்

          ஆபத்தும்  வளர்ந்துளது  பலமடங்காய் !

 

புயல்காற்று  கடல்சீற்றம்  கரைதாண்டிப்

          பூமரங்கள்  கட்டடங்கள்  சாய்ப்பதுவும்

நயமான  ஓசோனைத்  துளையாக்கி

          ஞாலத்தை  வெப்பத்துள்  தள்ளுவதும்

இயற்கையினை  அழிப்பதனால்  வருவதுதான்

          இடிகின்ற  நிலச்சரிவு  பூகம்பம்

வயல்ஆறு  மலைகாட்டை  அழிப்பதனால்

          வாழுலகம்  அழிகிறது  நாளுமிங்கே !

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நினைவு நாள் (சிறுகதை) – மணிராம் கார்த்திக்

    அம்மா வீடு (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி